மன்றத்து நண்பர்களுக்கு முதலில் நன்றி.. என்னோட ரஷ்யாகாரி காதலுக்கு நல்ல பின்னூட்டம் கொடுத்தீர்கள்.. இதோ
அடுத்து..
நண்பர்களால் பல உதவிகள் நடக்கும்.. உபத்திரவங்கள்? அதிலும் அவர்கள் பங்கு பெறாமலே!!
2005 டிசம்பர் 5. ஞாயிறு.
திருப்பூரில் எப்போதுமே டிசம்பர் 6 ஒட்டிய வாரங்களில் பதட்டமிருக்கும்.. காவல் கெடுபிடி அதிகமாக இருக்கும். அல்லா
கோயில்களிலும் ஹிந்து மசூதிகளிலும் இறைவனுக்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கும்ம்.. காரணம் சொல்லவேண்டியதில்லை.
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம்.. அதனால்தான்.
அப்படிப்பட்ட பொன்னான வேளையில் சாயுங்காலமாக எனக்கு ஒரு போன்.. நண்பன் கதிர் (பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது) மறுமுனையில்..
அவன் கோயம்புத்தூரில் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறான். அதிகம் அவனைப் பற்றி
சொல்ல வேண்டியதில்லை. போன் செய்தவன் திடீரென்று " திருப்பூர்ல தாண்டா இருக்கேன் புது பஸ்டாண்டுகிட்ட வையிட்
பண்றேன். சீக்கிரம் வாடா!" என்றான்.
அவன் திருப்பூருக்கு வருவது அது முதல்முறையல்ல.. நிறையமுறை வந்திருக்கிறான். எப்போது வந்தாலும் அந்த பாழாப்
போன புது பஸ்டாண்டிலேயே காத்திருப்பான்..
அன்று வருவதாகச் சொன்னதால் நான் கிளம்பிச் சென்றேன் புது பஸ்டாண்டுக்கு. அங்கே போலீஸ் கூட்டம் மக்களைவிட
அதிகமாக இருந்தது.. எனக்கு எந்த பயமும் இல்லை. வரவேண்டியவன் அங்கே இல்லை. அதனால் கொஞ்சம் துலாவினேன்..
அவன் அங்கு இல்லை.. ஒருவேளை பஸ் வர வர போன் செய்திருக்கலாம். காத்திருந்தேன். காத்திருந்ததோடில்லாமல்
அங்குமிங்கும் அலைந்து துலாவுகையில் ஒரு ஏட்டு என்னை ஏறெடுத்துப் பார்த்தான்.
" டேய்! இங்க என்னடா பண்ற?" அவன் வார்த்தையில் மரியாதையில்லை.
" ஃப்ரண்ட் வரதா சொன்னுங்க; அதனாலதான் அவனுக்காக வெயிட் பண்றேனுங்க" இது நான்
" உன்னை இன்ஸ்பெக்டர் வரச் சொன்னார்; என்னன்னு கேளு"
" சார் நான் என்ன சார் பண்ணினேன்? "
" அய்யாட்ட வந்து சொல்லுடா!"
அவர் சொன்ன அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப பிஸியாக இருந்தார். ஊடாக இந்த ஏட்டு சென்று , " சார் இவன் அங்கெயும்
இங்கெயும் சுத்திகிட்டு இருந்தான். கொஞ்சம் டவுட். என்னன்னு விசாரிச்சா பெரிய இவனாட்டம் பதில் சொல்றான்." போட்டுக்
கொடுத்துவிட்டான். எனக்கு வேட்டு வைத்துவிட்டான்.
இன்ஸ்பெக்டர், " தம்பி! இங்க வா!" மரியாதை கலந்து.
"சார்"
" இங்க என்ன பண்ற?"
"ஃப்ரண்ட் வரதா சொன்னுங்க; அதனாலதான் அவனுக்காக வெயிட் பண்றேனுங்க சார்"
" எந்த ஊரு?"
"கோயம்புத்தூருங்க சார்"
"ஓஹோ! என்ன சப்ளை பண்றான்"
"சார் அவன் ஸ்டீல் கம்பனி வெச்சுருக்கான். அதுதான் சப்ளை பண்றான்"
"ரெம்ப புத்திசாலித்தனமா பேசற. அவன் வந்துட்டானா இல்லையா?"
"தெரியலை சார்"
"அவனுக்கு செல்லு கில்லி ஏதாவது இருக்கா?"
"இருக்குங்க சார்"
" சரி போன் போட்டு எங்க இருக்கான்னு கேளு.."
போன் செய்தேன்.................... " The Airtel you are trying to reach is currently switched off; please try later" னு ஒரு
அழகான பெண் குரல் கேட்டது...
ஆஹா!!! மாட்டவுட்டுட்டானே!! போலீசு நம்மள சந்தேகப்படுதே னு கவலைப் பட்டேன்.. இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.
" என்னப்பா! எங்க இருக்கான்?"
" சார் ! செல்ல ஆஃப் பண்ணிட்டான் சார்!"
" என்ன தம்பி! ஊருக்கு வரதா சொன்னவன் எப்படி ஆஃப் பண்ணுவான்? நீ இங்க வந்தே அரமணிநேரம் இருக்கும்ல... அந்த
நேரத்தில கருமத்தம்பட்டியிலிருந்தே வந்துர்லாமே!! பொய் சொல்றியா?"
" சார் இல்லீங்க சார்! எப்படியும் வந்துர்வான்..."
நேரம் போனது.... இரண்டு மணிநேரம். நின்று கொண்டே இருந்தேன்.. கால் வலி வேறு. இவனும் வருவதாகத் தெரியவில்லை..
போனும் எடுக்கவில்லை.. சரியான கோபம் அவன் மேல். கைக்கு மட்டும் கிடைத்தால் அடுத்த நாளே நான் ஜெயிலில்
இருப்பேன் கொலைக் கேஸுக்கு.
மெல்ல மெல்ல இன்ஸ்பெக்டரிடம் போய்,
" சார்! என்ன பிரச்சனைன்னு தெரியல. அவனக் காணோம். நான் வீட்டுக்கு போகணும் சார்"
" என்னப்பா! ஒருத்தன் வர்வான்னு சொன்ன. அப்றம் வரலீங்க்ற.. உன்மேல எனக்கு மைல்டா டவுட் வருதே!! நீ ஹிந்து வா
இல்லை முஸ்லீமா?
" ஹிந்துங்க"
" டிசம்பர் 6 என்ன தேதின்னு தெரியுமா? உங்க ஆளுங்கெல்லாம் எங்க? எங்க குண்டு வைக்கலாம்னு ப்ளான்
பண்ணியிருக்கீங்க.. (சிரித்துக்கொண்டே)
" சார்! நான் அப்படிப்பட்ட பையனில்லைங்க சார், இதப் பாருங்க என்னோட விசிட்டிங் கார்ட் (பர்ஸிலிருந்து உருவி) இது
என்னோட XXXX Bank Debit card, இன்னொன்னு XXXX Bank Debit card. ப்ரீதி ஆர்ட்ஸ் ங்ற பேர்ல அப்பாகிட்ட வேலை
செய்றேன். பெரிய நிறுவனம். நீங்க வேண்ணா வந்து கேளுங்க. (textiles Field ல எங்கப்பா திருப்பூர்ல ரொம்ப பிரபலம்). நான்
எங்கயும் யாருகிட்டயும் வேலை செய்யல.. என்ணோட சொந்த தொழில் "
இன்ஸ்பெக்டர் எல்லத்தையும் பார்த்தார். " சரி நம்ம நார்த் ஸ்டேசன்ல வந்து சொல்லீட்டு போ! போன் நம்பர் கொடு! என்று
எழுதி வாங்கிக் கொண்டார்.
போகும்போது, "தம்பி! இந்தமாதிரி தேவையில்லாம் சுத்தாத.. உன்ன உன்னோட ஃப்ரண்டு மாட்டிவுட்டான் பாத்தியா!! நீ நல்ல
நிலமையில இருக்க. கெடுத்துக்காத." என்று சிலபல அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தார்,
அப்பாடா போதும் போதுமென ஆகிப்போச்சு..
அதுக்கப்பறம் அவனே போன் பண்ணி " சும்மா சொன்னேண்டா " அப்டீன்னான்,,, எனக்கு கோபம் தலைக்கெறிப் போய் அவனைத் திட்டியதுடன் அவனோடு சுமார் 6 மாதகாலம் பேசவேயில்லை... இப்ப கொஞ்சம் சகஜம் ஆகியாச்சு..
Bookmarks