Results 1 to 12 of 12

Thread: கண்மணிக் கவிதைகள்

                  
   
   
  1. #1
    புதியவர் kjothira's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    Chennai
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0

    கண்மணிக் கவிதைகள்

    தூக்கம் கலைந்த ஒரு பின்னிரவில்
    இதழ்கள் குவிந்துறங்கும் உன் முகப்பூவை
    இமைக்காமல் பார்த்திருப்பேன் -
    கள்ளப் புன்னகை சிந்தி
    இன்னும் நீ சிவந்திருப்பாய்.

    வேல்விழியோ கூர்விழியோ
    சொல்மொழியோ கள்மொழியோ என்றெல்லாம்
    கவிதைப் பிதற்றல்கள் செய்வேன் -
    மெச்சியென் பொற்கிழியாய் தருவாய்
    தலையில் குட்டும் கன்னத்து முத்தமும்.

    சேர்த்து வைத்த உன் சிரிப்பாலே
    நிரம்பி நான் வழிந்திருக்க இன்றிந்தப் புதுச்சிரிப்பை
    எங்குதான் வைப்பதென்பேன் -
    சொன்னாலும் கேளாமல்
    இன்னுமொன்றைச் சிரித்து வைப்பாய்.

    தேக்கி வைத்த ஒளியெல்லாம்
    வானிறைக்கும் நிலவிருக்க என் நெஞ்சத்தின்
    முள்வலிகள் சொல்வேன் -
    கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
    என் காயங்கள் வடுவின்றி ஆறும்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    காதலியின்
    கள்ள சிரிப்பு
    கன்னத்து முத்தம்
    கண்ணீர் துளி.......

    ஆஹா இவையல்லவா இன்பம்.....

    தொடருங்கள்.. அன்பரே....

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    தேக்கி வைத்த ஒளியெல்லாம்
    வானிறைக்கும் நிலவிருக்க என் நெஞ்சத்தின்
    முள்வலிகள் சொல்வேன் -
    கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
    என் காயங்கள் வடுவின்றி ஆறும்.[/QUOTE]

    காதலியின் கன்னீரை விட அவலின் சிரிப்பு கவலைகலை மரக்க செய்யும்
    Last edited by நம்பிகோபாலன்; 15-12-2006 at 06:57 PM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by nambigopalan View Post
    காதலியின் கன்னீரை விட அவலின் சிரிப்பு கவலைகலை மரக்க செய்யும்
    நம்பிகோபால்... நொந்து போயிருக்கும் போது அவ சிரிச்சா பல்லை பேத்திரமாட்டான்....

    காதலியின் அருகாமையில் இரும்பு தடைகளும் துரும்பு தடைகள்தானே...
    தனக்காக ஏங்க ஒரு மனதை தேடும் வழக்கமான மனிதனாய்....

    ஜோதிரா...
    துவண்டு போகும் தருணங்களில்,
    நண்பணின் தோள்கள் தாங்கியதில்லையா????
    எல்லாவற்றிக்கும் மேலாய்...
    தாய் மடியை தவிர வேறு என்ன வேண்டும்???
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    சிரிக்கும் மொட்டினை முள்ளால் குத்தி
    கண்விழி வடிக்கும் துளியினைத் தொட்டு
    காயமெங்கும் பூசி காய்ந்துவிட காத்திரு

    முள்ளால் மலரை குத்தும்
    முரட்டு இதயமடா உனக்கு
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by benjaminv View Post
    நம்பிகோபால்... நொந்து போயிருக்கும் போது அவ சிரிச்சா பல்லை பேத்திரமாட்டான்....

    காதலியின் அருகாமையில் இரும்பு தடைகளும் துரும்பு தடைகள்தானே...
    தனக்காக ஏங்க ஒரு மனதை தேடும் வழக்கமான மனிதனாய்....

    ஜோதிரா...
    துவண்டு போகும் தருணங்களில்,
    நண்பணின் தோள்கள் தாங்கியதில்லையா????
    எல்லாவற்றிக்கும் மேலாய்...
    தாய் மடியை தவிர வேறு என்ன வேண்டும்???

    நண்பரே நீங்கள் சொல்வதி மிகச் சரிதான் இருந்தாலும், காதல் அல்லவா இது

    அருமையான கவிதை சோதிரா
    Last edited by ஆதவா; 18-12-2006 at 05:12 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by kjothira View Post
    கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
    என் காயங்கள் வடுவின்றி ஆறும்.
    கணேஷ்,

    வரிகள் ஒவ்வொன்றும் ரசிக்கவைத்தது.
    கவிதை அருமை பாராட்டுகள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    முள்ளால் மலரை குத்தும்
    முரட்டு இதயமடா உனக்கு
    அண்ணா,

    சூப்பரா இருக்கு.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    என்னவோ தெரியவில்லை கொஞ்ச நாளைக்கு முன்னால பென்ஸ் காதலியை அழச் சொன்னார்.. இப்போ ஜோதிரா!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    நம்பிகோபால்... நொந்து போயிருக்கும் போது அவ சிரிச்சா பல்லை பேத்திரமாட்டான்....
    சீரியஸான கவிதையில் அப்பப்போ வடிவேலு மாதிரி வந்து ஜோக்கடிக்கிறீர்...ம்!

    கவிதை நன்றாக இருக்கிறது கணேஷ். இறுதி வரி அருமை!
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by kavitha View Post
    சீரியஸான கவிதையில் அப்பப்போ வடிவேலு மாதிரி வந்து ஜோக்கடிக்கிறீர்...ம்!

    கவிதை நன்றாக இருக்கிறது கணேஷ். இறுதி வரி அருமை!

    கவி...
    சிரித்து கொண்டே சோன்னதால் அது ஜோக்கில்லை கவி....
    அது ரொம்பவே சீரியசானவிஷயம்....

    அலுவலக எரிச்சலில் இருந்து வீட்டுக்கு வரும் கணவன் தன்னை ஊர் சுற்றி பார்க்க கொண்டு போக வேண்டும் என்ரு நினைப்பதும்... (தவறில்லை, ஆனால் நச்சரிப்பதை சொல்லுகிறென்)

    அலுவலக சுமையை விட்டு வரும் மனைவி தனக்கு சோறாக்கி, பாலாக்கி, பாய்விரித்து கொடுக்க வேண்டும் என்றும் , தன்னைடைய காரியம் மட்டும் எந்த நோவும் இல்லாமல் தீரவேண்டும் என்று மட்டுமே நாம் அதிக நேரம் நினைக்கிறோமா????

    பகிர்தலில் வலியும் வடுவும் மாறும்தான்.. ஆனால் அது இரு வழி பாதையாக இருக்க வேண்டும்.. ஒரு வழி பாதையாக இருக்க கூடாது.... நாம் பகிரும்போது அடுத்தவர் அதை ஏற்றுகொள்ளும் மனநிலையில் இருக்கிறாரா என்று தெரிந்து பகிரலாமே????
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #12
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    பகிர்தலில் வலியும் வடுவும் மாறும்தான்.. ஆனால் அது இரு வழி பாதையாக இருக்க வேண்டும்.. ஒரு வழி பாதையாக இருக்க கூடாது.... நாம் பகிரும்போது அடுத்தவர் அதை ஏற்றுகொள்ளும் மனநிலையில் இருக்கிறாரா என்று தெரிந்து பகிரலாமே????
    சரியாகச்சொன்னீர்கள். புரிந்துக்கொள்ளுதல்தான் நட்பின் முதல்படி.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •