Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரி...........

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0

    அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரி...........

    மஞ்சள் குளித்த நிலவு
    புன்னகை பூத்த செவ்விதழ்
    என் பத்து வயதில் பரலோகம்சென்றவள்!
    பசை போட்டல்ல பாசம் போட்டு
    ஒட்டிவிட்டவள் நெஞ்சினுள்!

    விருந்தாளி வீட்டுக்கு வந்தால்
    "வாங்க" ஒற்றைச் சொல்லோடு
    சமையற்கட்டுக்குள் ஒளிந்து கொள்வாள்!
    யோசித்ததில்லை அந்த வயசில்!

    அப்பாவை நான் எதிர்த்து பேச
    காலையில் அவள் கண்கள் வீங்கியிருக்கும்!
    புரியமுயற்சித்ததில்லை அவளை!

    பள்ளிப்போகையிலே கனிந்திருக்கும் முகம்
    மாலையில் வீடு திரும்புகையில் கன்னியிருக்கும்!
    காரணம் கேட்டதில்லை அவளை!

    தீர்க்கமாய் ஒருபுன்னகை புரிந்து
    அமைதியாய் அடிக்கடி ஒன்னு சொல்லுவாள்
    "கையில வச்சு தாங்குற புருஷனானாலும்
    சொந்த கால்ல நிக்கனும் நீ!"
    புருஷன்னு கேட்டவுடனே போம்மான்னு
    வெட்கிஓடியது நினைவிற்கு வந்துதொலைக்கிறது!

    திடீரென ஒருநாள் தீக்கிரையாய்
    அவள் ............

    நினைக்க மறந்தாலும்
    மறக்க நினைக்கவில்லை!

    கனவில் அடிக்கடி வருவாள் முன்னெல்லாம்!
    இருவரும் பேசியதில்லை!
    தலை கோதுவாள்!
    கன்னம் கிள்ளுவாள்!
    அவள் சுதந்திரமாய் சுவாசிப்பதாய் எனக்குள் தோன்றும்!
    வேகமாய் விழி திறந்தால் கண்ணீர்
    நனைத்திருக்கும் தலையணையை
    கல்யாணமானதிலிருந்து கொஞ்ச நாளாக் காணோம்
    காத்திருக்கிறேன் இன்றாவது வருவாளானு
    ஒன்னே ஒன்னு சொல்லனும்

    அம்மா
    அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரின்னு........
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:27 AM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    9,523
    Downloads
    133
    Uploads
    0

    அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரின்னு........
    கொஞ்சம் கனமான கவிதை. ஆனால் யோசித்துப்பார்த்தால் பெண்களே தங்கள் வசந்தங்களுக்கு தீ வைத்துக்கொள்கிறார்கள் என்றே குற்றம் சாட்டத் தோன்றுகிறது. கனவில் வந்தாவது கடந்தவை சொல்லியிருக்கலாம் தாய். நடந்தவை தெரிந்தாவது கற்றுத் தேர்ந்திருக்கலாம் மகள்.. கண்கெட்ட பின்பு சூரிய வணக்கம்.
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:28 AM.

  3. #3
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    Re: அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரி...........

    வேகமாய் விழி திறந்தால் கண்ணீர்
    நனைத்திருக்கும் தலையணையை
    மனதை வலிக்க செய்யும் வரிகள்..
    வலியை கவிதையாய் வடித்த
    தோழிக்கு பாராட்டு...
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:30 AM.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நிலா அருமையாக எழுதியுள்ளீர். ஆனால் நீங்கள் கூறுவது போல் எல்லா அப்பனும்.. புருஷனும் இருப்பதில்லை.
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:29 AM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    இது போல ஒரு தாயும் மகளின் கதையையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன் - தைரியமாக சில முடிவுகள் செய்யக் கோரிய பொழுது அவர்களின் தயக்கம், சுற்றியிருக்கும் சமூகத்தின் பேச்சுகள் - எப்படி இதை விட்டு விலகிப் போவது என்றறியாத கலக்கம் - நடக்கத் தான் செய்கிறது இவ்வுலகில்.

    பாராட்டுகள், நிலாவிற்கு.
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:30 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    புருஷனும் அப்பாவும்...
    ஒரே மாதிரி என்று..
    அழகாய் உள்ளத்து வலிகளை சொல்லியுள்ளீர்கள்..
    வரவர உங்கள் கவிதைகளில் ஒரு
    அனுபவம் தெரிகிறது..
    வாழ்த்துக்கள் நிலா...
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:31 AM.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அனுபவத்தில் வந்த கவிதை..
    ஆச்சரியப்பட வைக்கிறது.
    சோகம் வேண்டாம் தோழி.


    பாரதி
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:31 AM.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அனுபவத்தால் அவள் அறிந்தவிதத்தை அருமையாய் சொல்லியிருக்கும் அழகு..

    பாராட்டுக்கள் நிலா...
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:32 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  9. #9
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0

    பெண்களே தங்கள் வசந்தங்களுக்கு தீ வைத்துக்கொள்கிறார்கள்
    வெளியே பென்ணுரிமை பேசி உள்ளே அவர்களை கொடுமை செய்யும் அவலம் இங்கு நடக்கத்தானே செய்கிறது!


    திருடனாய் பார்த்து திருந்தனும்! அம்மா வந்தலும் முடியாது,அக்கம் பக்கம் சொன்னாலும் முடியாது!

    எல்லா அப்பனும்.. புருஷனும் இருப்பதில்லை.
    நான் எல்லோரும் அப்படின்னு சொல்லவில்லையே?
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:32 AM.

  10. #10
    இளையவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நிலா
    பெண்ணின் உணர்வுகளை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. நடைமுறையில் இது யதார்த்தமும் கூட...
    ஆனால் இதற்கு விதி விலக்கான சில அப்பாக்களும், புருஷன்களும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை....
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:32 AM.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் Hayath's Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    DUBAI
    Posts
    241
    Post Thanks / Like
    iCash Credits
    26,204
    Downloads
    53
    Uploads
    3
    நிலா..... நீங்கள் எதார்த்தத்தை வாழ்க்கையில் உண்மையாக நிகழுபவைகளை கூறியுள்ளீர்கள்.ஆனால் உண்மை எப்போதும் சுடவே செய்யும்.அவர்களாக பார்த்து திருந்தினால் மட்டுமே இதை மாற்ற முடியும்.
    ஒரு மகன் தன் தந்தை ....தன் தாயை கொடுமை செய்வதை பார்த்து இதுப் போல தன் மனைவியை நடத்த கூடாது என்று எப்போது நினைக்கிறானோ ...அப்போதுதான் இது சாத்தியம்.

    பாராட்டுகள் நிலா

    சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்- நன்றி :-லாவண்யா
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:33 AM.

  12. #12
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    பாராட்டிய உள்ளங்களுக்கு என் நன்றிகள்!
    Last edited by விகடன்; 19-05-2008 at 10:33 AM.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •