ஏதாம் கொடுத்த ஆப்பிள்...
அந்தக்
குட்டைப்பாவாடைக்கு
சொந்தக்காரியா?
இல்லை, இவளை விட
அந்த மோகனப்புன்னகை
எவ்வளவோ மேல்..
இல்லை, அந்தக் கன்னக்குழி
தெற்றுப்பல்,
காட்டன் சுரிதார்..
இல்லை இல்லை..
தாவணி.. ரெட்டை ஜடை..
மண்வாசனை..
நாயாய் அலைகிறது..
திரும்பி என்னிடமே வருகிறது
வான் நோக்கி வீசி எறிந்த பந்தாய்...
போஸ்ட்மரம் கண்டவுடன்
காலைத் தூக்குவதாய்..
மாராப்பு ஒதுங்குகிறதா என்று கண்கள்..
இவள் சிரிக்கமாட்டாளா?
பேசமாட்டாளா?
ஏங்குகிறது...
ராத்திரி நேரம் என்பது
மதிய நேர சஹாராவாய்
அனல் அடிக்கிறது...
உடைந்து போன
டைட்டானிக்காய்
அல்லாடுகிறது..
எல்லாவற்றையும்
எழுதத் துடிக்கிறது..
நிர்வாணமாய் காண
வெட்கமாய்..
ஆதாமே.. ஏனடா
வாங்கினாய் ஏவாள்
கொடுத்த ஆப்பிளை?
Bookmarks