Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: தேவையா "தினங்கள்"?!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    தேவையா "தினங்கள்"?!!

    ஏன் ராசா
    இன்னைக்குமா வேலை...
    ஆமாம் புள்ள...
    ஆரு தருவா சோறு..
    இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம்..


    அட்டை போடும்(ஒப்பந்த அடிப்படை)தொழிலாளி
    ஆதரவென்ன?!!!


    உழைப்பாளர் தினம்
    உண்ணாவிரத நாளா..
    அன்றாடங்காய்ச்சிகளுக்குமா
    கொண்டாட்டங்கள்..
    காலண்டரில் மட்டும் இருக்கட்டும்..
    சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை..
    அரசே உனக்கொரு வேண்டுகோள்..
    உன் ஊழியனுக்கு மட்டும்
    ஊதியத்தோடு விடுமுறை..
    மகிழ்ச்சி..
    உழைக்கும் வர்க்கத்திற்கு
    உண்ண ஒருவேளை உணவு?!!..


    தேவையா "தினங்கள்"?!! -தினக்கூலி.
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:07 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    புதியவர்
    Join Date
    29 Apr 2003
    Location
    tamilnadu
    Posts
    46
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அருமையா இருக்கிறது பூ அவர்களே...
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:07 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  3. #3
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    நான் நீட்டி முழக்கியதை சுருக்... + நச்...
    பாராட்டுக்கள் பூ..
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:08 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பூ...பூத்த கவிதை... அருமை.

    அரசாங்க காதுகள் மட்டும் எப்போதும் செவிடாக இருப்பது ஏன்?
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:08 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    அட!
    பூவுக்குள் ஒரு புயல் இருப்பதை நானறியேனே?
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:08 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    பூ ஜி!

    தினங்கள் மட்டும்தானா காரணம்? அரசு மட்டுமா காரணம்?

    பத்து நாட்கள் லாரி நிறுத்தப் போராட்டம் நடந்ததே.... தினக்கூலித் தொழிலாளர்கள்தான் அடிபட்டனர் -- வயிற்றில்.

    தொழிற்சங்கங்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம், பேரணி என்று போராடுவதாகச் சொல்லிக்கொள்கிறார்களே --- யாருக்கு வயிற்றில் அடி?
    இங்கும் தினக்கூலியே.

    ஆக Organised தொழிலாளர்கள் ஒன்றுகூடி, Unorganised தொழிலாளர்களை வயிற்றில் அடிக்கிறார்கள். அரசாங்கம், ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறது.

    ===கரிகாலன்
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:09 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    கரிகாலன் அண்ணன் மிக அருமையாய் சொன்னீர்கள்...

    பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:10 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முறைசாரா உடல் உழைப்பாளிகளின்
    குறை சொன்ன உண்மைக் கவிதை....

    பாராட்டு தம்பிக்கு....
    அன்றன்றுள்ள அப்பம் என வேதம் சொன்னது
    அன்றாடம் இடுப்பில் , தலையில் சுமை சுமந்தால்தான்
    அடுப்பில் கஞ்சி வேகும் என்று இவர்கள் வாழ்வு ஆனது....
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:10 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    எந்த ஒரு போராட்டமும் கடைசியில் தினக்கூலிகளின் வயிற்றில் தான் அடிக்கிறது..... போராட்ட முறைகளை மாற்றி அமைத்தால் மட்டுமே இவர்களின் பாட்டிற்கு வழி பிறக்கும்.....
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:11 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    பூ அவர்களே உங்களின் அதங்கம் உங்கள் வரிகளில் தெரிகிறது. மக்களுக்குத் தெரிந்திருக்கும் ஒரு அடிப்படை விஷயம் ஏன் அரசாங்கத்திற்குத் தெரியவில்லை. எல்லோரும் பணம் பண்ணவேண்டும் என்ற ஒரு குறிக்கோளிலேயே ஆட்சிக்கு வருகிறார்கள். அப்படி அவர்கள் இருக்கும்வரை தினத்தொழிலாளிகளின் கதி அதோகதிதான்.
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:11 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    விடுமுறை கொண்டாட்டங்கள்... வலியோர்க்கு..!
    விடுகதை திண்டாட்டங்கள்... வறியோர்க்கு...!


    முறைசாரா உழைப்பாளிகள் குறை என்று தீருமோ??!!

    இன்று தான் செய்தியில் பார்த்தேன்..

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமைதூக்கிகள் ஊதிய உயர்வு செய்யலாம் என்று இருந்தது..

    இப்போது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு 10% ஆக உயர்த்தக் கோரி நம் தற்போதைய தமிழக முதல்வர் கூறியுள்ளார்..

    ஆயினும் இவை முறைப்படுத்தப்பட்ட உழைப்பாளிகளுக்கு மட்டுமா என்ற ஐயம் என்னில் எழுகிறது..

    இந்த நடைமுறை முறையாக முறைசாரா தொழிலாளிகளுக்கும் எட்ட வேண்டுமென்பதே என் அவா..

    பாராட்டுகள் பூ அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பொறுமையாய் ஒருங்குறிக்கு மாற்றும் பாமகளின்
    அருமையான பணிக்கு அண்ணனின் அன்பும் ஆசிகளும்!

    செய்யும் பணி ஏதாயினும் , அதில் காட்டும் சிரத்தை
    செப்பும் செய்பவர் சிறப்பை!

    சிறப்பான பாமகளுக்கு எல்லாமே அமையும் சிறப்பாய்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •