என்னவனே!
காட்சி தர மறுக்கும் கடவுள் நாடி ஓடுகிறாய்!
நட்பு தர மறுக்கும் நண்பனை நாடுகிறாய்!
உன்னைவிட்டு ஓடும் சமூகத்தை தேடுகிறாய்!
நீ தேடுவதில் சுகம் காணுகிறாயோ?
உனைத்தேடி வருகின்றான் சூரியன்!
கூரைக்குள் மறைகின்றாய்!
மழை சீண்ட வரும்போது
குடை கொண்டு தவிர்க்கின்றாய்!
அலை தீண்ட வருகையிலே
கரைதேடி விரைகின்றாய்!
காதல் தர நான்வந்தேன்
என்னை நீ புறக்கணித்தாய்!
விரும்பி வரும் எதையும் நீ விரும்புவதில்லையோ?
ஆகையால்
நான் தொலைய விரும்புகிறேன்
நீ தேடி வருவாய்தானே?
Bookmarks