சாண்டில்யன் படைப்புகளில் கடல்புறா, யவனராணி மிகபிரசித்தமானது.
சாண்டில்யன் படைப்புகளின் களபதிப்புகள்/இணையதளம் இருந்தால், அதுபற்றி யாராவது கூற முடியுமா?
சாண்டில்யன் படைப்புகளில் கடல்புறா, யவனராணி மிகபிரசித்தமானது.
சாண்டில்யன் படைப்புகளின் களபதிப்புகள்/இணையதளம் இருந்தால், அதுபற்றி யாராவது கூற முடியுமா?
Last edited by ராசராசன்; 07-03-2006 at 07:49 AM.
ஐயா யாராவது தெரிஞ்சா சீக்கிரமா சொல்லுங்க.
சரி..! "யவனராணி" எத்தனை பேர் வாசித்திருக்கிறீகள்? துபாய்காரருக்கு பரிச்சயம் உண்டா?
யவன ராணி பலமுறை வாசித்திருக்கிறேன்.
எங்க வீட்டில் கந்தல் கந்தலாக அந்தப் புத்தகத்தை பைண்ட் செய்து வைத்திருக்கிறேன். இணையத்தில் இருக்குமா எனத் தெரியவில்லையே
யவன ராணி, மூங்கில் கோட்டை...இதர சாண்டில்யன் நாவல்கள் வாசித்திருக்கிறேன்..
இப்ப...ஹ்ம்ம்ம்..
இந்த நாவல்கள் எல்லாம் நான் வாசித்ததில்லை... ஆனால்
என் தந்தைக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது... அவர் வாசித்து எனக்கு கதையாக விளக்குவார்,
விளக்கும் போது நான் புரிந்து கொள்ளும் படி எளிதாக சொல்லுவார்,
இடையில் வரும் வசனக்களை வாசித்தும் காட்டுவார்...
அப்பா இறந்த பிறகு எனது அக்காவும்.. பிறகு கல்லூரி தோழிகளும் கதை சொல்லி ஆனார்கள்...
இவரக்ள் சொல்லும் விதம் எனக்கு வாசிப்பதை விட வாசித்து அதை விவாதித்து சொல்லுவது
பிடித்திருந்ததால் இன்று வறை ஒரு முழு நாவல் கூட நானாக வாசித்ததில்லை...
கடல் புறாவும் பாதியில் நிக்கிறது... அடுத்த கதை சொல்லிகாக...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
சாண்டியல் எழுதிய புதினங்களை நான் விரும்பிப் படித்ததில்லை. ஏனோ அவருடைய நடை அந்த அளவிற்குக் கவரவில்லை. ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். பெயர்கள் கூட நினைவில்லை. சிவப்புக் கல் படம் போட்டிருக்கும். இன்னொன்று ராஜபேரிகை என்று நினைக்கிறேன். பிரதீப் கொடுத்ததுதான். ஆகையால் பெயர் அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். பிரதீப்பு, என்னய்யா புதினத்தோட பேரு.
ஏன் அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தெரியாது. ஆனால் அம்மாவும் நிறையப் படிப்பார்கள். ஆனால் சாண்டியல் புதினம் வீட்டில் ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன். மற்ற புதினங்கள் நிறைய வீட்டில் உள்ளன. கல்கி, கோவி, லட்சுமி, ஜெகசிற்பியன், அகிலன், மீ.ப.சோமு இன்னும் பலரின் புத்தகங்களை நாங்கள் விரும்பிப் படிப்போம்.
Last edited by தாமரை; 07-03-2006 at 12:19 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சாண்டில்யனின் புதினங்கள் சிறுவயதில் பல படித்திருந்தாலும், மீண்டும் ஒரு வலம் வரலாமென இருக்கிறேன். இணய இணைப்பிற்கு மிக்க நன்றி, தாமரை செல்வன்!
சரிதான்யா... அது ராஜபேரிகைதான். இன்னொன்று ராஜமுத்திரை.Originally Posted by gragavan
சாண்டில்யன் கதைகள் எனக்குப் பிடிக்கும், அதுவும் அவரது வர்ணனைகள், கொஞ்சம் "இது"வாக இருக்குமல்லவா?
மற்றபடிக்கு இந்திய வரலாற்று நிகழ்வுகளைத் தன்னால் இயன்ற அளவு கதைகளுக்குள் அடக்கி இருக்கிறார் சாண்டில்யன். இதெல்லாம் இருந்த போதும் கல்கி, தி.ஜா, சுஜாதா அளவு என்னையும் சாண்டில்யன் கவர்ந்ததில்லை.
அவரது "மலைவாசல்" ஒரு சிறந்த புதினம்.
Last edited by pradeepkt; 08-03-2006 at 07:55 AM.
சாண்டில்யனின் "இராஜபேரிகை" படித்துத்தான் ஆங்கிலேயரின் முதல் போர் (தேவன்கோட்டை )பற்றியும், ராபர்ட் கிளைவ் ,விஜயகுமார், மராட்டியரின் குதிரைப்படை பற்றியும் கூறியுள்ளார்
Originally Posted by pradeepkt
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
மேலும் சாண்டில்யனின் புத்தகங்களில் சற்று **நெடி அதிகமாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேட்டுள்ளேன்...
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks