காத்திருக்கின்றேன்.
அன்று ஒரு நாள்
ஆற்றங்கரைதனில்.....
இலைமறை காயாக கண்டேன் அவளை!
ஈர்த்து விட்டாள் என்னையவள்
உண்மை ஒன்று சொல்லவா,
ஊருக்குள் அழகி அவள் மட்டும் தான்
எண்ணில் அடங்கா ஆசைகள்
ஏக்கத்தில் இங்கே தவிப்புக்கள்
ஐமூன்று வயதைக் கடந்தவளே
ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா
ஓடமாய் ஓடுகின்றேன் வழிகளின்றி
ஓளடதமாய் இருப்பாயா என் நோயிக்கு
அஃதே வருவாய் என்று காத்திருக்கின்றேன்.
Bookmarks