அவன் கை பிடித்து
கடல் மணலில் நடந்து
கதைகள் பலபேசி
காலம் கடந்து வீடு வந்தபோது
அப்பாவின் குரல் யாரிடமோ
"என் மகள் அப்படியல்ல
காதல் என்ற அற்ப விஷயத்துக்காய்
என்னை ஏமாற்றுபவள் அல்ல"
வார்த்தைகளின் சாட்டையடி
அங்கே உடைந்து போனது
அவள் உள்ளம் மட்டுமல்ல
காதலும்..
Bookmarks