ஞயிற்று கிழமைகளில் மடிவாலா சந்தை செல்லூவோம்...
(எதோ பங்கு சந்தை என்று நினைக்க வேண்டாம்).
எனக்கு இங்க போயாச்சுனா இங்கு கம்பங்கூளு, கரும்பு சாறு, ராகி உருண்டை சாப்பிடும் ஆசையெல்லாம் நிறைவேறும்.... ஒரு நாள் இப்படியே சுத்திகிட்டு வரும்போது ஒரு ஜோதிடம் பார்ப்பவணிடம் வந்தோம் (அட நாங்க நாலு பேரு உண்டுப்பா) ... எங்கு போனாலும் சிக்கலில் மாட்டுபவன் நான் என்ற கணக்கில் எனக்கு ஜோதிடம் முதலில் பார்க்க பட்டது...
அட எனக்கு சத்தியமா காதல் கல்யாணம் தானாம்..(நம்பிட்டேன்)
அடுத்தது அவன் என் அன்பு நண்பனின் கையை பார்க்க
ஜோஷியகாரன் அவனிடம் "நீ காதல் கல்யாணம் பண்ணினா, அவா வேற வாழ போயிடுவா என்று சொல்ல"
பளீர்...
பாவம் ஜோசியகாரன் காதில் இருந்து ரத்தம்....
எனக்கு சிரிப்பு தாங்கலை.. பின்ன அவனுக்கு என்ன நடக்க போவுதுன்னு தெரியாம அடுத்தவன் எதிர்காலம் சொன்னா...
எப்படியோ.. செல்வரே கிளி சூப் எப்படி... எனக்கு பங்கு உன்டா????
Bookmarks