Last edited by leomohan; 21-01-2007 at 08:02 PM.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது
சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது
பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான்
துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான்
அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான்
அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான்
அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது
ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார்
கோவிலுக்கு போனால் நீ ஆத்திக நாய் - பகுத்தறிவு எனக்கு
சாய்பாபாவுக்கு பாராட்டு விழா நேரமாச்சு போக
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
அண்ணி சீரியலில் அம்பிகா எதிர்த்தவீட்டு ராமோட ஓடிப்போயிட்டா
சித்தி சீரியலில் சிந்துஜா ரவியை வெச்சிருக்கா
மலர்கள் சீரியலில் மாளவிகா மதனோட கள்ளத் தொடர்பு
கொஞ்சம் ரிக்கார்ட் பண்ணுங்க சுமங்கலி பூஜைக்கு நேரமாச்சு
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
கதை எழுதுவாரு அண்ணாதுரை, வசனம் எழுதுவாரு கலைஞரு
ராஜபாட்டைக்கு ஒரு எம்ஜிஆர், ஹீரோயினியா ஜெயலலிதா
நகைச்சுவை நடிகரு நம்ம சோ, ரீலிஸ் பண்றவரு வீரப்பன்
ஸ்டைலுவுட விசயகாந்து, சே, கூத்தா போச்சுடோய் அரசியலு
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
ஓட்டுப் போட்டு உதை வாங்கி ஓடிவந்து
நாட்டு வெடிகுண்டை வைத்து நாட்டுப்பற்றை காட்டி
நாலு நாள் ஆஸ்பத்திரியில் அவதி பட்டு
மறுதேர்தல் அறிவிப்பை பார்த்து காயத்தை தடவிக்கொண்டேன்
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
பசிக்கிறது சாப்பாடு போடுங்கய்யா சொன்னவனை ஒன்னும் இல்லைப்பா என்று சொல்லி ஓட்டினேன்
கடைதெரு போகும் வழியில் ஆட்டோக்காரனிடம் 5 ரூபாய்கக்கு அரை மணி சண்டை போட்டேன்
ஓட்டலில் சர்வர் கொண்ட வந்த பில்லை டிப்ஸ் மிச்சப்படுத்த எடுத்து சென்று கல்லாவில் பணம் கட்டினேன்
ஓடிச்சென்று போத்தீஸில் கைக்குட்டையை அவன் போட்ட 150 விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி வந்தேன்
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
திமுகவை சாடினேன் அதிமுகவை ஏசினேன்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வசவு செய்தேன்
பொறுப்பற்ற மந்திரிகளை பொரிந்து தள்ளினேன்
தேர்தல் நாளு லீவு தானே என்று படுத்து தூங்கினேன்
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
11 மணி காட்சியில் அவளை பார்த்தேன் 3 மணி காட்சியில் காதல் சொன்னேன்
7 மணி காட்சியில் கலியாணம் செய்தேன் 10 மணி காட்சியில் குழந்தையும் பெற்றேன்
தெரியாமல் தொலைகாட்சி இயக்குனரிடம் என் கதையை சொன்னேன்
ஈஸி சேரில் பேரப்பிள்ளைகளுடன் தினம் 9 மணி என் கதை பார்க்கிறேன்
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
குமுதத்திற்கு நமீதாவின் இடுப்பு மட்டும் கண்ணுக்கு படுகிறது
ஆனந்த விகடனோ கருணாநிதியின் மஞ்சள் துண்டை மட்டும் எடுக்கிறது
கல்கியோ பதினெட்டாம் நூற்றாண்டை விட்டு வெளியே வர மறுக்கிறது
திரும்பி வந்த கதைகளால் என் வீட்டு கொல்லைபுறம் பெருக்கிறது
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
நண்பரே@!! கவிதைகள் அருமை... அரசியலை ஓங்கி சம்மட்டியில் அடித்தது போல இருக்கிறது....
எங்கே குறையென்று தேட முடியாதப்பா!! மீண்டும் தொடருங்கள்.....
நமக்காக ஒரு கடைசி கவிதை எழுதியிருக்கிறீரே!!! அருமைப்பா!!! என் பழைய கவிதை ஒன்றூ..............
சிலரது எச்சில்கள்
பத்திரிக்கைக்கு
அமிர்தமாகின்றன
எனது வியர்வைகள்
வீணாகிப் போகின்றன,,,,,,,,,,
Last edited by ஆதவா; 22-01-2007 at 01:51 AM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks