Page 1 of 212 1 2 3 4 5 11 51 101 ... LastLast
Results 1 to 12 of 2533

Thread: ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0

    ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!

    விடாக் கண்டன்..கொடாக் கண்டி..

    --------------------------------------------------------------------------------

    ஒரு அழகான பொண்ணை ரொம்ப நாளா கணக்குப் பண்ணிகிட்டுருந்த பையன் ஒருத்தன், ஒரு விருந்துல சந்திச்சான்.. எப்படியும் அடைப்புக்குறி போட்டுறணும்ன்னு முடிவு பண்ணி, அவள்கிட்டே போயி கடலை போட ஆரம்பிச்சான்.. அவள் வெட்டிக்கிட்டே இருந்தா.. இவனுடைய மனந்தளரா முயற்சிகளும்.. அவளுடைய மூக்குடைப்புகளும்..

    அவன் ; நான் ஒரு புகைப்பட நிபுணர்.. உங்கள் முகம் போல அழகான முகத்தை நான் பார்த்ததே இல்லை.
    இவள் ; நான் முகச் சீரமைப்பு நிபுணர்.. உங்கள் முகம் போல நிறைய முகங்களை பார்த்திருக்கிறேன்..!

    அவன் ; இதற்கு முன் நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம் இல்லையா..?
    இவள் ; ஆமாம்.. அன்றிலிருந்து நான் அங்கு போவதையே நிறுத்திவிட்டேன்..!

    அவன் ; என் வாழ்க்கையில் இவ்வளவு நாளாக உங்களை எப்படி சந்திக்காமல் இருந்தேன்.?
    அவள் ; கண்ணுல படாம இருக்க நான் பட்ட பாடு எனக்குதானே தெரியும்..!

    அவன் ; பிரம்மன் முழுத்திறமையையும் காட்டி உங்களை உருவாக்கி இருக்கிறான்..
    இவள் ; இருக்கலாம்.. அடுத்ததாக படைத்தது உங்களையா..?

    அவன் ; வரும் சனிக்கிழமை நாம் எங்காவது வெளியில் போகலாமா..?
    இவள் ; மன்னிக்கவும்.. சனிக்கிழமை மாலையில் எனக்கு தலைவலி வந்து விடும்..!!

    அவன் ; உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா..?
    இவள் ; வேண்டாம்.. அந்தப் பேரை நீங்க வச்சுக்கிட்டா நல்லா இருக்காது..!

    அவன் ; நாம இப்போ சந்திச்சுக்கிட்டது பூர்வ ஜென்ம புண்ணியம்தான் இல்லையா..?
    இவள் ; என் கஷ்ட காலமாகவோ, பூர்வ ஜென்ம பாவமாகவோ கூட இருக்கலாம்..!

    அவன் ; உங்க பக்கத்து இருக்கை காலியாத்தானே இருக்கு..?
    இவள் ; ஆமாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உக்காந்து இருக்கறதும் காலியாகப் போகுது..!

    அவன் ; உன் மனசுல இருக்கறத தயங்காம என்கிட்டே சொல்லலாம்..
    இவள் ; அப்படியா.. இடத்தை காலி பண்ணு..!

    அவன் ; உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்..
    இவள் ; ஏன்.. கிளம்பப் போறியா..?

    அவன் ; நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ணிக்கோ' ன்னு சொன்னா நீ என்ன சொல்லுவே..?
    இவள் ; ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. நான் ஜோக் கேட்டு சிரிக்கறப்போ என்னால பேச முடியாது..!

    அவன் ; உன் அழகு என் மனச கலக்குது..

    இவள் ; உன் பர்சனாலிட்டி என் வயித்த கலக்குது..!

    அவன் ; என்னைப் பார்த்து அன்பா ஒரு தடவையோ ரெண்டு தடவையோ சிரிச்சியா இல்லையா..?

    இவள் ; ஒரு தடவை தான்.. நான் எந்த தப்பையும் ரெண்டாவது முறை செய்யறதே இல்லை..!!

    அவன் ; உனக்காக இந்த உலகத்தின் மூலைக்கு கூட போவேன்..

    இவள் ; அங்கேயே இருந்துடு.. திரும்ப வந்துராதே..!!!
    Last edited by ராஜா; 23-11-2008 at 01:50 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    மின்னஞ்சல் முக"ரவி" மாறினால்..

    --------------------------------------------------------------------------------

    ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!

    வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..

    " சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!

    TO ----------என் அன்பான ம்னைவி

    SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்..

    TIME---------- மர்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm.

    அன்பே..

    அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்த்து. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.

    அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.

    உன் வரவை எதிர் நோக்கி..

    உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சில நிரந்தர விதிகள்..

    எதுக்காவது வரிசையிலே நிக்கிறோம்ன்னு வச்சுக்கங்க.. நாம் நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.. மத்த வரிசையெல்லாம் கிடு கிடுன்னு கரையும்.. கவனிச்சிருக்கீங்களா..?

    தப்பா நம்பர் அடிச்சு போன் பண்ணினோம்ன்னு வைங்க.. எங்கேஜ்டா இருக்காது.. தப்பு நம்பர் எதிராளி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பான்.. லொடக்குன்னு 2 ரூபா காலியாயிடும்..!

    பைக்கையோ காரையோ தெரிஞ்சவரைக்கும் ரிப்பேர் பார்த்துட்டு, கையை ஆயிலாவோ, கிரீஸாவோ வச்சுருக்கோம்ன்னு வைங்க.. அப்பத்தான் மூக்கு அரிக்கும்.. உண்டா இல்லையா..?

    உங்க முதலாளி ஏன் லேட் ன்னு கேட்டு வண்டி பஞ்சர் ன்னு சொல்லி சமாளிச்சுடுவீங்க.. சோதனையா மறுநாள் உண்மையாவே பஞ்சர் ஆகி முதலாளிக்கிட்டே பேய் முழி முழிச்சுருக்கீங்களா இல்லையா..?

    வீட்டை பூட்டிட்டு வெளிலே கெளம்பும்போது தொலைபேசி ஒலிக்கும்.. திறந்து உள்ளே வர்றதுக்குள்ள நின்னு போயிடும்..

    ஒரு முக்கியமான ஆளு அவங்கூட சேராதே ன்னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் சின்சியரா சரின்னுருப்பீங்க.. மறுநாளே அவ்னோட சுத்தறத அந்த முக்கியமானவங்க பாத்துடுவாங்க.. வாசஸ்தவம் தானே..?

    ஒரு மேஜிக்'கையோ, இல்லே வேறே எதாவது வித்தையையோ கத்துட்டு வந்துருப்பீங்க. ஒரு ஆள அசத்தணும்ன்னு அதை செஞ்சு காமிக்கறப்போ சொதப்பிடும்.. அவங்க போனப்புறம் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க.. கரெக்டா வரும்.. அப்படி நொந்து நூலாயிருக்கீங்களா இல்லையா..?

    கொட்டாவி விட்டுட்டு வெட்டியா உக்காந்து இருப்பீங்க.. ஒரு வேலையும் இருக்காது.. ஒரு டீ சாப்பிடலாம்ன்னு கப்பை கையிலே எடுப்பீங்க.. உடனே ஒரு வேலை வானத்துலேருந்து குதிக்கும்.. சூடா அந்த டீயை குடிக்க விடாமப் பண்ணிடும்.. அனுபவிச்சுருக்கீங்களா..?

  4. Likes sarcharan liked this post
  5. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..

    கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?

    கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?

    கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன்? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!
    __________________

  6. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்.
    ************************************
    1. காரை நிறுத்துவான்.
    2. இயந்திரத்தில் அட்டையை செருகுவான்.
    3. குறியீட்டு எண்ணை அழுத்துவான்.
    4. பணத்தையும் அட்டையையும் சேகரிப்பான்.
    5. காரைக் கிளப்புவான்.

    ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண்.
    **************************************
    1. காரை நிறுத்துவாள்.
    2. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
    3. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினை ஆஃப் செய்வாள்.
    4. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
    5. இயந்திரத்தை அணுகுவாள்.
    6. கைப்பையில் அட்டையை தேடுவாள்.
    7. அட்டையை செருகுவாள்.
    8. குறியீட்டு எண்ணை அழுத்துவாள்.
    9. அழுத்திய எண்களை ரத்து செய்வாள்.
    10. கைப்பையில் எண் குறிப்பை தேடுவாள்.
    11. மீண்டும் அட்டையை செருகுவாள்.
    12. குறிப்பைப் பார்த்து எண் அழுத்துவாள்.
    13. பணத்தை சேகரிப்பாள்.
    14. காருக்கு திரும்புவாள்.
    15. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
    16. காரை ஸ்டார்ட் செய்வாள்.
    17. ஆஃப் செய்வாள்.
    18. இறங்கி ஒடுவாள்.
    19. இயந்திரத்தில் இருந்து அட்டையை பிடுங்குவாள்.
    20. காருக்கு வருவாள்.
    22. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
    23. ஸ்டார்ட் செய்வாள்.
    24. 1 கிலோ மீட்டர் ஓட்டுவாள்.
    25. ஹாண்ட் ப்ரேக்கை எடுத்து விடுவாள்

  7. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சந்திரமுகி படப்பிடிப்பு ஒரு காட்டில் நடந்தது. அப்போது இரு காட்டுமிராண்டிகள் அவ்வழியே வந்தனர். தகப்பனும் மகனுமான அவர்கள் மிகுந்த பசியுடன் இருந்தனர்.. அப்போது அங்கு ரஜினி வந்தார்..

    மகன் ; அப்பா இதைப் புடிச்சுட்டு வர்றேன் திம்போமா..?

    அப்பா ; வேணாம்டா.. ஒரே எலும்பா இருக்கும்.. பல்லு உடைஞ்சுடும்..

    பின்னர் பிரபு அங்கு வர...

    மகன் ; இது நல்லா புஷ்டியா இருக்குப்பா.. புடிச்சுட்டு வரவா..?

    அப்பா ; வேணாம்டா.. ஒரெ கொழுப்பு.. அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்துடும்..!

    பின்னர் ஜோதிகா வருவதைப் பார்த்ததும்..

    மகன் ; அப்பா.. இது 'நச்' பிகருப்பா.. இதை புடிச்சு சாப்பிடுவோமா..?

    அப்பா ; புடிச்சுட்டு வா.. ஆனா சாப்பிட வேண்டாம்..

    மகன் ; அப்போ இன்னிக்கு நாம சாப்பிட என்ன செய்யறது..?

    அப்பா ; உங்க அம்மாவை காலி பண்ணிடுவோம்..!!!

  8. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு ஊரில் ஒரு சைவ காதலனும் சைவ காதலியும் இருந்தார்கள்..

    காதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..

    65 கி.

    குதி உயர் காலணியை அகற்றினாள்..

    63 கி.

    துப்பட்டாவை காதலனிடம் கொடுத்தாள்....

    62 கி.

    அத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...

    கவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...!!!

  9. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    பக்தன் ; கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?

    கடவுள் ; நல்லா அழகானவளா இருக்கணும்.

    நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்..

    பணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!

  10. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    அட்லாண்டிக் கடலில்.. யு.எஸ். கடற்படை கப்பலின் தலைவர் வானொலி மூலம் விடுக்கும் எச்சரிக்கை..

    எதிரில் தெரியும் விளக்குக்கு சொந்தமானது எதுவாக இருந்தாலும் சரி.. உடனே 15 டிகிரி வலப்பக்கம் விலக்கி செலுத்துங்கள்..

    கப்பல் தலைவர் அவர்களே.. தயவு செய்து தங்கள் கப்பலை 15 டிகிரி இடப்பக்கம் திருப்பி செலுத்தினால் விபத்தை தவிர்க்கலாம்..

    என்ன..? அமெரிக்காவின் போர்க்கப்பல் இது.. உனக்கு உத்தரவிடுகிறேன்.. உடனே வலப்பக்கம் திருப்பு..

    எவராக இருந்தால் என்ன.. ? விலகுவது எங்களால் முடியாத காரியம்.. அறிவுடன் செயல்படுங்கள்.. திசையை மாற்றுங்கள்.. அதுவும் உடனே...!!

    என்ன.. எங்களுக்கே ஆணையிடுகிறாயா.. ? உலகின் பெரும் வல்லரசு நாட்டின் விமானம் தாங்கிக் கப்பலின் தலைவன் கடைசி முறையாக எச்சரிக்கிறேன்.. உடனடியாக விலகு..

    அட முட்டாளே..! இது லைட் ஹவுஸ்.. !!!!

  11. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    புதிதாக மணம் செய்துகொண்ட இணை.. உணவகத்தில்... அடுத்த மேசையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனையே புதுப்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்..

    கணவன் ; ஏன் டார்லிங்.. அவரை உனக்கு முன்பே தெரியுமா..?

    மனைவி ; ஆம் உயிரே.. என் முன்னாள் கணவன்.. 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் பிரிந்து விட்டோம் .. அதிலிருந்து இப்படி ஆகிவிட்டார்..

    கணவன் ; என்னதான் சந்தோஷத்தை கொண்டாடுகிறார் என்றாலும் ரெண்டு வருஷம் கொஞ்சம் ஓவர் தான்.. இல்லியா அன்பே..?

    மனைவி ; ?????????????????????????????

  12. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    ராஜா அண்ணா.... சும்மா தூள்பன்னரீங்க...........

    அதுவும் அந்த
    ஆTM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்./பெண்....

    அண்ணா,
    நீங்க இனைக்கு என்னை நல்லா மாட்டிவுட்டுட்டீங்க
    சிரித்து சிரித்து எதிரில் உல்ல ஒருவனை சிறையிலிட்டேன்.....


    ---------------------------------------------------------
    பல்கலைகலகத்திலே உட்கார்ந்து இதை படித்தேன்,
    எதிரில் உல்ல ஒருவன் போகும் பொழுது மேடம் நீங்க இங்க படிக்க வந்துல்லீர்கல்,
    நீங்க படிக்கலனாலும் பரவாயில்லை ...என்னையாவது படிக்கவுடுங்க......
    சிரித்து சிரித்து என்னை மய****னு சொன்னான்....
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  13. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கலக்கல்..ராஜா..!

    அடைப்புக்குறி விடாக்கண்டனும்
    முகரவியும் போர்க்கப்பலும் வாய்விட்டு சிரிக்கவைத்தன.

    ஏடிஎம் ஏற்கனவே படித்திருக்கிறேன்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 212 1 2 3 4 5 11 51 101 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •