அன்பினை
தேடித்தேடி அலைந்தேன்
ஆசையுடன்
ஓடோடி வந்தேன்
இறைவனிடம்
கூட கேட்டேன்
ஈன்ற தாய்
அன்பு போல்
உன் அன்பு
என்னை மேலும்
ஊக்கமடைய செய்தது
எதையும் வெல்லும்
சக்தியை
ஏழையான எனக்குள்
எழச் செய்தது
ஐக்கியமானேன்
உன் அன்பில்
ஓடி விட
நினைக்கையில்
ஒளி வீசும்
உன் பார்வையால் தடுமாறி நின்றேன்
ஒளவையார் போல் மாறினும்
என்றும் மாறா நம் அன்பு .
Bookmarks