கண்களில் கருவும் உருவும் அடக்கம். பெண்களில் காதலும் கவிதையும் அடக்கம். என் தோட்டத்தில் நான் பறித்த பூக்களை இங்கே விற்பனையில்லாமல் தொடுத்து வைக்கிறேன்.. அள்ள அள்ள மணம் அதிகரிக்கும்.... பிச்சிப் பூவை உங்கள் கொண்டையில் சூடுங்கள் தோழிகள் மற்றும் சகோதரிகள். வாசனை நுகர்ந்து பாருங்கள் தோழர்கள், சகோதரர்கள்..
என்றும் வாடாமல் இருக்கத்தான் உங்கள் கைகளில் தவழவும் கண்களில் பரவவும் கொய்து வைக்கிறேன். பிச்சியை என்றும் சூடிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்............
பிச்சி
-------------
தமிழ்மன்றத்தில் எனது முதல் கவிதை
வணக்கம்,,
ஆயிரம் முறை பார்த்திருப்பாய்
என்னோடு வரும் என் தோழியை,
ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
என் அழகில்லாத முகத்தை.
உன் விழிப் பார்வைகள் நோக்கும்
தேன் குழைந்த என் தோழியை,
ஒரு முறையாவது பார்த்திருப்பாயா
நான் தொலைத்த என் மனதை..
நீ பார்க்காமலே பேசாமலே
கொல்கிறாய், வதைக்கிறாய் என்னை.
நான் பார்த்து பார்த்தே
மெல்லுகிறேன் சிதைக்கிறேன் உன்னை.
அழகற்றதால் தான் என்-
முகம் மட்டும் தெரியவில்லையோ உனக்கு?
அகல விரித்துப் பார் என்னை.
என்னுள் அறுவடையாகும் காதலை.
என் இதயத்தின் ஆடை உனக்கென்றேன்
விழிகளின் ஈரம் உனக்கென்றேன்
அழகற்ற நானும் பெண்தான்
கவிதைக்காக மட்டுமல்ல இது...
இந்த கவிதையில ஏதாவது தப்பு இருந்தா மன்னியுங்கள்
Bookmarks