Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: நான் கதை எழுதிய கதை...

                  
   
   
  1. #1
    புதியவர் saraa's Avatar
    Join Date
    17 Jun 2006
    Location
    Riyad - Saudi arabia
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0

    நான் கதை எழுதிய கதை...

    எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு அரிப்பு. நாமலும் கதை எழுதுனா என்ன?

    இந்த அரிப்பு ரணமாகி போறதுக்குள்ள கதை எழுதலாம் அப்படின்னு ஒரு குயர் A4 பேப்பர் வாங்கி, நல்லா மார்ஜின் போட்டுட்டு யோசிச்சேன்.

    என்ன எழுதுறது?????????????????

    டேய் சரா... முதல்ல பிள்ளையார் சுழி போடுடான்னு சொன்ன என்னுள் இருந்த ஆன்மீகவாதிக்கு ஒரு சபாஷ் சொன்னேன்.

    பிள்ளையார் சுழி போட்டாச்சு...

    அப்புறம்...

    எத பத்தி கதை எழுதுறது ?????

    முதல் முறையாய் கதை எழுதுற சாமி கதை எழுதுன்னு என் ஆன்மீகவாதி அறிவுறுத்தினான்...

    ச்சி... அடங்கு என்று என் பெரியார் (அதாங்க பகுத்தறிவு) கண்டிச்சார் (கொஞ்சம் மரியாதை )

    அறிவியல் சம்பந்த பட்ட கதை எழுத என் விஞ்ஞானி வலியுறுத்தினான்.


    காதல் கதை எழுத சொல்லி என் ரோமியோ தூண்டினான்.

    கடைசியில் என் சுய அறிவு முழிச்சுகிட்டு...

    தம்பி... நேரமாச்சு தூங்கு நாளைக்கு ஆபிசு போனும்..

    இல்லை ஆப்புதான்னு சொல்லி மிரட்டியது...


    கடைசியில் எதார்த்தம் வென்று என் கதை பிள்ளையார் சுழியேடு நிற்க்கிறது.

    இருந்தாலும் வார கடைசி இருக்குல்லா!!!

    நாங்க அப்ப வருவோம்ல என்று எல்லாரும் அடங்கினார்.

    விரைவில் ஒரு கதை எழுதும் அபாயம் இருக்கிறது.
    வெற்றி வேல் வீர வேல்!!!
    நேசத்தின் சுவாசத்தில்...
    சரா...

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    எழுதுங்கோ..எழுதுங்கோ...
    பேஷா...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அதை எழுதி மன்றத்திலயும் போடுங்க.
    மதிகிட்ட கேளுங்க நல்லாக் கதை விடுவார், மன்னிக்க... சொல்லுவார்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by pradeepkt
    அதை எழுதி மன்றத்திலயும் போடுங்க.
    மதிகிட்ட கேளுங்க நல்லாக் கதை விடுவார், மன்னிக்க... சொல்லுவார்...

    இங்கயும் மதியா!!!!!!!!!!
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இது வரை ஏதும் எழுதிய பழக்கம் உண்டா....

    இல்லையெனில்.. நீங்கள் கண்ட உண்மை சம்பவங்களை ஒட்டி எழுதப்பழகுங்க...... எளிதாக வரும்.....

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by pradeepkt
    அதை எழுதி மன்றத்திலயும் போடுங்க.
    மதிகிட்ட கேளுங்க நல்லாக் கதை விடுவார், மன்னிக்க... சொல்லுவார்...
    ஏங்க..என் மேல இவ்ளோ கோவம்...

    மேற்படி உங்க அளவுக்கு கத வுடற திறமை எனக்கில்ல...ஆமா..
    Last edited by மதி; 22-06-2006 at 04:42 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by saraa
    எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு அரிப்பு. நாமலும் கதை எழுதுனா என்ன?


    விரைவில் ஒரு கதை எழுதும் அபாயம் இருக்கிறது.
    எழுத வேண்டும் கவிதை
    ஏங்கினேன் நான் நெடுநாள்
    புழுதி வாரி
    பூசிக் கொண்டாலும்
    எழுத வேண்டும் கவிதை

    உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள்
    உருப் பெற முடியாத வண்ணங்கள்
    எள்ளி நகைத்தாலும்
    நிமிர்ந்து எழுகின்ற சிங்கங்கள்

    இது ஒரு
    பல தெரு
    சந்திப்பு

    இதில்
    எதுவென தெரியலை
    என் திக்கு

    வெறுமையை நோக்கி
    திறமையை கூட்டி
    போக வேண்டி ஒரு நினைப்பு

    ஆனால்
    அதில்தான் ஏனோ
    ஒரு வெறுப்பு!!!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    யார் மேல வெறுப்பு..செல்வன்??

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by Rajeshkumar
    யார் மேல வெறுப்பு..செல்வன்??
    இப்படித்தான் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமயம் என் கவிதை எழுதும் பழக்கம் ஆ"ரம்பம்" ஆனது..

    அடுத்து எழுதிய கவிதை

    ஆசிரியருக்கு ஒரு ஆசிரியப்பா!!!

    உள்ளத் துறையும் உயர்பெருந் தகைசால்
    தெள்ளத் தெளிந்த அறிவுடை பெரியோய்
    வள்ளட் டன்மையிற் வான்மழைக் கொப்போய்
    உள்ளங் கனிந்தேத் துவதைக் கேளாய்
    பள்ளிச் செல்வமாம் கல்விச் செல்வத்தை
    அள்ளி அள்ளி அன்புடன் ஈந்து
    பாலில் பட்ட பைம்புனல் தன்னை
    பாங்குடன் அன்னம் பகுப்பதைப் போலே
    நூலில் கற்ற நுட்பத்தில் எல்லாம்
    நுணங்கிடும் நன்மையை நுகர்ந்திட வைத்தாய்
    வாழ்வில் வளத்தை வனப்புடன் இணைத்த
    வாழும் தெய்வம் நீயென்றும்
    வாழிய வாழிய வாழிய வே.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    ஏ என முடியும் ஆசிரியப்பானு படிச்ச ஞாபகம். அடேங்கப்பா! ஆசிரியப்பா! கலக்கிட்டீங்க

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    உண்மையாவே கலக்கல் கவிதை...!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    எழுத வேண்டும் கவிதை
    ஏங்கினேன் நான் நெடுநாள்
    புழுதி வாரி
    பூசிக் கொண்டாலும்
    எழுத வேண்டும் கவிதை

    உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள்
    உருப் பெற முடியாத வண்ணங்கள்
    எள்ளி நகைத்தாலும்
    நிமிர்ந்து எழுகின்ற சிங்கங்கள்

    இது ஒரு
    பல தெரு
    சந்திப்பு

    இதில்
    எதுவென தெரியலை
    என் திக்கு

    வெறுமையை நோக்கி
    திறமையை கூட்டி
    போக வேண்டி ஒரு நினைப்பு

    ஆனால்
    அதில்தான் ஏனோ
    ஒரு வெறுப்பு!!!!!
    சபாஷ் வாத்தியாரே...............ஆ ஆ ஓ ஓ (புகழ்கிறேன்)
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •