Results 1 to 10 of 10

Thread: உரிமையுடன் வம்பிழு!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    உரிமையுடன் வம்பிழு!

    கொலுசு போட்ட குழந்தை என் முன்னால் ஓடியது!
    இதைக் கேட்டு என்னவளைப் பார்த்து நான் கேட்டேன்
    'நீ சிரித்தாயா?' - என்று!

    இதைக் கேட்டு, மகிழ்ச்சியில்
    உண்மையிலேயே சிரித்தாள் என்னவள்!
    சிரிப்பொலியைக் கேட்டு, நான் கேட்டேன்
    'நாய் குரைத்ததா?' - என்று!

    அப்போது காட்டினாயே ஒரு பொய் கோபம்!
    அது போதுமடி எனக்கு!
    இந்த ஜென்மத்துக்கு எனக்கு வராது அன்பு தாகம்!

    ----------- *x*------------

    சாப்பிட்டுவிட்டு 'தங்கமான ருசி' என்றேன்!
    அப்போது என் தலையில் முத்தமிட்டாள்!
    'நான் சொன்னது தண்ணீரை' என்றேன்!
    இப்போது அதே தலையில்
    செல்லமாய் குட்டினாளே ஒரு குட்டு!
    'இது தான் சூப்பர்' என்றேன், அவள் கன்னத்தைத் தொட்டு!

    ----------- *x*------------

    "ஏங்க, என் கவிதைய கேளுங்களேன்" என்றாய்!
    ஏதோ படித்தாய்! உண்மையிலே நான் கவனித்தது உன் கவிதையை அல்ல!

    கவிதை சொல்லும் போது கபடியாடிய உன் உதடுகளை!
    தொட்டில் ஆடிய உன் காது கம்மல்களை!
    எம்பி எம்பிக் குதித்த உன் புருவங்களை!
    கரகாட்டம் ஆடிய உன் கைகளை!

    கடைசியாய் உன் தொண்டைக் குயில் கூவாமல் நிறுத்தியபோது,
    உன் கண்கள் என்னை 'களவாணிப்பயல்! கவனிக்கவேயில்லை" என நினைத்த போது
    "எப்படிங்க இருக்கு?" என்றாய் எதிர்பார்ப்போடு!
    நான் பயங்கரமாகச் சிரித்துவிட்டு,
    "உன் காமெடிக் கதைவசனம் சூப்பர். கவிதையைச் சொல் இப்போது" என்றேன்!

    "போடா!" என்று பொய் கோபம் காட்டி திரும்பி நின்று,
    "கவிதையே கவிதை வாசிக்கிறதே என்று சமாதானம் செய்யாதே!" என்றாய்!

    அருகில் வந்து நான் சொன்னேன், "அடி அதிகப்பிரசிங்கியே!
    உன்னை என்றைக்கடி நான் கவிதை என்று புகழ்ந்திருக்கிறேன்?" என்றேன்!
    ஆச்சரியம் தாங்காமல் விழித்தாய்.

    "உன் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு இதிகாசமடி!
    உன் ஒவ்வொரு அசைவும் ஒரு காப்பியமடி!
    அப்படி இருக்கையில் உன்னை எப்படிடி ஒரே ஒரு
    கவிதையோடு ஒப்பிட முடியும்?" என்றேன்.
    "எப்படிடா இதெல்லாம்?" என்றாய் கன்னத்தைக் காட்டி!
    நேரம் காலம் தெரியாமல் என்னை வாட்டி!

    ----------- *x*------------

    பக்கத்து வீட்டுப் பையன், படி இறங்கிப் போகும் போது
    "ஆண்டி! நல்லாயிருக்கிங்களா?" என்று கேட்டுப் போனான்.
    இதை நான் கவனித்ததால்,
    "என்னங்க என்னை போய் ஆண்டிங்கிறான்? " என்றாய்.

    "உன்னை ஆண்டின்னா சொன்னான் அந்தப் பயல்?
    (யோசித்து விட்டு)சரி விடு.
    பாட்டின்னு உண்மையெ சொல்லாமே, ஆண்டின்னு சொன்னானே
    அதுக்கு ஆனந்தப் படு" என்றேன்!

    உன் கையில் இருந்த பேனாவை, என்னைக் குறிபார்த்து
    வேண்டுமென்றே விலக்கி வீசினாய்.
    தாவிப்பிடிக்கலாம் என நினைத்து தாவினேன்.
    ஆனால் பேனாவை பிடிக்க முடியவில்லை!

    அசட்டுத் தனமாய் உன்னை அண்ணாந்து பார்த்தேன்!
    "தாத்தாவெல்லாம் தாவி பிடிக்க முடியாது" என்றாய்,
    சிரிப்புப் பந்தல் போட்ட சின்ன இதழ்களின் வழியே!

    ----------- *x*------------

    "ஏங்க! Zooக்குப் போவலாமா?" என்றாய்!
    "அனிமல்ஸ் பாக்க எதுக்கு அங்கே போகணும்?
    இங்கேயே பார்க்கலாம்" என்றேன்.
    "எப்படி?" நீ கேட்க
    "இப்படி" என கண்ணாடியை உன் முகம் முன்னாடி காண்பித்தேன்!
    கோபித்துக் கொண்டு பூஜை அறைக்கு ஓடினாய்!

    சமாதானப் படுத்த சாமிதான் துணை என நினைத்து
    "கோயிலுக்குப் போகலாமா?" என்றேன்!
    "என் சாமி இங்கேயே இருக்கிறான்" என்றாய்!
    "ஓ.. தூணிலும் துரும்பிலும் இருக்கிறானென்றால் எங்கே காட்டு?" என்றேன்!
    கண்ணாடியை என் முகம் முன்னாடி காண்பித்தாய்!

    எனக்குப் புரிந்தது இந்த உறவின் புனிதம்!
    ஆனந்த வாழ்க்கைக்கு அன்பு தான் அடிப்படைக் கணிதம்!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by lenram80 View Post
    கொலுசு போட்ட குழந்தை என் முன்னால் !

    லெனின் நெறய அநுபவம் போலத் தெரிகிறதே!...

    காதல் என்பது மணத்திற்குபின் எவ்வாறு வருமென்பதைச் சொல்லிவிட்டீர்கள்..
    செல்லச் செல்லச் சண்டைகள், நம் கவிதை உவமைகளை வாழ்க்கையில் காட்டினால் எப்படியிருக்குமென்பதைச் சொல்லியிருக்கிறீர்கள்
    இந்த மாதிரியான வாழ்க்கைக் கவிதைகள் வானம் போலத்தான்.. முடிவில்லாதது.

    வசனங்கள் இங்கே தவிர்க்க முடியாததுதான் என்றாலும் சற்று நீளத்தைக் குறைத்திருக்கலாம்

    எனக்குப் புரிந்தது இந்த உறவின் புனிதம்!
    ஆனந்த வாழ்க்கைக்கு அன்பு தான் அடிப்படைக் கணிதம்!


    இந்த வரிகளை கொஞ்சம் கவனிக்கவும்.. காதலனுக்கு இந்த உறவு புரியாமலா இவ்வளவு விளையாடியிருக்கிறான்...
    ஒருவேளை மேலும் மேலும் புரிந்து கொண்டிருப்பானோ??

    அசத்தலான காதல்தம்பதியின் காதல் கவிதை அருமை..
    இக்கவிதைபோலவே நாளும் என்வீடும் உம்வீடும் இருக்க வேண்டுகிறேன்..

    வாழ்த்துக்களுடன்
    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    லெனின்

    அருமை, இனிமை.

    சம்சாரம் சங்கீதம் என்பது சொலவடை..
    இனிய குறும்பான கவிதை என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்..


    தொட்டிலாடும் கம்மல்கள்..
    பெண் = பல இதிகாசங்கள்..

    ரசித்து முறுவலிக்க வைத்த வரிகள் பல..


    பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    லென்ராம்,

    என்னம்மா இருக்கு கவிதை!!!!!, சும்மா கொண்ணு பொட்டுடீங்கா...

    வாழ்த்துக்கள்...


    ரசிச்சு படிச்சேன்...அத்தனையும் அன்பின் அமிர்தமாய் இருக்கு ராம்

    (முக்கியமா) பாராட்டுக்கள்...
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    புரிதல் காதலின் வெற்றி -- கவிதை தூள்

  6. #6
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நன்றி ஆதவா, இளசு, ஓவியா, நம்பிகோபாலன்
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் ப்ரியன்'s Avatar
    Join Date
    23 May 2005
    Location
    சென்னை
    Posts
    350
    Post Thanks / Like
    iCash Credits
    8,979
    Downloads
    29
    Uploads
    8
    வம்பு என்பதன் இன்னொரு பொருள் அறிவீங்களா?

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    சமாதானப் படுத்த சாமிதான் துணை என நினைத்து
    "கோயிலுக்குப் போகலாமா?" என்றேன்!
    "என் சாமி இங்கேயே இருக்கிறான்" என்றாய்!
    "ஓ.. தூணிலும் துரும்பிலும் இருக்கிறானென்றால் எங்கே காட்டு?" என்றேன்!
    கண்ணாடியை என் முகம் முன்னாடி காண்பித்தாய்!

    இந்தக் கவிதை எங்கு படிக்க நேர்ந்தாலும் எப்போதும் என்னை பரவசத்தில் ஆழ்த்தும் வரிகள். வாழ்த்துக்கள் லெனின்.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    அற்புதம் லெனின். மேலும் தொடரட்டும் கவிதை மழை.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #10
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    ஐஐஐஐஐஐஐயோ
    எவ்வளவு பாராட்டினாலும் தகும் லெனின்
    பாராட்டுக்கள்..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •