Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 94

Thread: நவீன நாரதர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12

    நவீன நாரதர்

    சுவாமி!

    உன் எண்ணம் நிறைவேறி விட்டதா?

    நாராயணா! நாராயணா!! நீங்கள் என்னை சந்தேகத்தோடு தான் பார்க்கிறீர்கள். உங்களிடம் விளையாட முடியுமா? திருவிளையாடல்களை நடத்துவதே நீர்தானே!

    நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பார்கள்

    முடியும் என்று சொல்லாதீர்கள் பரமேஸ்வரா!... முடியாத ஒரு முடிப்பிரச்சனை ஒன்று முடிவின்றி ஓடிக் கொண்டிருக்கிறது இத்தளத்தில்.. கங்கையை சடையில் முடிந்த கங்காதரா மங்கைக்கு இடப்பாகம் அளித்த மஹேஸ்வரா... சங்கை அரிந்து வாழும் நக்கீரனுக்கு அருள் புரிந்த சர்வேஸ்வரா! என்கையில் ஒன்றுமில்லை என்பது நீர் அறியாததா?

    சந்தடி சாக்கில் என் இருமண விவகாரத்தை சந்திக்கு இழுக்காவிட்டால் உனக்கு தூக்கம் வராதா பிரம்மபுத்திரா!

    எல்லோரையும் எதாவது ஒரு புத்திரன் என்று அழைக்க முடியும் ஆதியும் அந்தமும் இல்லாப் பரம்பொருளே! உம்மை யார்புத்திரன் என்றழைக்க முடியும்...

    சரி சரி மன்றமெல்லாம் ஒரு வித மணம் வீசுகிறதே கவனித்தீரா! என்ன மணம் அது?

    திருமணம் என்னும் நறுமணம் பரமேஸ்வரா!.. சதாசர்வ காலமாக உமது மூத்தபிள்ளை கணேசரை போல் மால்களிலும் தியேட்டர்களிலும் பெண்தேடிக் கொண்டிருந்த சிலர் தம் தாய்தந்தை கைகாட்டும் பெண்ணையே மணமுடிப்பதாய் முடிவெடுத்து விட்டனராம்...

    என்ன இருந்தாலும் வாழப்போவது இவர்களல்லவா! மங்கை மனதிற்கு இனியவளாய் இருக்க வேண்டும் என்ற கனவு இருக்காதா?

    கனவு காண்பதில் தவறில்லை கௌரிசங்கரா! காதல் என்பது மணத்திற்கு முன்னால் வந்தால் என்ன பின்னால் வந்தால் என்ன? வாழ்க்கையை இனிமையாக்குவது எதிர்பார்ப்பற்ற அன்புதானே!

    சரியாய் சொன்னாய். நீ பிரம்மச்சாரிதான் என்றாலும் மாயையின் வயப்பட்டு பெண்ணாகி ஒரு முறை மணவாழ்க்கையை அனுபவித்திருக்கிறாயே!... சொல்.. எதிர்பார்ப்பற்ற அன்பு என்றால்..

    எவனொருவன் மணம் முடிக்க எண்ணுகிறானோ அவன் முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்..

    சுயபரிசோதனையா?

    ஆம் இறைவா! சுயபரிசோதனை என்பது அகமும் புறமும் கலந்தது.. முதலில் தன் ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.. சிலருக்கு இரத்தப்பிரிவு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்ததாகப் படைக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு குறிப்பிட்ட ரத்தப்பிரிவினரை மணமுடித்தால் மட்டுமே சந்ததி இன்னல்களின்றி ஏற்படலாம்.. அதுமட்டுமின்றி இன்று வரை தாய் கை உணவு உண்டு வளர்ந்திருந்தால் பரவாயில்லை.. பணத்திற்காக அன்னம் விற்கும் உணவகங்களில் உண்டு, உடல் உழைப்பு குறைந்த மக்கள் கொழுப்பு சர்க்கரை என்ற சில தொந்தரவுகளைக் கொண்டிருக்கக் கூடும். அவற்ரை சரிபார்த்துக் கொள்வதும் அவசியம்...

    ஆமாம் நாரதா! திருமணம் முடிந்தவுடன் மணமக்களை இந்த உறவினர் கவனிக்கும் கவனிப்பு இருக்கிறதே.. உண்ண முடியாத அளவிற்கு உணவு.. தின்பண்டங்கள், பானங்கள் என்று படுத்தி விடுகிறார்களே... ஆரோக்கிய உணர்வு உள்ளவர்கள் அளவறிந்து உண்பார்களே!..

    அதற்கடுத்து மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் மஹாதேவா!

    மனதையா!

    ஆமாம் ஆருத்ரா!.. தன்னை நம்பி சிலர் வாழப்போகிறார்கள் அல்லவா.. இனியும் நான் எனது எனக்கு என்ற எண்ணங்கள் தலை தூக்கலாமா?

    என்ன சொல்கிறாய் திரிலோகச் சஞ்சாரியே! நீ சொல்வதைப்பார்த்தால் சுதந்திரத்தை பறிகொடுப்பது போல் இருக்கிறதே?

    இல்லை இறைவா! சுதந்திரத்தை பறிகொடுப்பதல்ல.. சுதந்திரத்தை பாதுகாப்பது!

    குழப்ப ஆரம்பித்துவிட்டாய்.. உன் சப்லா கட்டை சத்தத்தை குறைத்து பொறுமையாகச் சொல்..

    சர்வேஸ்வரா!.. ஒவ்வொரு மணமக்களும் திருமணத்தால் தான் இன்பமடைவோம்.. தமது மகிழ்ச்சி பெருகும் என்று எதிபார்க்கிறார்களே..
    அது தவறு..

    இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.. என் முதல் திருமணம் முடிந்தவுடனேயே நான் பிச்சையெடுக்க வேண்டி வந்ததே!

    அது திருமணத்தின் தவவறில்லை ஆண்டவா!.. பிரம்மன் தலையை நீங்கள் நுங்கு போல் நோண்டி எடுத்ததால் வந்த பிரம்மஹத்தி...

    கல்யாணம் பண்ணி கடனாளி ஆனானே கலியுகத் தெய்வம் வெங்கடேஸ்வரன்..

    அது வீம்புக்கு செலவு செய்து கடனாளி ஆகாதீர்கள் என்று உலகிற்குச் சொன்ன ஒரு பாடமல்லவா? எதை எதையோ சொல்லி கதையை திசை திருப்பாதீர்கள்.. நான் சொல்லவந்ததை முழுதாக சொல்லவிடுங்கள்...

    சரி சொல்.. இன்னும் ஐந்து நிமிடத்திற்கு நான் வாயே திறக்கப் போவதில்லை.

    நான் சொல்லுவதை நீங்கள் வாயைத் திறந்து கொண்டுதான் கேட்கப் போகிறீர்கள்..

    திருமணத்தின் சூட்சமமே எதிர்பார்ப்பற்ற அன்பில்தான் தொடங்குகிறது..
    திருமணத்தினால் நான் சுகமடைவேன் என்று எண்ணுபவன் சுகத்தின் பின்னால் போகிறான்.. அகத்தை, தன் அகத்தவளை தன்னுடைய தேவை தீர்க்க வந்த சேவகியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறான்.. தன் சுகம் தேடியவன் அதை தேடிக்கொண்டேதான் இருக்கிறான். ஏனென்றால் இன்பம் அவனுள் இருக்கிறதே தவிர வெளியே இல்லை..

    அதே சமயம் என்னுடன் வாழ வந்தவளை சந்தோஷமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளின்பம் நோக்குபவன் அளவில்லா இன்பமடைகிறான்.. சந்தோஷத்தினால் தான் சந்தோஷத்தை தர முடியும்.

    இயல்பாகவே மனித மனம் தன்னை சந்தோஷப் படுத்துபவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கத்தான் நினைக்கும்.. யார் முதலில் என்ற கேள்வி எதற்கு?

    உன்னால் உன் மனைவியை, மக்களை, பெற்றோரை சந்தோஷமாய் வைக்க முடியுமா? எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டு நழுவுவதில்லை வாழ்க்கை..

    மனைவியை தன் மிகச் சிறந்த தோழியாய் நினைப்பவன் மனைவியை தன் வழிக்குக் கொண்டு வந்து விடுகிறான்..

    என்றுமே எவரும் எந்த சந்தோஷத்தையும் தனியாய் அனுபவிப்பதில்லை.. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனும் தான்..

    எவனொருவன் தன் மனைவியை தன் மிகச் சிறந்த தோழியாக்கிக் கொள்கிறானோ அவன் பெறும் சந்தோஷத்திற்கு அளவில்லை..


    அதாவது!..

    நீங்கள் ஐந்து நிமிடத்திற்குள் வாயைத்திறந்து பேச ஆரம்பித்து விட்டீர்கள்.. இதற்குத் தண்டனை...

    தண்டனை..

    திங்கள் வரை நான் பேசப் போவதில்லை!!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    [QUOTE=stselvan]சுவாமி!

    எவனொருவன் தன் மனைவியை தன் மிகச் சிறந்த தோழியாக்கிக் கொள்கிறானோ அவன் பெறும் சந்தோஷத்திற்கு அளவில்லை..

    /QUOTE]

    நாரதரோடு ஓர் உரையாடல்
    வீணையின் நாதம் போல்
    வசீகரித்தது.

    நாராயணா நாராயணா,, ,,, ,,

    வாழ்க செல்வா...
    வாழ்க்கையில் வெல்வாய்,,,,


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    நாராயணா நாராயணா......வெளிநாட்டுப் பயணம் இப்படியா முடியனும்...நல்லாருந்தாச் சரி...

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by gragavan
    நாராயணா நாராயணா......வெளிநாட்டுப் பயணம் இப்படியா முடியனும்...நல்லாருந்தாச் சரி...
    (ஆர்வத்துடன்)
    யாருங்க அது?
    நாராயணா...நாராயணா...!

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அருமையாய் கூறியுள்ளீர்கள்..செல்வரே!
    யாருக்கெல்லாமோ வகுப்பெடுக்கணும்னு சொன்னீங்களே..அவங்களுக்கெல்லாம் நல்லா புரிஞ்சா சரி.. கொஞ்ச காலம் கழிச்சு எனக்கும் உதவும்...!
    திங்களை நோக்கி..
    நாராயணா..நாராயணா...

  6. #6
    இளம் புயல்
    Join Date
    17 May 2006
    Location
    FRANCE
    Posts
    103
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0
    அருமை, அருமை...

    தாமரை செல்வரே...

    இவ்வளவு விளக்கிய நீங்கள், இதன் தொடர்ச்சியாக வரும் "குடு குடு" சரித்திரத்தை பற்றி சுவாமிக்கு விளக்கவில்லயே !!!
    அன்புடன்

    ராகா

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by gragavan
    நாராயணா நாராயணா......வெளிநாட்டுப் பயணம் இப்படியா முடியனும்...நல்லாருந்தாச் சரி...

    என்னே உமது மதி நாராயணா நாராயணா......
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by sarcharan
    என்னே உமது மதி நாராயணா நாராயணா......
    அட நாராயணா...
    இது வரைக்கும் அது நீங்கன்னு நெனச்சிட்டிருந்தேன்...எனக்கே தெரியாம யாருப்பா எனக்கு பொண்ணு பாக்கறது..
    நாராயணா..நாராயணா...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    விளையாட்டுப் போதும் நாரதா சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்..

    உங்களாலேயே பொறுக்க முடியவில்லையே!.. இளைஞர்களை எண்ணிப்பாருங்கள் ஈஸ்வரா..

    அதாவது தனது மனைவிக்கு எவனொருவன் தன் மிகச்சிறந்த நம்பிக்கையை, மதிப்பை, அன்பை அளிக்கிறானோ அவன் மகிழ்ச்சியைத் தவிர வேறு காண்பதில்லை...

    ஏற்கனவே ஒருத்தி என் தலைமேல் அமர்ந்து படுத்தும் பாடு போதாதா? மக்களையும் அந்த வேதனையை படச் சொல்கிறாயா? நாரதா நீ போகாத ஊருக்கு வழி சொல்லுகிறாய்...

    அப்படியல்ல அம்மையப்பா! எதிலுமே உடனடி லாபம் எதிர் நோக்கக் கூடாது.. ஒருவன் தன் மனைவியை சிறந்த தோழியாக்கிக் கொள்வதின் மூலம் பாரம் மனைவிக்குத் தான் அதிகமே தவிர அவனுக்கல்ல..

    புரியவில்லையே! இது எப்படி! இரண்டும் ஒன்றும் ஒன்று என்று புதுக் கணக்கு சொல்லுகிறாய்?

    பிறந்த வீட்டில் இருந்து வரும் ஒரு பெண்ணின் மனநிலையை புரிந்து கொள்ளவேண்டும் பிரகதீஸா, அவளின் பெற்றோர்கள், தோழர்கள், உறவினர்கள் என அனைவரையும் விட்டு வருகிறாள்.. இத்தனை இழப்புகளையும் தாங்கி வரும் அவளுக்கு கடலில் கிடைத்த கட்டுமரமாய் இருப்பது கணவனின் ஆதரவு.. ஆரம்பகாலத்திலே எதையுமே ஒப்பிட்டு நோக்கக் கூடிய மனது இருக்கும். நம் தந்தை எப்படி பார்த்துக் கொண்டார், நம் அண்ணனுடன் எப்படி விளையாடினோம் என்று..

    ஆமாம் ஆமாம்.. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் தட்சன் நடத்து யாகத்துக்கு செல்வேன் என்று அடம் பிடித்தாளே சதிதேவி..

    இப்படிபட்ட ஒருபெண், ஆதரவும் அன்பும் மிக்க ஒருதோள் கிடைக்கும் பொழுது சட்டென தழுவிக் கொள்கிறாள்..

    என்ன சொல்கிறாய் நான் அன்பு காட்டவில்லையா?

    அன்பு காட்டியிருக்கலாம், ஆனால் சமத்துவம் காட்ட எத்தனைக் காலம் பிடித்தது நினைவிருக்கிறதா உமக்கு.. சக்தியை வணங்காத முனிவனை வணங்க வைக்கத்தானே பாதியிடம் தந்தீர்..

    சரி சரி... சக்தி வரும் நேரத்தில் பழைய விஷயங்களை கிளராதே மேலே சொல்...

    ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி முற்றிலும் புதிய இடம் என்று வரும்பொழுது இருக்கும் தற்காப்பு உணர்ச்சி என்பது தொட்டாற்சிணுங்கி போன்றது. ஆகையால் புது இடம் வந்தப் பெண் சட்டென எதிலும் தற்காப்பு நடவடிக்கை எடுப்பாள்.. அத்தை ஒரு வார்த்தை சொன்னது சங்கேதமாய் பூடகமாய் தன்னைக் குத்திக் காட்டுகிறதோ.. ஓரகத்தி (ஓர் அகத்தி, ஒரே வீட்டில் வாழவந்தவள், கணவனின் சகோதரன் மனைவி) சொன்னது தன்னையா, இல்லை அவளுடைய அண்ணியையா.. இப்படி பல எண்ணங்கள்..

    கல்யாணம் செய்து கொண்டது அவளும் அவள் கணவனும் தானே இவர்களைப் பற்றியெல்லாம் அவள் ஏன் கவலைப் படவேண்டும்?

    என்ன செய்வது இறைவா, இவர்களேல்லாம் தன் கணவனுக்கு பிடித்த உறவினர்கள்.. இவர்களின் கூட்டத்தில் நம்மைச் சேர்ப்பார்களோ இல்லை ஆட்டத்தில் சேர்க்கமாட்டார்களோ என்ற அச்சம்

    இப்படியே போனால் எப்படித்தான் வாழ்வதாம்?

    இங்குதான் கணவனின் மீது அவள் கொள்ளும் நம்பிக்கை கை கொடுக்கிறது. கணவன் ஆதரவு பெற்ற எந்தப் பெண்ணும் பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் தெளிவாக தைரியமாக இருக்கிறாள்..

    அவர்களெல்லாம் தெளிவாகத்தான் தைரியமாகத்தான் இருக்கிறார்கள். நாம் தான் பயந்து ஒளிந்து..

    அவசியமே இல்லை அரனே! பெண்கள் ஆதிக்கம் செய்பவர்களைத்தான் அவதிக்குள்ளாக்குவார்கள்.. நண்பர்களையல்ல.

    புரியவில்லை...

    சற்று விலகிச் சென்று உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்... நான்கு ஆண்கள் நண்பர்களாக இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. நான்கு காரியங்கள் இருந்தால் ஆளுக்கொரு வேலை என்று செய்வார்கள்...

    ஆமாம் ஆமாம்


    ஆனால் பெண்கள் அப்படியல்ல.. தனித்தனியே செய்யமாட்டார்கள்.. ஒவ்வொரு காரியத்திலும் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்..

    ம்ம்... உதாரணத்திற்கு...

    இரு ஆண் நண்பர்கள் தங்கள் இருவருக்கும் உடை எடுக்கச் சென்றால், அவரவர்களுக்கு வேண்டியதை அவரவர்கள் தேர்வு செய்வார்கள்.. பணம் கொடுப்பார்கள் வாங்கி வருவார்கள்... இரு பெண்கள் சென்றால், முதலில் ஒரு பெண்ணிற்கு தேர்வு செய்வார்கள்.. அது இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.. பிறகு அடுத்த உடை.. அதுவும் இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும்...

    ஓஓஓஓ பெண்கள் உடையெடுக்க தாமதமாகும் காரணம் இதுதானா?

    அதுமட்டுமல்ல, தனி ஒரு பெண்ணாக சென்று ஆடை வாங்கினால் எந்தப் பெண்ணுக்குமே திருப்தி இருக்காது.. ஏதோ வாங்கினோம் உடுத்தினோம் என்றுதான் இருப்பார்கள்...

    சரி சரி மெனக்கெட்டு எதற்கு இந்த உதாரணத்தை சொல்லுகிறாய்?

    இப்படித் தன் தோழியை எல்லாவற்றிற்கும் சார்ந்திருக்கும் ஒரு மனைவி அந்த தோழிக்கும் மேலாய் தன் கணவனை நினைக்க ஆரம்பித்தால்..

    ஆரம்பித்தால்...

    யோசித்துக் கொண்டிரூங்கள் அவசர வேலை இருக்கிறது வந்து சொல்கிறேன்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இப்ப தான் பல விஷயங்க புரியுது...

  11. #11
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    சேலை கட்டும் மாதர்களைப் பற்றி
    இவ்வளவு விஷயங்களா?
    ஆனால் அத்தனையும் உண்மை.
    அகத்தவளுக்குப் பிடித்த ஆடையை
    அவள் ஆடவனே எடுத்துக் கொடுத்து விட்டால்
    பிரச்சினை வராதல்லவா நாரதா?
    Last edited by இனியவன்; 30-06-2006 at 01:30 PM.


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by இனியவன்
    சேலை கட்டும் மாதர்களைப் பற்றி
    இவ்வளவு விஷயங்களா?
    ஆனால் அத்தனையும் உண்மை.
    அகத்தவளுக்குப் பிடித்த ஆடையை
    அவள் ஆடவனே எடுத்துக் கொடுத்து விட்டால்
    பிரச்சினை வராதல்லவா நாரதா?
    கணவன் எடுத்துக் கொடுத்த ஆடை என்ற அன்பும் மரியாதையும் இருக்குமே தவிர பிரச்சனை என்பது வராமல் இருக்கவேண்டும் என்றால் செலக்ஷன் கமிட்டியில் அவள் இருக்க வேண்டும் நண்பரே..

    அதாவது மனைவிக்கு அன்பளிப்பாக அளிக்கும் விஷயங்களைத் தவிர மற்றதை தனியே சென்று வாங்க வேண்டாம்.. . அன்பளிப்புகளை வாங்க துணைக்கு யாரையும் அழைத்துச் செல்ல வேண்டாம்

    காதைக் கொடுங்கள். இதில்ல் இன்னொரு விஷயம் அடங்கி இருக்கிறது..
    அவர்களாக வாங்கினால் உங்க பர்சுக்கு இழப்பு கம்மி..
    Last edited by தாமரை; 30-06-2006 at 01:38 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •