நீ நடக்கும் சாலையிலே
அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
பாதம் பதித்த ஓர் இடம் நானும்
பதிக்க மாட்டேனா? என்று
நீ வசிக்கும் இடங்களிலெல்லாம்
அதிகமாக சுவாசிக்கிறேன் - உன்
சுவாசக் காற்றை நான்
சுவாசிக்க மாட்டேனா? என்று
நீ விழித்திருக்கும் நேரமெல்லாம்
நான் அலைகிறேன் என் கண்ணில்
நீ தெரியமாட்டாயா? என்று
நீ என்னைப் பார்த்து
கண் சிமிட்டும் போதெல்லாம் - நான்
யோசிக்கிறேன்
என்றும் உன்னில் - நான்
பதிய மாட்டேனா? என்று...
Bookmarks