ஒரு ஆசிரியை புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்தாள்..

முதன் முதலாக வகுப்பு எடுக்க ஒரு விவகாரமான் பிரிவுக்கு போக நேர்ந்தது. மாணவர்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள எண்ணி....

ஆசி ; மாணவ மணிகளே.. உங்கள் பெயரையும் பொழுது போக்கையும் ஒவ்வொருவராகச் சொல்லுங்கள் பார்க்கலாம்..

மா..1 ; நான் சுரேஷ்.. என் வீட்டுக்கு அருகில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. அதில் பந்து வைத்துக்கொண்டு விளையாடுவது என் பொழுதுபோக்கு//

ஆசி ; உடலுக்கு ஆரோக்கியம்... நல்ல பழக்கம்.. அடுத்து..

மா..2 ; நான் ரமேஷ்.. பந்துடன் நீரில் விளையாடுவேன்..

ஆசீ ; பரவாயில்லையே.. சுரேஷ் போலவே உனக்கும் பந்து விளையாட்டு தான் பிடிக்குமா..? அடுத்து..

மா...3 ; நான் மகேஷ்.. தண்ணீரில் பந்தோடு விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..!

ஆசி ; என்னதான் நண்பர்கள் என்றாலும் எல்லொரும் ஒரே மாதிரியா..? சரி.. மாணவிகளே.. நீங்கள் சொல்லுங்கள்...

மாணவி 1 ; நான் என் வீட்டருகே உள்ள நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் குளிப்பேன்.

ஆசி ; ( வெறுத்துப் போனவளாக..) முதலில் உன் பெயரைச் சொல்..

மாணவி 1 ; மங்காத்தா மார்க்க"பந்து"...!!!