சவத்துணி அவதாரங்களும் பக்த கோடிகளும்..
சவத்துணிகளில்
விழும் பிம்பங்களிலிருந்து
அவர்கள் அவதரிக்கிறார்கள்...
காட்டு இரைச்சல்
கருவிகளின் உதவியோடு
அருள்வாக்கு தருகிறார்கள்...
புத்தனாகவும்
கிறிஸ்துவாகவும்
தோற்றம் தருகிறார்கள்...
ராமன் மனிதனிலிருந்து
கடவுளானால்
இவர்களும்...
கிறிஸ்து நல்ல மேய்ப்பாளர்
என்றால்
இவர்களும் தான்...
அவர் ஆட்டை மேய்த்தால்
இவர்கள்
மக்கள் உருவில் இருக்கும் மாக்களை...
இப்படியான மாயாபுரி சொர்க்கத்திலிருந்து
எதார்த்த நரகலுக்கு வருகிறார்கள்...
பக்தர்களின் தயவால்...
எதார்த்த நரகத்திற்கு
வந்த பின்னும்
கடவுள் வேஷம் காக்கிறார்கள்...
சாயம் வெளுத்த நரியாய்
குரங்குத்தோல் உரித்த மனிதனாய்
ஒருநாள் ஆகிறார்கள்...
இருந்த போதும்
பக்தர்களின் பக்திக்கு
மட்டும் குறையே இல்லை...
என்ன செய்ய முடியும் அவர்களால்
மனிதத் தோல் உரித்து
வேறு எதுவோ ஆகிவிட்ட பின்னால்...
இப்படித்தான்
சவங்களும் மாக்களுமாய் சேர்ந்து
எதார்த்த நரகத்தை சொர்க்கமாக்கிவிட்டார்கள்...
Bookmarks