ராஜா கலக்கிட்டீங்க போங்க.
இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்ல கொடுக்க வேண்டிய அறிக்கையின் கீழே இந்த மதி ஜோக்கு (அதான் பொம்பளப் புள்ளைகிட்ட வழிஞ்சது) சில பகுதிகளை மொழிபெயர்த்துச் சேர்த்தேன்.
பயங்கர சீரியசா மட்டுமே இருக்க வேண்டிய மீட்டிங் கொஞ்சம் சிரியசாவும் ஆகிருச்சுநன்றி!
கலக்கிட்டிங்க.. ராஜா.. எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.
ஒரு சிலவற்றை முன்பு படித்துள்ளேன்....
இன்னும் கலக்குங்க... தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.
என்னவோ போங்க சிலருக்கு வயசாயிட்டே வருதுன்னு தெரியுது..
ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு. சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க, அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்..
"மறைந்த நண்பர் கற்பில் ராமன். எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர். ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்... "
இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, " சென்கல்வராயா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..".
டாக்டர் சர்தார் புது மருத்துவமனை திறந்தார்.. ஆனால் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த போது தச்சர், பெயிண்டர் எல்லோரையும் கடுமையாக திட்டவே.. தங்கள் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.
மூட்டு வைத்தியரின் அறைக்கதவு ஒரு கீல் இல்லாமல் இருந்தது.
காது டாக்டரின் அழைப்பு மணி வேலை செய்யவில்லை,,
சிறுநீரக மருத்துவர் அறையில் உள்ள டாய்லெட்டில் கதவே இல்லை..
கண் டாக்டர் அறைக்கதவில் கண்ணாடி இல்லை.. சாவித் துவாரமும் இல்லை..
முத்தாய்ப்பாக..டாக்டர் . சர்தார்.. psychotherapist என்பதை இவ்வாறு எழுதிச் சென்றுவிட்டனர்..
Dr. SARDAR...
Pscho The Rapist.
ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்.." ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?
ஃபாதர் சொன்னார்.." என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."
அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.
பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.
அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.
தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!
வேகமாக வாகனம் ஓட்டிய வழக்குக்காக ஒரு ஆசிரியர் நீதிமன்றம் வந்தார். மிகவும் தாமதமானதால் நடுவரை வேண்டினார்.
"அய்யா நான் ஒரு ஆசிரியன். பள்ளிக்கு மிகவும் தாமதமாவதால் தயவு செய்து என் வழக்கை முதலில் விசாரிக்க வேண்டுகிறேன்.."
மிகுந்த ஆர்வம் கொண்ட நடுவர், " நீங்கள் ஒரு ஆசிரியரா..!" எனக்கேட்டு, தன் நினைவுகளை பின்னோக்கி ஓடவிட்டார். பின் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக, "நல்லது ஆசிரியரே.. கூண்டில் ஏறி நின்று, 500 முறை 'நான் வேகமாக வாகனம் செலுத்த மாட்டேன்' என எழுதிக்கொடுத்துவிட்டு நீங்கள் போகலாம்...!!".
டேனியல் ; பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்..
1,2,3 கத்துத் தரப்போறேன்..
சின்னா ; எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!
டேனி ; வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?
சின்னா ; 4 சார்.
டேனி ; 8 க்கு முன் என்ன வரும்..?
சின்னா ; 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!
டேனி ; எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..
சின்னா ; ஜாக், குயின், கிங், ஆஸ்.. எங்கப்பா சொல்லி குடுத்துருக்காங்க...!!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks