ஒரு நகைச்சுவை கதை...
ஒரு கல்லூரி மாணவன், அவனது அட்டவனையில் 2 மணி நேரம் எஞ்சி இருப்பதைக் கண்டு மிஞ்சியிருந்த வன விலங்கியல் பாடத்தை தேர்ந்து எடுத்தான்
இரு வாரங்களாக பாடம் நடந்தது நமது மாணவனும் ரொம்ப அக்கறையாக படித்ததான்... கடைசியில் தேர்வு நாளும் வந்தது... ஆசிரியர் வினாத்தாளை விநியோகம் செய்தார்...
அதை வாங்கி பார்த்தான் நம் மாணவன்.... ஒரே அதிர்ச்சி.... வினாத்தாளில் ஒரு கட்டம் இருந்தது அதற்குள் சில பறவைகளின் கால்கள் வரையப்பட்டிருந்தன... அதைக்கொண்டு பறவையை இனம் கண்டுபிடிக்கும்படி கேள்வி இருந்தது
நமது மாணவனுக்கு பதில் தெரியவில்லை..... நிமிடத்துக்கு நிமிடம் ஆத்திரம் தலைக்கேறியது
நேராக ஆசிரியரிடம் சென்று விடைத்தாளை வீசி மேஜையில் எறிந்து விட்டு " இதைப்போல ஒரு மோசமான பரீட்சையை நான் எழுதியதே இல்லை" என்று...
ஆசிரியர் அதை பார்த்து விட்டு நம் மாணவனிடம் சொன்னார் " தம்பி.... நீ ஒரு பதிலுமே எழுதவில்லை... நீ கண்டிப்பாக பெயில் தான்... சரி உனது பெயரை சொல் பார்ப்போம்" என்றார்...
நமது மாணவன் உடனே தான் அணிந்திருந்த பேண்டை முட்டிக்கு மேல் உயர்த்தி விட்டு காலை ஆசிரியரிடம் காட்டி " இப்போது நீங்கள் கண்டுபிடியுங்கள்" என்றான்
Bookmarks