Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: 'தை' கவிதைகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0

    'தை' கவிதைகள்

    'தை' கவிதை இதழில் இடம் பெற்றுள்ள சில கவிதைகளை உங்கள் வாசித்தலுக்காக இங்கே கொடுக்கின்றேன். (நன்றி 'தை')

    பெறுதல்

    ஆயிரம் பேர்
    கூடியிருக்கும் அவையில்
    எனக்குப் பொருளுதவி செய்யாதே..

    விரும்பினால்
    என் குடிசைக்கு வந்து
    யாருமறியாமல் தந்து போ
    நீ
    தரவிரும்பியவற்றை..

    கனம் குறைந்திருந்தாலும்
    மனம் நிறையும் எனக்கு..

    உன்னுடைய அன்பளிப்புகளை
    ஆலய முற்றங்களில்
    கூனிக் குறுகிப் பெற்றுக்கொள்ள
    வலிக்கிறது..

    நான் ஏழையென்பதைப்
    பிரகடனப்படுத்துவதற்காகப்
    பொதுக்கூட்டங்கள்
    போடாதே..

    பசியை விட
    பட்டினியை விட
    சாவைவிட கொடுமையானது
    எல்லோரையும் விட
    நான் தாழ்ந்திருப்பதாய்
    நீ
    அறிவிப்புக் கூட்டம் நடத்துவது..

    எனக்குத் தருவதாய்
    சொல்லிக் கொள்கிறாய்
    ஆனால்
    தருவதை விட
    அதிக மதிப்புள்ள
    கர்வத்தைப் பெற்றுக் கொள்கிறாய்..

    போகும்போது அதற்காக
    சின்னதாய்
    ஒரு நன்றியாவது
    சொல்லிவிட்டுப்போ..

    -------------------------------------------- சேவியர்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கிராமப் பேருந்தில்
    இடித்தவனை
    நான் முறைத்தேன்

    நகரப்பேருந்தில்
    இடித்தவன்
    என்னை
    முறைத்தான்

    -------------------------------- அமுதினி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    உன்னிடம்
    ஒரு சாவிகூட
    இல்லையென்றால்
    அதன் பொருளென்ன
    தெரியுமா?

    உன் சாவிக்குக்
    காத்திருக்கும் பூட்டில்லை

    உன் பூட்டு
    தொங்குவதற்கு
    ஒரு தாழ் இல்லை

    நீ தாழிட்டுப் பூட்ட
    ஒரு கதவு இல்லை

    கதவிடப்பட்ட
    ஓர் அறை இல்லை

    அறை அமைந்த
    ஓர் இடம் இல்லை

    இத்தனை பெரிய
    பூமியில்
    உனக்கு
    ஓர் இடம் இல்லை

    ---------------------------------- மகுடேசுவரன்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    தன் தோழியின்
    நாக்கை நீட்டச் சொல்லி
    நாக்க நீட்டாதே வாக்கப் படாதே
    குண்டாஞ் சட்டியில குட்டி போடாதே
    என்று கைகொட்டிச் சிரித்த சிறுமி
    வளர்ந்து பெரியவளானாள்.

    எதையெல்லாம்
    தோழியைச்
    செய்யாதே என்றாளோ...

    அதையெல்லாம்
    இவள் செய்தாள்
    இல்லை..இல்லை..
    செய்ய வைத்தோம்.


    -----------------------இரத்தின புகழேந்தி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by மன்மதன் View Post
    உன்னிடம்
    ஒரு சாவிகூட
    இல்லையென்றால்
    அதன் பொருளென்ன
    தெரியுமா?
    மடியில் கனமில்லை...!!!
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன் View Post
    உன்னிடம்
    ஒரு சாவிகூட
    இல்லையென்றால்
    அதன் பொருளென்ன
    தெரியுமா?

    உன் சாவிக்குக்
    காத்திருக்கும் பூட்டில்லை

    உன் பூட்டு
    தொங்குவதற்கு
    ஒரு தாழ் இல்லை

    நீ தாழிட்டுப் பூட்ட
    ஒரு கதவு இல்லை

    கதவிடப்பட்ட
    ஓர் அறை இல்லை

    அறை அமைந்த
    ஓர் இடம் இல்லை

    இத்தனை பெரிய
    பூமியில்
    உனக்கு
    ஓர் இடம் இல்லை

    ---------------------------------- மகுடேசுவரன்
    அட நம்ம ஊரு கவிஞரு....

    எல்லாகவிதைகளும் அருமை
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன் View Post
    கிராமப் பேருந்தில்
    இடித்தவனை
    நான் முறைத்தேன்

    நகரப்பேருந்தில்
    இடித்தவன்
    என்னை
    முறைத்தான்

    -------------------------------- அமுதினி
    இதை சற்று மாற்றி
    கிராமத்தில் கடன் கொடுத்தவனை
    நான் பின் தொடர்ந்தேன்

    நகரத்தில் கடன் கொடுத்தவன்
    என்னை பின் தொடர்ந்தான்
    இது எப்படி ?
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மன்மதன் View Post
    உன்னிடம்
    உன் சாவிக்குக்
    காத்திருக்கும் பூட்டில்லை
    வேறுபட்ட வரிகள், வித்தியாசமான சிந்தனை!

    அது தானே நல்ல ஒரு கவிஞனுக்குத் தேவை!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    எல்லாமே நல்ல நல்ல கவிதைகள்.. நண்பர் மனோஜ் எழுதியது உட்பட..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    மகுடேஸ்வரனின் ஒரு ஆனந்த விகடன் கவிதை என் மனதைத் தைத்திருக்கிறது. சரியான வரிகள் மறந்துவிட்டன. ஆனால் கருத்து கீழ்க்கண்டதுதான்!

    வாழ்ந்து கெட்டவனின் வீட்டை
    விலைபேசி முடிக்குமுன் உற்றுக் கேள்
    பின்கட்டில் மெலிதான விசும்பலை
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #11
    புதியவர் சிதம்பரம்'s Avatar
    Join Date
    04 Dec 2005
    Location
    உடுமலைப்பேட்டை
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    1
    Uploads
    0
    தை இதழ் இப்போது வருகிறதா?

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மிக அருமையான கவிதைகள்...
    ஒவ்வொரு கவிதைகளும் எளிமையான, செறிவு கூடிய வரிகள்...
    சமகாலத்தின் நடப்புநிலை, வரிகளில், சாட்டை வீசுகின்றன...
    Last edited by அக்னி; 23-11-2007 at 06:43 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •