இது சுவையான சம்பவம் இல்லை. பெருமைபடக் கூடிய விசயமும் இல்லை. இருந்தாலும் நண்பர்களை எச்சரிக்க என்னாலான சிறு அனுபவ பாடம்.
இன்னைக்கு மதியம் அப்படியே பள்ளிக்கூடத்தில் கொஞ்ச வேலைகளை முடிச்சிட்டு அப்படியே என் நண்பர் ஒருவரோட சாப்பிடப் போயிட்டு வயிற்றுக்கும் வாகனத்துக்கும் எரிபொருள் போட்டுவிட்டு அவரை அவர் அறையினில் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தேன். கடந்த வரத்தில் பெய்த கடும் பனிப் பொழிவில் ரோட்ல வண்டி ஓட்றது போல இல்லாமல் ஐஸ் ஸ்கேட்டிங் போறது போல அனுபவம்.
வண்டியில் அழகாகச் சிரித்தது அந்த நிலவு என ஜெயச்சந்திரன் கேட்க
அதுதான் இதுவோ என ஜானகி பதில் சொல்லிக் கொண்டிருந்தாங்க. உருகிப் போய்க் கேட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தேன். எ
ன் வீட்டுக்குத் திரும்பும் சிறு சாலைக்கு பிரதான சாலையின் சிக்னலில் காத்திருந்தேன். சிக்னலில் எதிர்புறம் ஒரு வெள்ளைக்காரப் போலீஸ் அக்கா (ஆமா போலீஸ்காரர் மாமானா பெண் போலீஸ் அக்காதானே) அவுங்க வண்டியில் உக்கார்ந்துக்கிட்டு எமினெம் பாட்டைக் கேட்டுக்கிட்டு அப்பப்போ வாக்கி டாக்கில ஏதோ பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னை வேற உத்துப் பார்த்துக்கிட்டே இருந்தாங்க. ச்சே பரவாயில்லை! நம்மளை யாரோ சைட் அடிக்கிறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.
. அத்தோட கன்ணாடில மூஞ்சைப் பார்த்துக்கிட்டு சின்ன டச் அப் வேற!!!
பச்சை சிக்னல் கொடுத்ததும் நான் பாட்டுக்கு கிளம்பி என் வீடு செல்லும் சாலையில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பதான் பார்த்தேன் நான் முன்ன பார்த்த அந்த அக்காவோட வண்டில என்னைப் பின் தொடர்ந்துகிட்டு இருந்தாங்க. ஃப்ளாஷ் லைட் வேற போட்டுக் கிட்டு இருந்தாங்க. சரின்னு வண்டியை ரோட்டோரமா நிறுத்தினேன். வீட்டுக்குப் பக்கம் வந்திட்டேன் கூட.
அக்கா வந்தாங்க. ஹலோ! நல்லா இருக்கியான்னாங்க. நானும் நல்லா இருக்கேன்? நீங்கன்னேன். நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு ஏன் தம்பி சீட் பெல்ட் போடலைனு தெரிஞ்சிக்கலாமானு கேட்டாங்க. அப்போதுதான் கவனிச்சேன் ஆப்பு சீட் பெல்ட் ரூபத்தில வந்திருக்குன்னு. எனக்கு சீட் பெல்ட் போடாத உணர்வே இல்லை. இல்லை போட்டதற்கப்புறம் கழண்டு விட்டதான்னு ஒரே குழப்பம். அக்கா லைசன்ஸ் எல்லாம் வாங்கிட்டுப் போனாங்க. நானும் என்னோட கார்லேயே காத்திருந்தேன்.
வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததால அப்பக்கம் சென்ற வாகனங்கள்ல இருந்த்தவங்க எல்லாம் எனக்கு பெரும்பாலும் தெரிஞ்சவங்கதான். அதில் சில பேரோட பார்வை என்னை ஏதோ கொலைக் குற்றத்திற்காக தேடிப் பிடிச்சதைப் போல வேறு இருந்திச்சு.
எனக்கொரு நாள் வராமலா போயிடும். ஒவ்வொரு நாய்க்கும் சொந்த நாள் இருக்கு ( அட அதாங்க "Every dog has its own day"). அப்புறமா அக்கா வந்தாங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். நான் வேணும்னு பண்ணலை. இந்த ஒரு தடவை தெரியாமப் பண்ணிட்டேன். இனிமேல் கட்டாயம் சீட் பெல்ட் போட்டிருக்கேனா செக் பண்றேன்னு. அவங்க என்ன நம்ம ஊர்ல உள்ளவங்களைப் போல பாசக்கார மாமா, அக்காங்களா, அதெல்லாம் இல்லை ஒரு $165 கட்டிடுன்னு டிக்கெட் கொடுத்திட்டாங்க. அப்படி இல்லைனா சமூக சேவை செய்னு சொன்னாங்க இல்லைனா கோர்ட்டுக்கு போன்னு சொல்லிட்டு "Drive safely, Have a nice day" னு ஒரு வாழ்த்து வேற.
நான் 50 கி.மீ ஸ்பீட் லிமிட்ல 80ல எல்லாம் ஓட்டி இருக்கிறேன் அப்போ யாருமே கொடுக்கலை. ஆனா என்னை அறியாம செஞ்ச தப்பில இப்போ பெருசா மாட்டிக்கிட்டேன். அரசு அன்று கொல்லும், சாஸ்கட்டூன் போலிஸ் நின்று கொல்லும்.B) :angry:
என்ன சொல்ல வர்றேன்னா, தயவு செஞ்சு போடுங்க சீட் பெல்ட். இல்லைனா டிக்கெட்.
Bookmarks