எல்லாமே அருமை ராஜா.
எல்லாமே அருமை ராஜா.
ஊற்றுப்பேனாவில் (Fountain pen) உள்ள மை, ஏறக்குறைய தீர்ந்து விட்ட நிலையில், அதிகமாக வெளியே கொட்டுவது ஏன் ?
பேனா முள் (nib), மையைத் தேக்கி வைக்குமிடம், மையை முள்ளுக்குச் செலுத்தும் வழி ஆகிய மூன்றும் பேனாவின் முக்கியமான பகுதிகளாகும். பேனாவைப் பயன்படுத்தி எழுதும் போது, கூர்மையான பேனா முள்ளின் பிளவு வழியாக மை கசிந்து தாளில் எழுதும் வாய்ப்பு உண்டாகிறது. மை தேங்கியுள்ள இடத்திலிருந்து மை வெளியேறுவதனால் உண்டாகும் காலி இடத்தில் காற்று நிரம்பிவிடும். இதனால் மை தேக்ககத்திலும், வெளியேயுள்ள வளி மண்டலத்திலும் ஏற்படும் காற்றழுத்த வேறுபாடு சமன் செய்யப்படுகிறது. காற்று உள்ளே செல்வதற்கு வசதியாக பேனா முள்ளின் நடுவில் ஒரு சிறு துளை இருப்பதையும் காணலாம். மை தேக்ககத்திலிருந்து மை வெளியேற வெளியேற, அவ்விடத்தில் நிரம்பும் காற்றின் கொள்ளளவும் மிகுதியாகிக்கொண்டே செல்லும். ஒருவர் பேனாவைப் பிடித்து எழுதிக் கொண்டே இருக்கும்போது, அவர் கை விரல்களின் சூடு உள்ளே இருக்கும் காற்றையும் சூடுபடுத்தும். மை தேக்ககத்தில் பெருமளவு மையும், ஓரளவு காலி இடமும் அவ்விடத்தில் காற்றும் இருக்கும்போது மேற்கூறிய வெப்பத்தினால் உண்டாகும் விளைவு மிக மிகக் குறைவே. ஆனால் சிறிதளவு மையும் பெருமளவு காலி இடமும் அவ்விடத்தில் பெருமளவு காற்றும் நிரம்பி இருக்கும்போது, வெப்பத்தினால் காற்று விரிவடையும். இதன் விளைவாக, மை உந்தித் தள்ளப்பட்டு பேனா முள்ளின் வழியாக சிந்திக் கொட்டத் துவங்கும். மிகச் சிறிதளவே மை இருக்கும்போது அதிகமாக மை கொட்டுவது இதன் காரணமாகவே.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
சின்ன சின்ன தகவல்கள்.. எல்லாமே சுவையான நான் அறியாத தகவல்கள்..
நன்றி காந்தி..
(சின்ன வயசில் எத்தனை முறை கையைக் கறையாக்கி இருக்கேன்...
ஆஹா.. இப்பத்தான் விஷயம் விளங்குது..
ம்ம்ம்,,, இப்ப கார்ட்ரிட்ஜ் பேனாக்கள்தான்...பயன்படுத்துறேன்..)
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
தகவலுக்கு நன்றி காந்தி.
பேனாவில் எழுதியே பல நாட்களாகி விட்டன. இப்போதெல்லாம் எங்காவது கையெழுத்துப் போடும் போது மட்டுமே பேனாவின் அருகாமை தேவைப்படுகிறது.
பல டாக்குமெண்டுகளில் இப்போது டிஜிட்டல் கையெழுத்துகளை இட்டு விடுவதால், அதிலும் குறைவே!
இப்படி பேனாவில் ஏற்படும் கசிவு பேனா பழுதானதால் என்று நினைத்ததுன்டு ஆனால் அருமையான அறிவியல் விளக்கம் நன்றி காந்தி அவர்களே
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
புதைமணற்பரப்பில் எடைகூடிய பொருட்கள் புதையுண்டு போவதும், சாதாரண மணற்பரப்பில் அவ்வாறு நிகழாததும் ஏன்?
சாதாரண மணல் துகள்களுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையினால் (cohesive force) உண்டாகும் உராய்வின் (friction) காரணமாக எடைகூடிய பொருட்கள் கீழ்ப்புறம் செல்வது தவிர்க்கப்படுகிறது. ஆனால் புதைமணல் என்பது மணல் துகள்களும் ஏராளமான நீரும் கலந்த ஒரு கலவை. மணலுடன் கலந்துள்ள தண்ணீரின் மூலக்கூறுகள் மணல் துகள்களுக்கிடையே நிலவும் மேற்கூறிய உராய்வைக் குறைத்து விடுகிறது. எனவே இத்தகைய உதிர்மணற்பரப்பில் எடை கூடிய பொருட்கள் கீழே செல்வதற்கு எவ்விதத் தடையும் உண்டாவதில்லை. இதனால் கனமான பொருட்கள் புதைமணலில் எளிதாகப் புதையுண்டு போகின்றன.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
நல்ல தகவல். நன்றி மோகன்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
தொலைக்காட்சித் திரையில் சினிமாஸ்கோப் படங்களைத் திரையிடும்போது அவற்றின் அகலம் குறைந்து காணப்படுவதேன் ?
சினிமாஸ்கோப் படங்களை எடுப்பதற்கு உருளை வடிவிலமைந்த கண்ணாடி வில்லை (lens) பொருத்தப்பட்ட தனிவகையான ஒளிப்படப் பெட்டியைப் (camara) பயன்படுத்துவர். இதில் எடுக்கப்படும் படம் அல்லது உரு (image) நீளம் மிகுந்தும், அகலம் குறைந்தும் அமையும். இதனால் உருவின் மிகுதியான பரப்பு படத்தில் பதிவாகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட சினிமாஸ்கோப் படங்களை அரங்குகளில் திரையிடுவதற்கு உருளை வடிவிலமைந்த மற்றொரு வில்லை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நீளவாட்டில் அமைந்த பகுதி, உயரவாட்டில் அமைந்த பகுதியைவிட மிகுதியாக உருப்பெருக்கம் (magnify) செய்யப்படுகிறது. படத்தின் நீளவாட்டப் பகுதி, உயரவாட்டப் பகுதியை விட இரண்டரை மடங்கு அதிகமாக அமைந்துள்ளது. எனவே சினிமாஸ்கோப் படத்தை திரையரங்குகளில் திரையிடுவதற்கும் நீள அகல விகிதங்கள் 2.5: 1 என்ற வகையில் அமைந்த சிறப்புத் திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தொலைக்காட்சித் திரையில் நீள அகல விகிதங்கள் மேற்கண்ட விகிதத்தில் இல்லாமல் இருப்பதால் சினிமாஸ்கோப் படத்தின் அகலம், முழுத் திரையிலும் கொண்டுவர இயலாமல், குறைவாகக் காட்சியளிக்கிறது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
தகவலுக்கு நன்றி.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நன்றி காந்தி
தமிழின் முதல் அகலத்திரைப்படம் -
அருட்செல்வர் ஏ.பி. நாகராஜனின் 'இராஜ ராஜச்சோழன்'
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
பைசா கோபுரம்
இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இந்த கோபுரம்.
1173--&ஆம் வருடம் கட்டது ஆரம்பிக்கப்பட்ட இந்த கோபுரத்தை வடிவமத்தவர் யார் என்று சரியாகக் கூறமுடியாது. காரணம் இதன் கட்டுமானப் பணிகள் இருநூறு வருடங்களுக்குத் தொடர்ந்தது தான். எனினும் முதலில் கட்டுமானப்பணியைத் தொடங்கியவர் & பொனானோ பிஸானோ.
நேராகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் கட்டடம் கட்டும்போதே சாய்ந்த நிலக்குப் போனது
ஏழாவது மாடியில் இருந்து அளந்ததில் கிட்டத்தட்ட 4.4 மீட்டர் தூரத்க்கு சாய்ந்திருக்கும் இந்த கோபுரம் கட்டப்பட்ட நிலத்தின் தன்மையால்தான் (60 சதவிகிதம் நீர் சேர்ந்த இந்தப் பகுதி மண்) சாயத் தொடங்கியது.
இந்த கோபுரத்தின் எட 14,500 டன்கள்.
சுமார் ஐந்தரை டிகிரி கோணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தெற்க நோக்கி சாய்ந்திருக்கிறது இந்தக் கோபுரம்.
கோபுரத்க்குள் இருக்கும் சுழல் படிக்கட்டுகளின் மூலம் கோபுரத்தின் உச்சி வரை செல்ல அனுமதி உண்டு.
1173&ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி மூன்றாவ மாடி கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது 1178&ஆம் வருடம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி 1272&ஆம் வருடம் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை ஏழாவது மாடி கட்ட ஆரம்பித்த போது 1278& ஆம் வருடம் நிறுத்தப்பட்டது.
மறுபடி 1360&ஆம் வருடம் தொடங்கப்பட்டது கட்டுமானப்பணிகள் தொடர்ந் து பத்து வருடங்கள் தடையின்றி நடக்க பைசா கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
கோபுர உச்சிக்குச் செல்ல அமக்கப் பட்டிருக்கும் படிகள் & 293
கோபுரத்தின் உயரம் & 58.36 மீட்டர்கள்.
ஒவ்வொரு வருடமும் சாய்ந்கொண்டே இருக்கும் இந்த கோபுரத்தை அவ்வப்போது நிமிர்த்த யாராவ முயற்சி செய்வண்டு. ஒருமுற 800 டன் எடை கொண்ட கற்கள கோபுரத்தின் ஒரு பக்கம் நிறுத்தி, அதிலிருந் கயிறு கட்டி கோபுரத்த நிமிர்த்தப் பார்த்தனர்.
இரண்டு வெவ்வேறு எடயுடய பந்கள் காற்றோ மற்ற குறுக்கீடுகளோ இல்ல என்றால் ஒரே நேரத்தில்தான் பூமியில் விழும் என்று கலிலியோ மக்களுக்கு எடுத்ச் சொன்ன பைசா கோபுரத்தின் உச்சியில் இருந்தான்.
Last edited by mgandhi; 16-04-2007 at 08:03 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks