ஹிட்லர் ஆட்சிக்கு வருமுன், 17 கட்சிகள் பார்லிமென்ட்டில் இருந்தன. பிறகோ, ஹிட்லரின் நாஜி கட்சி மட்டுமே இருந்தது. அப்போது ஒருநாள் பார்லிமென்ட் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இது சம்பந்தமாக வேடிக்கையான கதை ஒன்றை பெர்லினில் கூறுவர்.
பார்லிமென்ட் கட்டடம் தீப்பிடித்து எரிகிறதென்று ஹிட்லரிடம் சென்று கூறினாராம். அப்போது தன்னுடைய கடிகாரத்தைப் பார்த்து விட்டு, "இவ்வளவு சீக்கிரமா?' என்றாராம் ஹிட்லர். கடைசியில், பாவம் ஹாலந்து நாட்டுப் பைத்தியக்காரன் ஒருவனைப் பிடித்து, ஜெர்மன் பார்லிமென்ட் கட்டடத்துக்குத் தீயிட்ட குற்றத்துக்காக துக்கில் போட்டனராம்.
Bookmarks