Results 1 to 6 of 6

Thread: ஏதாம் கொடுத்த ஆப்பிள்...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    ஏதாம் கொடுத்த ஆப்பிள்...

    ஏதாம் கொடுத்த ஆப்பிள்...

    அந்தக்
    குட்டைப்பாவாடைக்கு
    சொந்தக்காரியா?

    இல்லை, இவளை விட
    அந்த மோகனப்புன்னகை
    எவ்வளவோ மேல்..

    இல்லை, அந்தக் கன்னக்குழி
    தெற்றுப்பல்,
    காட்டன் சுரிதார்..

    இல்லை இல்லை..
    தாவணி.. ரெட்டை ஜடை..
    மண்வாசனை..

    நாயாய் அலைகிறது..
    திரும்பி என்னிடமே வருகிறது
    வான் நோக்கி வீசி எறிந்த பந்தாய்...

    போஸ்ட்மரம் கண்டவுடன்
    காலைத் தூக்குவதாய்..
    மாராப்பு ஒதுங்குகிறதா என்று கண்கள்..

    இவள் சிரிக்கமாட்டாளா?
    பேசமாட்டாளா?
    ஏங்குகிறது...

    ராத்திரி நேரம் என்பது
    மதிய நேர சஹாராவாய்
    அனல் அடிக்கிறது...

    உடைந்து போன
    டைட்டானிக்காய்
    அல்லாடுகிறது..

    எல்லாவற்றையும்
    எழுதத் துடிக்கிறது..
    நிர்வாணமாய் காண
    வெட்கமாய்..

    ஆதாமே.. ஏனடா
    வாங்கினாய் ஏவாள்
    கொடுத்த ஆப்பிளை?
    Last edited by விகடன்; 26-04-2008 at 05:12 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    வழியில் காணப்படும் அனைத்துப் பெண்டிரும் தனது காதலியாகவேண்டும் என்னும் ஆசை!
    நனவானால்...... நினைக்கவே இனிக்கிறதே
    ஆதாம், இன்னோர் ஆப்பிள் சாப்பிடு!
    Last edited by விகடன்; 26-04-2008 at 05:13 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #3
    புதியவர்
    Join Date
    15 Apr 2003
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை வரிகளில் ரொம்பவே தீவிரம்..

    அதுசரி, ஆதாம்+ஏவாள் = ஏதாம்???
    Last edited by விகடன்; 26-04-2008 at 05:13 PM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அன்று விதைத்தது...

    அருமை ராம்!!!
    Last edited by விகடன்; 26-04-2008 at 05:13 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    அனர்த்தமாகாத
    ரசனைகள்!
    நுணுக்கமான
    பார்வைகள்!

    சகோதரிகளும் படிக்கும்படி எழுதுங்கள் ராம்!
    Last edited by விகடன்; 26-04-2008 at 05:14 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    வெகு சிலராலே மட்டுமே மன ஊசலாட்டத்தை ஒத்துக் கொள்ள முடியும்....

    அந்த வகையில் இந்த கவிதையும் ஒன்று.....

    எத்தனையோ விஷயங்கள் படிக்காமல் விடப்பட்ட போதிலும், விடாமுயற்சியும், ஆர்வமும் கொண்ட சிலரால், சில நல்லவற்றை மீண்டும் படிக்க முடிவது சந்தோஷமே.....
    Last edited by விகடன்; 26-04-2008 at 05:14 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •