கண்ணில்
கண்ணிவெடி வைத்திருந்தாய்..
கள்ளமில்லா என் இதயத்தை
கடத்தி கொண்டுபோய் - உன்
உள்ளமெனும் குகையில்
என்னை சிறைவைத்தாய்..
பிணையத்தொகையாக என்
காதலைக் கேட்டாய்..
பல நாட்கள் என்னை வைத்து
பார்த்துக்கொண்டாய்..
நம் திருமணத்திற்கு
நல்ல பல திட்டங்களும் தீட்டினாய்..
பிறகுதான் மிரட்டல் கடிதத்தை
அனுப்பினாய் - அது
உன் கல்யாண அழைப்பிதழ்...
கடைசியில்
மனித வெடிகுண்டாய் மாறி
என் இதயத்தை சுக்குநூறாக ஆக்கிவிட்டாயே..!
என் காதல் தீவிரவாதியே..
என்னையும் உன்னையும் சேர்த்தே கொன்றுபோட்டாயே..!! :angry:
Bookmarks