ஹார்வார்டில் மேலாண்மை படித்திருக்கவில்லை
பொருளாதார நிபுணர்களுடன் விவாதிக்கவுமில்லை
பல்கலைக்கழகங்களில் டாக்டரேட் பட்டமும்
பெற்றிருக்கவில்லை
ஆயினும்
மாதந்தோறும் துண்டு விழா
பட்ஜெட் போடும்
உலகின் சிறந்த நிதியமைச்சர்
என் அம்மா..!
ஹார்வார்டில் மேலாண்மை படித்திருக்கவில்லை
பொருளாதார நிபுணர்களுடன் விவாதிக்கவுமில்லை
பல்கலைக்கழகங்களில் டாக்டரேட் பட்டமும்
பெற்றிருக்கவில்லை
ஆயினும்
மாதந்தோறும் துண்டு விழா
பட்ஜெட் போடும்
உலகின் சிறந்த நிதியமைச்சர்
என் அம்மா..!
பொய் சொல்லாதீர்கள்Originally Posted by Rajeshkumar
துண்டு விழுந்திருக்குமே
உங்கள் அப்பாவின் தோளில்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
துண்டுகள் இப்போதெல்லாம் தோளில் விழுவதில்லை, தலையில்தான்
மதி, உன் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.
நன்றி பிரதீப்..கருத்தொத்தமைக்கு...!
மெய்யாலுமே இது பொய்யல்ல..!Originally Posted by stselvan
கழுத்திலும்Originally Posted by pradeepkt
சிலசமயம்
கடங்காரன்..
விரலுக்கேத்த வீக்கம் என்பார்கள், ஆனால் விரலை மிஞ்சிய வீக்கமாக நம் படிப்புச் செலவுகள் சென்ற போது, எப்படியோ தன் தேவைகளைச் சுருக்கி நம் எதிர்காலத்தை விரித்த என் அன்னையை நினைக்க வைத்தன வரிகள்.........
நன்றிகளும் பாராட்டுக்களும் மதி..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நல்ல கவிதை மதி..
கொஞ்சம் நாட்டை வைத்து யோசித்தால்
நம்ம லல்லு நினைவுக்கு வருகிறார்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உலகின் சிறந்த நிர்வாக மந்திரிகள் நம் வீட்டு அம்மையார்கள் தான்....
அழகான கவி மதி....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks