சகலமுமாய்....
சிறுவயதில்...
காக்காகடி கடித்துக்
கொடுத்த கடலை மிட்டாய்..
கொஞ்சம் வயதாகி..
என்னிடம் காட்ட வேண்டுமென்பதற்காக
நீ கட்டிய முதல் தாவணி..
இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின்..
யாருக்கும் தெரியாமல் ஊட்டி விட்ட
நீ செய்த சமையல்..
படிக்க பட்டணம்
போகிறேன் என்றவுடன்
நீ விட்ட கண்ணீர்...
எல்லாம் ஆகி..
நாம் செய்து கொண்ட கல்யாணமும்..
அந்த முதல் இரவும்...
உன் பிரசவத்திற்கு
உன்னை விட அவஸ்தைப்பட்ட
உன் முதல் டெலிவரி...
உண்டு முடித்து நான்
கை துடைக்கும்
உன் முந்தானை...
குழப்பம் நேரும் போதெல்லாம்
தலை வைத்துப் படுக்கும்
உன் மடி...
பிஸினஸ¤க்கென்று
தைரியமாய் நீ
கழட்டிக் கொடுத்த வளையல்...
இப்படி சகலமுமாய்...
என் பால்யம் முதல் இன்று வரை..
பின் எப்படியடி மனது வந்தது
எனை தனியே விட்டு முன்னே போக?
Bookmarks