கணித கவிதை
நம் இன்றைய மக்களின் அறியாமைக்கும், நம் பழங்கால அறிவொளிக்கும், இப்பக்கம் ஒரு சான்று. இது போல் புதையுண்டு கிடக்கிறது எண்ணிலடங்காச் சான்றுகள்.
பொதுப்பணி பொறியியல் (எத்தனை பேருக்கு இது Civil Engineering என்று தெரியும் ?), கட்டிடக்கலை ( Structural Engineerin ), கட்டுமானக்கலை ( Architectural Engineering ), நவீன இயற்கணிதம் ( Modern Algebra ) போன்று பல "பெயர்"களிட்டு ( அதற்கு அவர்கள் patent வாங்கி) நாமும் அவர்கள் சொன்னதைக் கற்றிருப்பது ஞாபகமிருக்கும்.
கொடி கட்டிப் பறக்கும் இன்றைய நவீன அறிவியலின் ஆணி வேர் பிதாகரஸ் தேற்றம் ( Pythogorous theorem ). ஞாபகமிருக்கிறதா ?
கீழே உள்ள கவிதையைப் படியும்:
இயற்றியவர் : தமிழ் புலவன் என்று மட்டுமே தெரியும். ஆனால் இதற்க்குச் சமமான தத்துவத்தை பின்னால் ஒருவர் கூறி நானு(மு)ம் ஏற்றுக் கொண்டவர் பிதாகரஸ்.Code:".............................................. .............................................. ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி கூறிலே ஒன்றுதள்ளி குன்றத்தில் பாதிசேர்த்தால் வருவது கர்ணந்தானே...... .............................................. .............................................."
காலம்: தெரியவில்லை. ஓட்டுச் சுவடியில் கிடைத்தது.
விளக்கம்:
ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி கூறிலே ஒன்றுதள்ளி :
நீளத்தின் 8 ல் 7 பகுதி
குன்றத்தில் பாதிசேர்த்தால் வருவது கர்ணந்தானே :
உயரத்தில் பாதியைக் கூட்டினால் கிடைப்பது கர்ணம்.
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணத்தின் வர்க்கம் -- அடிப்பக்கத்தின் வர்க்கம் + குத்துயரத்தின் வர்க்கம்.
இது போன்று அறிவியலில் வரும் "பால்வீதி;" பற்றி முன்பே "வெள்ளிவீதி" என்று பாடி வெள்ளிவீதியார் என்றே பெயர் பெற்றவர் பற்றி தெரியுமா ? "தனிஊசல் தத்துவம்" ( Theory of Simple Pendulum ), கண்ணாடி ஊடகத்தில் ஒளி ஊடுருவாது என்ற தத்துவம், "எந்திர லாபம்" ( Mechanical Advantage ) போன்ற நவீன இயற்பியல் தத்துவங்கள்
எல்லாம் நம் சங்க காலப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
நன்றி: கன்னதாசன், மதுரை, கருத்து தினபூமி தீபாவளி மலர் 1998 ல் வெளியானது.
Bookmarks