padaippukkal patriya ennangal thatezhtthu theriamaiyal tamilenglishl solla anumathithal en pondrourukku uthaviyaha yerukkum.
நண்பரே...
உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்...
தமிழில் எழுதுவது சுலபம்..
இங்கே
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2
சென்று பொறுமையாக அறிந்துகொள்ளுங்கள்.
Last edited by அக்னி; 25-05-2007 at 03:44 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மன்றத்திற்கு மறைந்து வந்து... மன்றத்தின் செயல்பாடுகளை வேவு பார்க்கும் கூட்டத்தை என்னப் பண்ணுவது.
"துஷ்டனை கண்டால் தூர விலகு" என்ற பழமொழி உண்டு....
பிடிக்காத இடத்திற்கு வந்து வேவு பார்க்கும் வேலைகளை என்று தான் கைவிடுவாரோ... சிலர்.
விட்டுவிடுங்கள் அறிஞரே... காய்க்கும் மரத்திற்குத்தான் கல்லெறி விழும். சோதனைகள் தாண்டும் போதுதான் சாதனைகள் பிறக்கும்...
எறிபவர்கள் எறியட்டும். அவர்களுக்கு ஒரு சவால்.
நாம் சாதிப்போம்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
தங்களால் முடியாதவர்கள்தான்..,
எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்...
மன்றத்திற்கே பெருமை...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கட்டமொம்மனும் எட்டப்பனும் பிறந்தது நம் தமிழில் அல்லவா? நாம் கட்டப்பொம்மர்களாக இருப்போம். காவியம் படைப்போம்.
அன்பு, அகினி, அமரன் உங்களின் பதிவுகளுக்கு மிக்க நன்றி.
அன்று உங்கள் மூவரையும் வழிமொழிந்ததற்க்கு இன்று பெருமை கொள்கிறேன்.
நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஆமாம் நண்பர்களே.
படித்துவிட்டு உங்களிற்கு பிடித்த வசீகரித்த வரிகளை குறிப்பிட்டு அதற்கு விமர்சியுங்கள். எதிராண கருத்துக்களிருப்பின் எழுதியவர் மனதை காயப்படுத்தாமல் ஆரோக்கியமான முறையில் போட்டுவையுங்கள். வழங்கப்படும் பின்னூட்டங்கள் படைப்பாளிகளிற்கு ஊக்கமளித்து முன்னேற்றப்பாதைக்கு வழிவகுக்கவேண்டுமே தவிர கடமைக்கு செய்யப்பட்டதாக இருந்துவிடக்கூடாது.
பார்த்தீர்களா நண்பர்களே!!!.
அறிஞர்/நிர்வாகிக்கே பின்னூட்டமிட்டுவிட்டேன்.
சில திரிகளை ஆர்வமில்லாத காரணத்தால் படிக்காவிட்டாலும் தவறில்லை.
ஆனால் படித்து விட்டு பின்னூட்டம் இடாமல் போகாதீர்கள் நண்பர்களே.
பின்னூட்டம் என்பது வெறும் பாராட்டு வார்த்தைகள் அல்ல.
படைத்தவர் கருத்துக்கும் உங்களை கவரா விட்டாலும், தவறை சுட்டி காட்டுங்கள். முயற்ச்சிக்கு பாராட்டு தெரிவித்து. மேலும் முயற்ச்சி செய்ய உற்சாகம் தாருங்கள். இல்லையா கடைசியாக நக்கலாவது பண்ணுங்கள்.
படைத்தவர் கருத்துக்கும் நீங்கள் உடன்படாவிட்டாலும் அதை தெரிவியுங்கள்.
முக்கிய குறிப்பு முழு பின்னூட்டம் செய்கிறே என்று காட்ட முழு படைப்பையும் கோட் பண்ணி அருமை என்று ஒரு வார்த்தை அல்லது இரண்டு ஸ்மைலீஸ் போடுவதை தவிருங்கள்.
Last edited by அன்புரசிகன்; 20-08-2007 at 06:14 AM. Reason: எழுத்துப்பிழைகள்
ஓவியா அக்காவின் கருத்திற்கு நானும் வழிமொழிகிறேன். நிச்சயம் விமர்சனங்களே நல்ல படைப்பாளியை உருவாக்கும்.
அந்த ஆக்கப்பணியில் இனி மன்றத்து தூண்களோடு நானும் சேர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks