தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமத்தை ரத்துச் செய்ய ஆணை
வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகள்
தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களின், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக அரசு ஆணை ஒன்றினை பிறப்பித்துள்ளது.
வாகனங்களை குறிப்பிட்ட அளவிற்கும் அதிக வேகமாக ஓட்டுவது, திருட்டுப் பொருட்களை ஏற்றிச் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, பயணிகளிடம் முறை தவறி நடந்து கொள்வது, விபத்து சமயங்களில் முதலுதவி அளிக்காம்ல் இருப்பது போன்ற பல மீறல்களுக்காக உரிமம் ரத்துச் செய்யப்படும்.
வளர்நது வரும் நாடுகளில் அதிக அளவில் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுப்பதற்கும், அனவரும் சாலை விதிகளை மதித்து நடக்கும் விதமாகவும் இந்த ஆணை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும், விபத்து ஏற்பட்டவுடன் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு எந்த விதமான அல்லலும் இருக்காதும் எனவும் கூறுகிறார் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை ஆணையர் ரா.சிவகுமார்
பின் குறிப்பு -நல்ல சட்டம் விரைந்து செயல்பட்ட்டும்.
நல்ல சட்டம் விரைத்து செயல் பட்டால் நல்லது
Bookmarks