கண்ணதாசனின் சேரமான் காதலி படித்து பாருங்கள்..Originally Posted by sarcharan
கண்ணதாசனின் சேரமான் காதலி படித்து பாருங்கள்..Originally Posted by sarcharan
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
போற போக்க பாத்தா பண்பட்டவர் பகுதிக்கு மாத்திடுவாங்க போலருக்கு..
கன்னி மாடம், யவனராணி, கடல் புறா போன்ற புதினங்களை மிகச்சிறப்பாக படைத்துள்ளார்.
கதைகளில் போர் நுணுக்கங்களை அவர் விவரிக்கும் விதமே அலாதி. படிப்பவர்களை நேரடியாக போர்முனைக்கே கொண்டு செல்லும் வல்லமை திரு.சாண்டில்யனுக்கே உரித்தான கலை.
** நெடியை ஒதுக்கித் தள்ளுங்களய்யா! அது பத்திரிக்கை வியாபார நோக்கத்துக்காக அந்த காலகட்டங்களில் சேர்க்கபட்டது.
இவைகள் மின்-புத்தகங்களாக (.pdf)கிடைக்குமா..? அப்படி என்றால் கிடைக்கும் தளங்களின் பெயர்களை தாருங்கள்...
Originally Posted by தேனிசை
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
யவனராணி கதையை இன்று தான் படித்து முடித்தேன், ஆறு மாதங்களாக படிக்கமுடியாமல் இன்று முடித்து விட்டேன். மிகவும் அருமையான கதை.
ஆனாலும் கடற்புறா என்னை மிகவும் கவர்ந்த கதை.
பரஞ்சோதி
அது யாரப்பா பலர்???Originally Posted by sarcharan
நீயே அந்தப் புத்தகங்களை அதற்காகவே ரெண்டு மூணு நாள் வச்சுப் படித்தது எனக்குத் தெரியாதா?
ஹி ஹி அலுவலக டென்ஷனால நாலு நாள் ஆச்சு... வேற ஒண்ணுமில்ல
Originally Posted by pradeepkt
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
கண்ணதாசனின் இன்னொரு கதை உண்டு. அதையும் படித்துப் பார்க்கலாம்Originally Posted by stselvan
பழந்தமிழ் நாட்டுப் (லெமூரியாக் கண்டம் இத்யாதி) பழக்க வழக்கங்களைக் கொண்ட கதைக்களன். ராகவன் அந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்.
ஏய்யா, அந்தப் புத்தகத்துக்குப் பேர் என்ன?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன் சிறு வயதில் தனக்கு சிறந்த போர் அறிவு வரக் காரண்மாக 3 சரித்திர நவீனங்களை ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது, சாண்டில்யனின் கடற்புறா அடுத்தது அகிலனின் வேங்கையின் மைந்தன். மற்றையது கல்கியின் பொன்னியின் செல்வன்.
சாண்டில்யன் ஏற்க்குறைய 65 சரித்திர நவீனங்கள் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. நான் அதில் 63 நவீனங்களை என் பள்ளிப் பருவத்திலேயே படித்து முடித்துவிட்டேன்.... அந்தளவுக்கு நான் அவரின் பரம விசிறி....
கல்கி, அகிலன் கூட என் அபிமான எளுத்தாளர்கள்தான்.
ம்ம்ம்ம்... இப்ப எதையும் படிக்க முடியாமல் இணையமும் வேலையுமா போச்சு...
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
நண்பர்களே உங்களிடம் நல்ல மின்புத்தகங்கள் இருந்தால் eBooks share பகுதியில் ஏற்றலாமே
தோழமையுடன்
சுபன்
சாண்டில்யனின் பரம ரசிகன் என்ற வகையில் சில விளக்கங்கள்
அ) கடல்புறாவிற்கும் யவனராணிக்கும் இணையாக இன்னமும் ஒரு சரித்திர நாவலை நான் படித்ததில்லை
ஆ) சாண்டில்யனின் கதைகளில் வரும் வில்லனுக்கு கதாநாயகனுக்கு இணையான வீரம் மற்றும் மதியூகம் இருக்கும்
இ) சில நண்பர்கள் சொல்லும் அந்த **நெடி அழகிய கவித்துவமான வர்ணனையில் இருக்கும்
ஈ) போர் வியூகங்களைப் பற்றிய சாண்டில்யனின் வர்ணனைகளைப் படித்தால் நாமும் யுத்த களத்திலேயே இருப்பது போலத்தோன்றும்
உ) ஒற்றர்களுக்கு வேண்டுமென்றே தவறான தகவலை வில்லன் பரப்ப கதாநாயகன் மாறு ஏற்பாடாய் தகவலை நம்பாமல் வேறிடம் போக, வில்லன் முதலில் பரப்பிய தவறான தகவல்படி உள்ள இடத்தையே தாக்க ஆரம்பிக்க, கதாநாயகனின் மற்றுமொரு படைப்பிரிவு அங்கும் தயாராய் இருக்க, திரும்ப நினைக்கும் வில்லன் படைகள் பின்புறம் இருந்தும் மற்றொரு படைப்பிரிவு சூழ்ந்து கொள்ள (சாண்டில்யன் சொல்லும் வியூக உதாரணம் பாக்கு வெட்டிக்குள் மாட்டிக்கொண்ட பாக்கு வெட்டுப்படுவது போல) அந்த யுத்த வர்ணனையும் தீட்டப்படும் திட்டங்களும் இன்னமும் கண்முன் விரிகிறது
ஊ) சரளமான் மணிப்ப்ரவாக நடை. ஒரு பாராவில் ஒரே ஒரு முற்றுப்புள்ளிதான் இருக்கும். ஆனால் வர்ணனைகள் அத்தனையும் தெள்ளத்தெளிவாகப்புரியும்
எ) அருமையான இலக்கிய வர்ணனைகள், எளிமையாய் எடுத்தாளப்பட்ட சமஸ்கிருத வரிகள்
ஏ) கதை நெடுக்க சரித்திர சான்றுகளை கொடுத்துக் கொண்டே செல்லும் மிகுந்த புலமை
சொல்லிக்கொண்டே போகலாம், முற்றுப்புள்ளி வைக்காமல் சாண்டில்யனின் கதைப்பத்தி போலவே.
Last edited by அமரன்; 31-01-2008 at 04:33 PM.
சாண்டில்யன் ஒரு சகாப்தம். கல்கி, அகிலன் மற்றும் சாண்டில்யன் அவர்களுக்கென்று தனி நடை; ஒருவர் மற்றவருக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களல்லர். இளசுவிடம் கேளுங்கள், தி.ஜ.ரவின் 'மோக முள்'ளை ஒரு கவிதையாக்கி கூறியதுபோல் இதற்குமொரு கவிதை தரக்கூடும்.
அன்புடன் கேஷ்
மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks