மன்றத்து நண்பர்களுக்கு,
ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை

)
கேள்வி இதுதான்:
1.
நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)
2.
நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.
இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.
இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.
இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!
இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!
Bookmarks