சிலருக்கு நிஜத்திலும் தான்
சிலருக்கு நிஜத்திலும் தான்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
உங்கள் தயவினை என் புதிய கவிதைகளிலும் காட்டுங்களேன்...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
வார்த்தைகளின் ஊடல் (குறும்பாத்தொகுதி)
உன்வீட்டுத்தோட்டத்தில் புதர்மறைவில் பூத்துள்ள ரோஜா நான்
வாடி உதிர்வதற்குள் உன் கண்ணில் படுவேனா,,??..
உன் நான்கெழுத்துப்பெயரிலிருந்து நிராகரிக்கப்பட்ட
அதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன
மீதி 243 தமிழ் எழுத்துக்களும்...
அன்று காற்றிலே உன் கண்களும் உதடுகளும்
தீட்டிக்கொண்டிருந்த ஓவியத்தைத்தான் இன்று
என் விரல்கள் தாளிலே தீட்டிக்கொண்டிருக்கின்றன கவிதையாக...
உன்னைப்பற்றி கவிதையெழுதும்போது மாத்திரம்
வார்த்தைகள் விலகியே நிற்கின்றன
ஒன்றையொன்று கட்டிக்கொள்ளவைத்து வசனங்களாக்குவதில்
போதுமென்றாகிவிடுகின்றது எனக்கு...
உன்னுடைய வசீகரமான உதட்டில் புன்னகையைப் பார்த்தபோதுதான்
எனக்கு அது நினைவுக்கு வந்தது
நீண்டநாளாக பூக்காத அந்த ரோஜாச்செடி அன்று காலையில்தான்
பூத்திருந்தது...
Last edited by மதுரகன்; 10-01-2007 at 05:00 PM.
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
தவிப்புகள்
இறந்தகாலத்தில் மறைந்து போன அந்திப்பொழுதுகளின்
ஓர் ஓரத்தில்
கேட்பாரற்றுக்கிடக்கின்ற இருண்ட வனாந்தரமொன்றில்
வழிதெரியாத குகை ஒன்றினுள் நினைவிழந்து விழுந்துவிட்டேனா...
கோமா நிலையில் கோடிக்கணக்கான வருடங்களை
கழிக்கவென்றே உன் இதயத்துள் குதித்துவிட்டேனா...
உன் நினைவுகளின் பாதைகளின் முக்கிய திருப்பங்களில்
தொலைந்துவிட்டேனா...
ஒட்சிசன் வாயுவில் முக்குளித்த முதல்மனிதன்
நான்தான் போலும்
உன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை
தணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட
காரணமென்ன...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
தயவு செய்து என் புதிய பதிப்புகளையும் விமர்சியுங்கள்...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
அழாதீங்க நண்பா
நேரம் இருப்பின் கண்டிப்பா விமர்சனம் வரும்....,
இப்ப கொஞ்சம் பிசி.........
அருமை
பாரட்டுக்கள்
தொடரவும்
அப்படீனு போடவா.......நான் இந்த மாதிறி சிக்கன விமர்சனம் எழுதுவது மிகவும் குறைவு.....நேரமிருப்பின் விமர்சனம் போடுகின்றேன்
வணக்கம்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks