தள்ளாடி நடந்தான் அவன்,
நானும் நடந்தேன்,
அவன் தானே நடக்கும்வரை.
கேள்விகள் கேட்டான் அவன்,
கனிவுடன் பதிலளித்தேன்,
அவன் தெரிந்துகொள்ளும் வரை.
வேண்டியவைகள் செய்தேன்,
அவன் வேண்டிக்கேட்காத முறையில்...
இவை அவன் மழலையின் காலம்...
இன்று நானும் மழலைதான்,
ஆம்..இரண்டாம் மழலைப்பருவத்தில் நான்.
தடுமாறும் கால்கள்,
திணறும் மொழிகள்,
திருந்தக்கேட்கா காதுகள்.
அவன் வெறுக்கிறான்
என் இரண்டாம் மழலையை.
நான் ரசிக்கிறேன்,
அவன் முதல் மழலை இன்னும் மாறாதிருப்பதை....
அன்புடன்,
காந்தி.
Bookmarks