''வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்''
கவிஞர் தாரா பாரதியின் அற்புதமான வரிகள். விரல்கள் இல்லாவிட்டாலும் ஏன் கை கால் எதுவுமே இல்லாவிட்டாலும் சாதிக்க முடியும் என்று சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை தீபத்தின் கதை இது.
கதையல்ல... நிஜம்!
1982, டிசம்பர் 4. ஆஸ்திரேலியா, மெல்பர்ன் தேவாலயத்தில் பாதிரியார் உருக்கமாகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். ''துன்பம் எந்த வடிவில் எப்போது வந்தாலும் சகோதரர்களே! அதை இன்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்..!'' பிரசங்கத்தை முடிப்பதற்குள் துன்பம் இந்த வடிவில் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்...
அவர் மனைவிக்கு பிரசவ நேரம் அது. ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் செய்தி வந்தது. தலைப் பிரசவம் ஆயிற்றே..! ஆர்வத்துடன் ஓடிச் சென்றவருக்கு அதிர்ச்சி. தொட்டிலில் குழந்தைக்குப் பதிலாக... என்ன இது..? கை கால் எதுவுமின்றி சதுரமாக..? தலை மட்டும் இருக்கிறதே..? ஆனால் அவர் வாயிலிருந்து வந்த சொற்கள் ''இறைவனைப் போற்றுவோம்'' என்பதுதான் (சொன்னதைச் செய்பவர் போலும்). குழந்தையின் புன்னகை முகம் கண்ணீரை வரவழைத்தது!
சில நிமிடங்களில் வந்த மருத்துவரின் முகத்தில் குழப்ப ரேகைகள். என்ன சொல்லித் தேற்றுவது இந்தப் பெற்றோரை?
''டாக்டர் எனது குழந்தை...?''
''நீங்கள் தொட்டிலில் பார்த்தது உங்கள் குழந்தைதான்..''
''எதனால் இப்படி..?''
''எந்தக் குறிப்பிட்ட மருத்துவ காரணமும் இல்லை. மற்ற குழந்தைகளைப் போல கை, கால்களுடன் இருக்கும்படி செய்ய வேறு சிகிச்சையும் இருப்பதாகத் தெரியவில்லை... ஐ'யம் சாரி!''
''இது எத்தனை நிமிடங்கள் உயிருடன் இருக்கும் டாக்டர்?''
சில பரிசோதனைகளுக்குப் பிறகு டாக்டர் சொன்ன பதில் ஆச்சரியம் தந்தது...!
''உங்கள் கேள்வியில் தவறு இல்லை. இதுபோல மிக வித்தியாசமாகப் பிறக்கும் குழந்தைகள் சில நாட்களில் இறந்து விடுவது உண்டு. ஆனால், இந்தக் குழந்தை வித்தியாசமாக உள்ளது. கை கால் இல்லை என்பதைத் தவிர வேறு எந்தக் குறைபாடும் இல்லை. மூளை வளர்ச்சி, இருதயத் துடிப்பு, நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், பார்வை, கேட்கும் திறன் அனைத்தும் நார்மலாக உள்ளது. ஆயுள் பற்றி எந்தக் குறையும் இல்லை. நீங்கள் விரும்பினால் அவனை ஒரு நார்மல் குழந்தை போல வளர்க்கலாம். ஆனால், இறுதிவரை உங்கள் துணை தேவை. அன்றாட காரியங்களை யாருடைய உதவியும் இல்லாமல் செய்ய முடியாது.''
டழ்ஹண்ள்ங் ற்ட்ங் கர்ழ்க் அவனை நிச்சயம் ஒரு சாதனையாளனாக ஆக்கிக் காட்டுவோம்!'' என்று சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தார் டாக்டர். ''எனது குழந்தை சிகப்பாக இல்லை, அழகாக இல்லை, புத்திசாலியாக இல்லை, உயரமாக இல்லை'' என்று பெற்றோர்கள் குறைசொல்லும் உலகில் இப்படியும் ஒரு தந்தையா..?
அந்த வினாடி முதல் அந்தத் தாய் தந்தையரின் மூச்செல்லாம் சண்ஸ்ரீந் யன்த்ண்ஸ்ரீண்ஸ்ரீ தான். ''என்னவெல்லாம் இல்லை என்று பார்ப்பதை விட என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்'' என முடிவெடுத்தனர். ஆசையாய் வளர்த்தனர். நிக் பள்ளி செல்லும் பருவம் வந்தது. அட்மிஷனுக்காக பல பள்ளிக் கூடங்களை அணுகினர். கிடைத்தது ஒரே பதில் தான். ''நார்மலாக இல்லாத உங்கள் குழந்தையை எங்கள் பள்ளியில் சேர்க்க முடியாது. இதற்கு ஆஸ்திரேலிய சட்டம் உள்ளது தெரியுமா?''
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? மற்ற குழந்தைகளைப் போல் நிக்கை வளர்க்க வேண்டும் என்பது அந்தத் தாயின் லட்சியக் கனவாயிற்றே? கோர்ட் படி ஏறினார். எந்த வக்கீலையும் அணுகவில்லை. தானே வாதாடினார். அந்தத் தாயின் நியாயமான கருத்துக்களும் கண்ணீரும் சட்டத்தையே மாற்ற வைத்தது.. 'நிக்'கிற்கு ஒரு பிரபல பள்ளியில் இடமும் கிடைத்தது.
ஆர்வத்துடன் பள்ளி சென்ற நிக் மாலை கண்ணீருடன் திரும்பினான். அனைத்துக் குழந்தைகளும் தன்னை வித்தியாசமாகப் பார்ப்பதையும் கேலி செய்வதையும் அந்தப் பிஞ்சு உள்ளத்தால் தாங்க முடியவில்லை.... ஆனால், தாய் தந்தையரின் அறிவுரை அவனை மாற்றியது... ''இறைவன் படைப்பில் எப்போதும் ஒரு குறிக்கோள் (டன்ழ்ல்ர்ள்ங்) இருக்கும். உன் மூலமாக இறைவன் மற்றவர்களுக்கு நம்பிக்கை தர நினைக்கிறார். உன்னை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வதில்தான் உன் கவனம் இருக்க வேண்டும்'' என்ற அறிவுரை மனதில் பதிந்தது. அவனுள் இருந்த தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்தான்.
அடுத்தநாள் முதல் கேலி செய்பவர்களை அலட்சியப்படுத்தினான். என்ன அதிசயம்...! ஏகப்பட்ட புதிய நண்பர்கள் கிடைத்தனர். நிக் படிப்பில் படு சுட்டி! அதற்குப் பின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை பிடிக்க ஆரம்பித்தது!
இன்று நிக் ஒரு பி.காம். பட்டதாரி மட்டுமல்ல அனைவரும் விரும்பும் மிகச்சிறந்த நம்பிக்கைப் பேச்சாளர்.
''அன்புச் சகோதரர்களே! உங்களுக்குக் கிடைத்துள்ள வாழ்க்கையை, திறமையை ஏனோ தானோவென எடுத்துக் கொள்ளாதீர்கள். அதன் மதிப்பை உணருங்கள். உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குங்கள். நாம் வாழப் பிறந்தவர்கள்'' என்று கணீர் குரலில் உருக்கமாகப் பேசுவதைக் கேட்கக் காத்துக் கிடப்பது பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, பல கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்களும் தான்...!
நம்மில் பலர் கனவுகளும், இலக்குகளும் பற்றி யோசிப்பதே இல்லை. அல்லது எப்போதாவது யோசிக்கிறோம். ''என்னுடைய 28வது வயதில் எனக்கென ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்ட காரை ஓட்டிக்கொண்டிருப்பேன். பிரபலமான ஓப்ரா வின்ஃப்ரி டி.வி. நிகழ்ச்சியில் என்னை அழைத்துப் பேட்டி காணும் அளவுக்கு சாதிப்பேன். பல நல்ல நூல்களை எழுதி இருப்பேன்'' என்று தனது கனவினைப் பட்டியலிடுகிறார்.
ஒவ்வொருவரும் தனது பிறவியின் மகத்துவத்தை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகம் ''கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை'' (சர் அழ்ம்ள், சர் கங்ஞ்ள், சர் ரர்ழ்ழ்ண்ங்ள்) என்பது. பெயரே ஒரு உந்துதலைத் தருகிறதல்லவா?.
நிக் எப்போதும் எல்லோருக்கும் சொல்வது ''எதையும் விருப்பத்துடன், ஆர்வத்துடன், முழு முயற்சியுடன் செய்யுங்கள். வாழ்கின்ற வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக செய்யுங்கள். லட்சியக் கனவினையும் குறிக்கோளையும் நோக்கி சந்தோஷமாக உழையுங்கள்'' என்பதுதான்.
ஒரு பக்கம் கை ரேகை பார்த்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி செய்யும் கூட்டம் மாறவில்லை. மாறாக ஏறிக் கொண்டிருக்கிறது... மறுபக்கம் நிக் போன்ற சாதனை உள்ளங்கள்..!
''நிக்கின் வார்த்தைகள் மட்டுமல்ல வாழ்க்கையே நமக்கு ஒரு தூண்டுகோல் அல்லவா?
''மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். நான் வித்தியாசமாக இருக்கின்றேனாம். நான் அவர்களைப் பார்த்துச் சிரிக்கின்றேன். ஏன் இப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருக்கின்றனர்!'' என்கிறார் நிக்.
இது எப்படிங்க இருக்கு?
நிக் பற்றிய உண்மைக் கதையை என்னுடன் எனது வியாபார குரு திரு.குலின் தேசாய் (சிட்டி பேங்க் வைஸ் ப்ரெசிடெண்ட், நியூஜெர்ஸி, அமெரிக்கா) பகிர்ந்து கொண்டபோது நான் தூக்கத்தைத் தொலைத்தேன் எனக்குள் விழித்தேன் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்தத் துடித்தேன் எதுவும் முடியும் எனப் புதிதாய் உயிர்த்தேன்.
இதைப் படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு மாற்றம் வருவது நிச்சயம் என நம்புகிறேன்.
''இப்படி ஒரு குழந்தை பிறந்துவிட்டதே'' என்று அவனது பெற்றோர் அதை முடிவு என்று அஞ்சவில்லை. ''மற்றவர்களுக்கு ஒரு கேலிப் பொருளாக ஆகிவிட்டோமே'' என்று நிக் அதை முடிவு என்று எண்ணவில்லை.
நம்பிக்கையின் ஆரம்பம் சோதனையின் முடிவு!
சோதனைகள் வாழ்வின் முடிவல்ல சாதனையின் ஆரம்பம்!
நன்றி சிபி தமிழ்
மேலும் இவறது புகைபடம் தகவல் இங்கு
Bookmarks