நண்பர்களுக்கு வணக்கம்..!
மன்றத்தில் சேர்ந்த 28-வது நாளில் -
எனது நூறாவது பதிவில் சில வார்த்தைகள்..
மன்றத்தில் நண்பர்களைத் தேடித்தான் நுழைந்தேன் -
இப்போது - உறவுகளைக் காண்கிறேன்..!
உலகின் பல்வேறு இடங்களில் இருந்தாலும்,
உறவுகளை இணைக்கும் ஒரு பாலமாய் இருக்கின்றது -
நம் தமிழ்மன்றம்..!
நன்றி சொல்ல கடன்பட்டிருக்கின்றோம்..!
நூற்றுக்கு நூறு பெறுகிறோமா - தெரியாது !
ஆனால், பல நூறு நண்பர்களைப் பெற்றிருக்கிறோம் !
சில நண்பர்களை பல நாட்களாய் காண முடியவில்லை -
பதிவுகளும் இல்லை..!
நண்பர்கள் தொடர்ந்து வாருங்கள் -
தங்கள் உறவுகளைக் காணுங்கள்..!
கண்டதால் நட்புகொள்கிறோம் -
காணாமலே நட்புகொள்ளும் நாம் பாக்கியசாலிகள்..! B)
__________________
நட்புடன்,
Franklin Raja.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி
வேரொன்றும் அறியேன் பராபரமே..!"
Bookmarks