Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: யார் கடவுள்?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    யார் கடவுள்?

    என் தாயகமாம் இலங்கையின் மணிமகுடம் யாழ்ப்பாணம். யாழ்ப்பணத்தின் ஒரு வைரக்கல்தான் எனது ஊர் (மானிப்பாய்). எனது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம். 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை மைக்செட் திருடன் என்று எல்லோருமழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அதுக்கான காரணத்தைப் பலரிடம் கேட்டும் யாருக்குமே தெரியவில்லை. எனக்கோ ஆச்சரியம்! எப்படித் தெரியாமல் இருக்கும்? பலரிடம் கேட்டுப் பயனில்லை. இறுதியில் எம் ஊரின் 60 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் கேட்டேன். "தம்பி அப்போதெல்லாம் நம்ம ஊர் திருவிழாக் காலத்தில் கல கலன்னு இருக்கும். ஊரில் எல்லா இடமும் ஒலிபெருக்கி வைத்து மைக்செட்டில் பாட்டுப்போடுவார்கள். காலையில் நாலு மணிக்கு போட்டால் இரவு பத்து மணிக்குத்தான் நிறுத்துவார்கள். அப்படி ஒரு கும்மாளம்தான் தம்பி. ஊரில எல்லோருமே சந்தோசமாக இருப்போம். சின்னஞ்சிறுசில இருந்து பெரியவங்க வரை ஆனந்தமாக இருப்பார்கள். மார்கழி மாத்தில்தான் தம்பி திருவிழா நடக்கும். அதே மாதத்தில்தான் பள்ளி இறுதியாண்டுத் தேர்வும் நடக்கும் தம்பி. தேர்வில் தேறாவிட்டால் அவ்வளவுதான். அத்னால திருவிழாக்காலத்தில் மாணவர்கள் படிப்பதில்தான் கவனமாக இருப்பார்கள். அப்போ நான்தான் ஊர்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர்கள் படிக்க நினைத்தாலும் மைக்செட் சத்தம் அவர்களைப்படிக்கவிடாது. நான் எத்தனையோ தடவை சொல்லிப்பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. அப்பதான் ராமச்சந்திரன் என்னைச் சந்திதான். ஊரின்மேல் அக்கறையுள்ளவர்களில் ஒருத்தன்தான் அவன். அவனிடமும் இதுபற்றிப் பேசினேன். கேட்டுவிட்டு ஒரு புன்முறுவலுடன் போனான் தம்பி. அடுத்தநாள் காலையில் பாட்டிச்சத்தம் கேட்கவில்லை. என்னன்னு ஊரே அதிர்ச்சியாயிட்டுது. கோயிக் வாசலில் ஒரே கூட்டம். ஊரில் இருந்த ஒலிபெருக்கி, கோயிலிலிருந்த மைக்செட் ஒன்னையும் காணலை. யாரோ திருடிட்டாங்க.
    அப்புறம் ஊரில ஒருத்தன் சொன்னதை வைத்து ராமச்சந்திரன்தான் திருடினத்துன்னு கண்டு பிடிச்சாங்க. அவனைப் பொலிசில் குடுத்தாங்க தம்பி. பொலிசும் கோட்டில் நிறுத்தினாங்க. ஊர்ப்பிள்ளைகளின் படிப்புக்காகத்தான் திருடினேன் என்ற அவன் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மைக்செட் வைக்கும் நேரத்தை காலை 9 இலிருந்து மாலை 5 வரைன்னு கட்டுப்படுத்தினார். ஆனால் திருடின குற்றத்துக்கு அவனுக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை கொடுத்தார். அதற்கு அப்புறம் எல்லோரும் அவனை மைக்செட் திருடன்னுதான் கூப்பிடுறாங்க."
    வாத்தியார் சொல்லி முடிச்சதும் ராமச்சந்திரன் எனக்கு சாமியாத் தெரிஞ்சார். ஒவ்வொருத்தனுக்கும் இளவயதில் படிப்புத்தானே சாமி. அந்தப்படிப்பை கொடுக்கிறவனும் சாமிதானே. அப்படிப்பார்த்தால் ராமச்சந்திரனும் சாமிதானே. அன்றிலிருந்து இன்றுவரை அவர் எனக்கு சாமியாத்தான் தெரியுறார். அனால் ஊரிலிருந்து நான் கிளம்பும்வரை அவரை மைக்செட்திருடன்னுதான் கூப்பிடுறாங்க.
    Last edited by அமரன்; 02-03-2007 at 06:06 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நண்பர்களே கதைபற்றிய உங்க கருத்தைக்கூற மறக்காதீர்கள்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ஒரு குறும்படம் பார்த்த திருப்தி ஏற்பட்டது...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தன் மீது பழி பொருட்டல்ல என எண்ணி...
    செய்த நல்ல காரியம்....
    பெருமை பட வைக்கிறது...

    இது போல் நல்லவர்கள் பலர் எழும்பினால் நாடு முன்னேறும்...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மிக நெகிழ்வான ஒரு நிகழ்வை நேர்த்தியாய் சொன்ன நக்கீரனுக்குப் பாராட்டுகள்..

    கல்வி, குழந்தைகள், நோயுற்ற பெரியவர்களை இம்சிக்கும் ஓசைகள்
    பக்திக்காக என்றாலும் கண்டித்து விலக்கவேண்டியவை..

    அந்த வகையில் ராமச்சந்திரன் ஒரு நாயகர்...மெச்சப்பட வேண்டியவர்..
    Last edited by இளசு; 03-03-2007 at 07:14 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நன்றி நரன்
    இததா செல்லுவாங்க நல்லதுக்கு காலமே இல்லை
    பாருங்கள் ஊருக்காக தான் செய்தார் கடைசில் ஊரே அவறை அழைப்பது திருடன் இது கொடுமைதானே
    Last edited by மனோஜ்; 12-04-2007 at 02:39 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by மன்மதன் View Post
    ஒரு குறும்படம் பார்த்த திருப்தி ஏற்பட்டது...
    ஆமாம் எனக்கும் அதே போல் ஒரு உணர்வு
    மால்குடி டேய்ஸ் போல் ஒரு வித்தியாசமான நிகழ்வு
    ஜெயிப்பது நிஜம்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    பிறர் உயர்வினிலே தனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

    இது கண்ணதாசன் சொன்னது. அப்படிச் சொன்னதிற்கு இலக்கணம் அவர். அவருக்கு நன்றி பல.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இப்படியானவர்கள் ஒரு சிலர் இருப்பதனால் தான் இன்னமும் எல்லோருக்கும் பெய்கிறது மழை.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    யாரை அடக்கினாலும் ஊர் வம்பளப்பவரை அடக்கமுடியாது. தான் நல்லவரென்று சொல்ல இன்னொருத்தனை கெட்டவனென்று சொல்லிப்பெருமைப்படுவர். இதனை தடுக்கவந்தால் அந்த மருதடியானையே மோதகம் அவிக்க வைத்துவிடுவர் நம்மவர்.

    நல்ல ஒரு செய்தியைக்கூறியிருந்தீர்கள். வாழ்த்துக்கள் நரேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல சிந்தனை வளர இது ஒரு நல்ல பதிவு.

    நன்றி அருன்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by anpurasihan View Post
    யாரை அடக்கினாலும் ஊர் வம்பளப்பவரை அடக்கமுடியாது. தான் நல்லவரென்று சொல்ல

    இன்னொருத்தனை கெட்டவனென்று சொல்லிப்பெருமைப்படுவர். இதனை தடுக்கவந்தால் அந்த மருதடியானையே மோதகம் அவிக்க வைத்துவிடுவர் நம்மவர்.

    நல்ல ஒரு செய்தியைக்கூறியிருந்தீர்கள். வாழ்த்துக்கள் நரேன்.

    சூப்பர் கருத்து
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •