சிகப்புக்கொடியும் மே ஒன்றும்..
அட்டைகள்
அடிமைகளிடம் இருந்து உறிஞ்சிய
ரத்தத்தில் கட்டின
மாடமாளிகைகளும்..
கூட கோபுரங்களும்..
கட்டி முடித்துவிட்டு
கீழே போட்டன
அழகாய் அதுகளின்
கையெழுத்தை..
ரத்தத்தில்
உருவாயின
சில கொடிகளும்..
கொடிகளுக்குத்தலைவர்களும்...
இருப்பவன் தரமாட்டான்..
வயிறு பசித்தவன் விடமாட்டான்..
என்ற தாரக மந்திரத்தில்
ஆரம்பிக்கப்பட்டன
சோத்துக்கட்சிகளின்
சிகப்புக்கட்சி...
நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டே
உயிர் துறக்கவேண்டும் என்று
ஆசைப்பட்டார் சிகப்புக்கட்சிகளின்
தலைவர்..
மலத்தால் கட்டப்பட்ட
சிறையில் இருந்து
விடுதலை தர இன்னொரு
தலைவர் புறப்பட்டார்..
உலக அடிமைகளின்
விடுதலைக்கு என்று
ஒரு குரல்
பொலிவியாவில் இருந்து..
சிகப்பு பற்றி
பல கீதங்கள்
இசைத்து
உணர்ச்சி ஊட்டியது
சிலியில் இருந்து
ஒரு குயில்..
ஆங்காங்கு..
ஆயிரமாயிரம் தலைவர்களும்
லட்சக்கணக்கான
அடிமைகளும் ஒன்று சேர்ந்து
உருவாக்கின
சிகப்புகொடி..
இப்படி உருவான வரலாறு
ஏகாதிபத்தியங்களின்
கூட்டுச்சதியால்
உடைக்கப்பட்டு சுக்கு நூறாக..
அதில் எஞ்சி
தொக்கிக்கொண்டு நிற்பது
மே ஒன்று..
Bookmarks