28 / 1 / 1986 -
சலஞ்சர் விண்கலம் புறப்பட்ட 73ஆவது செக்கனில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் பலியாகினர்.
28 / 1 / 1986 -
சலஞ்சர் விண்கலம் புறப்பட்ட 73ஆவது செக்கனில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் பலியாகினர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
5-2-1971
அப்போலோ 14 சந்திரனில் தரையிறக்கியது..
Last edited by mgandhi; 06-02-2007 at 11:27 AM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
தகவலுக்கு மிக்க நன்றி காந்தி!
6-2-1931
மோதிலால் நேரு, இந்திய அரசியற் தலைவர், இந்தியப் பிரதமர், மறைந்த தினம்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
குழந்தைகளின் மாமா பிறந்த நாள் இந்தியாவுக்கு தெரியும்... ஆனால் இறந்த நாள்....
நன்றி... காந்தி
தேவநேயப் பாவாணர்,
7-2-1902
தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
8-02-1916 பண்டிட் ஜவஹர்லால் நேருவிற்கும், செல்வந்தரான ஜவஹர் முல் மகளான கமலாவிற்கும் திருமணம் நடந்தது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
தேவநேயப் பாவாணர் பற்றி தகவல் கொடுங்க காந்தி...
-------
நேரு மாமாவின் திருமண நாள்..![]()
![]()
தேவநேயப் பாவாணர் (1902-1981) அவர்கள் ஓர் ஒப்பரிய தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர். அவர் நாற்பதுக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்தவர். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ் வேராய் இருந்தவர். இவர் சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் படுபவர்.
தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் திரு ஞானமுத்து தோக்கசு(Stokes) அவர்களை கிறித்துவ மத குரவராய் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசு அவர்களின் பெற்றோர் திரு. முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார்.
1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு பாவாணர் அவர்கள் தம் புகழுடம்பை நீத்தார். மதுரையில் ஒரு கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் நெஞ்சாங்குலையில் வலி வந்து, குருதியழுத்தமும் மிகுந்து இறுதி நிலை அடைந்தார்
தேவநேயப் பாவாணர் ஆக்கிய நூல்கள்
1-இசைத்தமிழ் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
2-இயற்றமிழ் இலக்கணம் (1940)
3-உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950)
4-உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951)-
5-ஒப்பியன்மொழி நூல் (1940)
6-கட்டாய இந்திக் கல்வி கண்டனம் (1937) இசைப்பாடல்கள் 35 கொண்டது.
7-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968)
8-கட்டுரை கசடறை என்னும் வியாச விளக்கம் (1937)
9-கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952)
10-கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
11-சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது
12-சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943)
13-சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961)
14-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949)
15-தமிழ் இலக்கிய வரலாறு (1979)
16-தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954)
17-தமிழ் வரலாறு (1967)
18-தமிழர் திருமணம் (1956)
19-தமிழர் மதம் (1972)
20-தமிழர் வரலாறு (1972)
21-தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
22-திராவிடத்தாய் (1944, 1956) .
23-மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது.
24-திருக்குறள் தமிழ் மரபுரை (1969)
.
25-தொல்காப்பியக் குறிப்புரை (1944) (நிறைவு பெறாத நூல்)
26-பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966)
27-பழந்தமிழராட்சி (1952)
28-மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978)
29-முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953)
. 30-குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
31-வடமொழி வரலாறு (1967)
32-வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968)
33-வேற்சொற் கட்டுரைகள் (1973)
34- The Primary Classical Language of the World (1966)
35-The Lemurian Language and its Ramifications (1984)
36-இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள்
37-என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா. கு.பூங்காவனம். பக்கங்கள்??
38-கட்டுரை எழுதுவது எப்படி?
39-கடிதம் எழுதுவது எப்படி? (1984)
40-செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985)
.
41-பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா. இளங்குமரன் தொகுத்து.
42-பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது. தொகுப்பு. இரா. இளங்குமரன்
Last edited by mgandhi; 08-02-2007 at 05:47 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
10-02-1969
அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக முதன்முதல் பதவி ஏற்றார்
Last edited by mgandhi; 10-02-2007 at 06:38 AM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
தேவநேயப் பாவாணர் பற்றி அறிய தகவல்கள்
இந்த தகவல்களுக்கு நன்றி என்று சென்னால் மிகையாகாது மோகன் காந்ததி அவர்களே வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலிபட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
அருமையான தகவல்கள் காந்தி. தொடருங்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks