ஆண்டிற்கொரு விழா
நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்தது. உழவன் இளையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான். பிள்ளையாரும் அத் தெய்வங்களுள் ஒருவர். இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல. இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர். நல்ல மேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரத்தடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்,
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்.
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்.
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்.
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு.
பிள்ளயார் பிறந்தார்
வடக்கே தெற்கே ஒட்டி,
வல புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளயார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
முசிறி உழவிலே
மொளச்சாராம் பிள்ளயாரு,
ஒடு முத்ம் தேங்காய
ஒடக்கறமாம் பிள்ளயார்க்கு,
குல நிறஞ்ச வாழப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளயார்க்கு,
இத்தனயும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளயார்க்கு!
கணபதி பூசை
வேண்டும் வரம் தரும் பிள்ளயாருக்குப் பூச போடுவதற்கு கிராமப்பெண்கள் தயார் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல விளச்சல், மங்கல வாழ்வு கொடுத்த பிள்ளயாருக்கு மங்களமாகப் பூச போட அவர்கள் விரும்புகிறார்கள். நிலவு காயும் நேரத்தில் பிள்ளயார் பிடித்வத் அவரச் சுற்றிக் கும்மியடித்ப் பாடுகிறார்கள். கும்மியில் பிள்ளயார் பூசனமுற பற்றி பெண்கள் பாடுகிறார்கள்.
ஒரு மிளகாயாம்-ஏலேலோ
கணபதியாம்
ஒரு ஆயிரம் திருவிளக்காம்-ஏலேலோ
கணபதியாம்
திருவிளக்கு ஏலேலோ
கணபதியாம்
சிவனே என்று பொழுதெறங்க-ஏலேலோ
கணபதியாம்
பொழுதெறங்கும் வேளயிலே-ஏலேலோ
கணபதியாம்
பொங்கலுக்கு தண்ணி கொண்டு-ஏலேலோ
கணபதியாம்
நீராடி நீர் குளித்-ஏலேலோ
கணபதியாம்
பட்டுடுத்தி பணியுடுத்தி-ஏலேலோ
கணபதியாம்
பதினெட்டு நெல் வகயும்-ஏலேலோ
கணபதியாம்
கொறித்தெடுப்போம்-ஏலேலோ
கணபதியாம்
பிள்ளயார் தூதி
நத்தத்ப் பிள்ளயாரே
நான் நடந்தேன் மாதாந்தம்
கக்குழந்த தந்தியானா-உனக்கு
கடவிளக்கு நான் விடுவேன
Bookmarks