இனிய தமிழ் நெஞ்சங்களே...!!
தைப் பொங்கலை சுவைத்த கையோடு இன்னொரு இனிமையான செய்தி.. நமது மன்றத்தில் நாளுக்கு நாள் புதிய கவிஞர்களின் தோற்றம் கூடிக் கொண்டே போகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம். கவிஞர்களுக்கு ஆகாரமே ஊக்கம் தான், ஆனால் பல வேலைகள் காரணமாக நமது உறுப்பினர்கள் பலரால் அவ்வப்போது வந்து கருத்துக்கள் பதித்து ஊக்கப் படுத்த முடிவதில்லை (என்னையும் சேர்த்து தான்) அதனால், இந்த வருடம் முதல், மாதம் தோறும் சிறந்த கவிதைகளுக்கு போட்டி நடத்த தமிழ் மன்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஜனவரி மாதம் முடிந்தவுடன், ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதைகளையும் வரிசைப் படுத்தி (குறிஞ்சி மன்றத்தில்) ஓட்டெடுப்பில் வைக்கப் படும். அவற்றில் அதிக வாக்குகள் பெறும் கவிதை அந்த மாதத்தின் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப் படும். அதன் படைப்பாளி சிறப்பிக்கப் படுவார்.
இந்த மாதம் முதல் நிர்வாக பணியில் புதியவர்கள் சேர்க்கப் படுகிறார்கள், அவர்களுக்கு தகுந்த பொறுப்புகள் கொடுக்கப் படுகின்றன. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பொறுப்பை இளசு-விடம் ஒப்படைத்துள்ளேன், இன்னும் ஒரு சில நாட்களில் அதை அறிவிப்பார். அதில் இந்த போட்டிகளை நடத்தவும் ஒருவரை தனியாக நியமிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளேன்.
போட்டியில் கலந்து கொள்ள, கவிதைக்கான தகுதி பின்வருமாறு:
1) சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்
2) சரியான (தமிழ் யூனிகோட்) எழுத்துருவில் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்.
3) குறைந்தது 10 வரிகளாவது (அல்லது 25 வார்த்தைகள்) இருந்தல் வேண்டும்.
மூன்றாவது விதிமுறை; குறைந்தது எத்தனை வரிகள் இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்?
இது பற்றிய உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன. உங்கள் ஆலோசனைப் படி, போட்டியின் விதிமுறைகள் வகுக்கப் படும்.
நன்றி..
Bookmarks