Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 48

Thread: தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12

    தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!

    தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!


    உள்ளத்தில் உருவாகி உயிர் மூச்சில் கருவாகி
    உலகத்தில் பிறந்தாயடி - நீ
    பள்ளத்தில் பாய்ந்து வரும் பைம்புனல் போலிந்த
    பக்தனை கவர்ந்தாயடி
    அள்ளக் குறையாத அறிவென்னும் செல்வத்தை
    அடிமைக்குத் தந்தாயடி - என்
    உள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி
    உட்கார்ந்து கொன்டாயடி


    எண்ணத்தில் உனைக்கொன்டு ஏட்டில் எழுதிவைத்து
    எம்புலவர் வளர்த்தாரடி - பல
    வண்ணத்தில் உனைப்பாடி வனப்பூட்டும் அணியாக்கி
    வஞ்சியுனக் களித்தாரடி
    மண்ணுக்கு எட்டாத மாண்புகழ் அமுதுக்கு
    மணம்செய்து தந்தாரடி - எந்தன்
    கண்ணுக்கு கண்ணான காரிகை உன்காலில்
    காவலர் பணிந்தாரடி


    காவிரி நதிதந்த கர்னாடக நாட்டினது
    கன்னடத்தை யீன்றாயடி - உயர்
    மாவரைகள் சூழ்ந்திட்ட மண்ணும்புகழ் கேரளத்து
    மலையாளம் யீன்றாயடி
    தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
    தெலுங்கை நீதந்தாயடி - இசைத்
    தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
    திராவிடம் படைத்தாயடி


    விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
    வேறொருவர் கிடையாதடி - பாரில்
    உருதோன்றி நிலையாகி உயர்ந்தநிலை எய்தியவர்
    உனையன்றி வேறாரடி
    அருள்தோன்றும் முகமாகி ஆனந்த மயமாகி
    ஆளவந்தாய் நீதானடி - வீசி
    வருந்தென்றல் காற்றினைப்போல் வானத்துச் சூரியன்போல்
    வையத்தில் வாழ்வாயடி.
    Last edited by தாமரை; 30-12-2005 at 11:10 AM. Reason: Changed to better heading

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12

    அநியாயம்!!!

    தமிழைக் குழந்தையாக்கித் தாலாட்டினால் 15 பேர்தான் பார்த்தார்களா? அநியாயம்!!! அநியாயம்!!!

    இதைக் கேட்பதற்கு ஆளில்லையா?

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    எல்லாரும் பாத்தாங்க செல்வன்.
    ஆனாப் பாருங்க தாலாட்டில மயங்கித் தூங்கிப் போயிட்டாங்க... மலையாளம் தெலுங்கு எல்லாத்தையும் ஈன்று கொமரியாகிட்ட தமிழுக்கு எதுக்குய்யா தாலாட்டு?
    ஆனா கடைசியில ஒரு வாழ்த்து போட்டிருக்கீங்களே, அது நிறைவேறட்டும்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by pradeepkt
    எல்லாரும் பாத்தாங்க செல்வன்.
    ஆனாப் பாருங்க தாலாட்டில மயங்கித் தூங்கிப் போயிட்டாங்க... மலையாளம் தெலுங்கு எல்லாத்தையும் ஈன்று கொமரியாகிட்ட தமிழுக்கு எதுக்குய்யா தாலாட்டு?
    ஆனா கடைசியில ஒரு வாழ்த்து போட்டிருக்கீங்களே, அது நிறைவேறட்டும்.
    இது "தாய்க்கு ஒரு தாலாட்டு" பா

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    தாய்க்கு ஒரு தாலாட்டா? தமிழுக்கு ஒரு தாலாட்ட?

    பேசாம தாய்த் தமிழுக்கு ஒரு தாலாட்டுன்னு சொல்லீருங்க. அதுதான் பெஸ்ட்.

    நல்ல தாலாட்டு. ஆனா தமிழ் தூங்க வேண்டியதில்லை. அதுனால தமிழ் உலா, அம்மானை, காப்புன்னு எழுதுங்க. அதையும் ரசிச்சுப் படிக்கிறோம்.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஏன் பிள்ளைத்தமிழை விட்டுட்டீங்க...
    நேத்திக்கு ஆழ்வார்கள் - ஒரு எளிய அறிமுகம் படிச்சிட்டு இருந்தேன். நா.தி.பி.ல பெரியாழ்வார் என்னமா பிள்ளைத்தமிழ் எழுதியிருக்கார்???
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by pradeepkt
    ஏன் பிள்ளைத்தமிழை விட்டுட்டீங்க...
    நேத்திக்கு ஆழ்வார்கள் - ஒரு எளிய அறிமுகம் படிச்சிட்டு இருந்தேன். நா.தி.பி.ல பெரியாழ்வார் என்னமா பிள்ளைத்தமிழ் எழுதியிருக்கார்???
    பிள்ளைத்தமிழ்... அறிமுகம் செய்யுங்களேன்.. இதன் அடக்கம் என்ன

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
    தெலுங்கை நீதந்தாயடி

    இது சரியா? தெலுங்கும் தமிழ் போன்று தொன்மை மொழியென்றும் இது தமிழிலிருந்து வந்த்ததல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    கன்னடம்கூட சமஸ்கிரதம், மராட்டி ஆகிய மொழிகளின் வழிவந்தது என்று கேள்வி, ஆனால் கன்னடத்தில் சம்ஸ்கிரதம், மராட்டி அளவு தமிழும் கலந்துள்ளது என்று மற்றவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது.

    மலையாளம் - நிச்சயம் தமிழிலிருந்து வந்ததுதான்.

    சிங்களம் எப்படி. அதில் தமிழின் சாயல் இருக்கிறதா?

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் சுபன்'s Avatar
    Join Date
    26 Jan 2006
    Location
    கனடா
    Posts
    292
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    50
    Uploads
    4
    Quote Originally Posted by aren

    சிங்களம் எப்படி. அதில் தமிழின் சாயல் இருக்கிறதா?
    ஆம் நண்பரே சிங்களத்தில் தமிழ் சாயல் சில இடங்களில் உண்டு.

    உதாரணம்:- சிங்களவர் இரவை 'ராத்திரி' என்றே அழைப்பர்
    தோழமையுடன்
    சுபன்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    வார்த்தைகளை விடுங்கள்.. இலக்கண அடிப்படியை எடுத்துக்கொள்ளுங்கள். உயர்திணை அஃறிணை வட இந்திய மொழிகளில் கிடையாது... தென்னிந்திய மொழிகளில் உண்டு..
    வாக்கிய அமைப்பும் தென்னிந்திய மொழிகளில் ஒன்றுதான்..

    தமிழை தோற்றுவித்தவர் அகத்தியர் என்பார் வட நாட்டார். ஆனால் அகத்தியர் தமிழ் இலக்கணத்தை தொகுத்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் தமிழ்தாய் வாழ்த்தை அடிப்படையாய் கொன்டு இதை எழுதி உள்ளேன்.

    தென்னிந்திய மொழிகள் ஒன்றாய் தோன்றி இருக்கலாம்.. அல்லது ஒரே மொழி பல மொழிகளாக மருவி இருக்கலாம். எது முதலில் என்பது ஆராய வேன்ட்டிய ஒன்று.

    ஆனால் வடவிந்திய மொழிகளின் இலக்கணத்தையும், தென்னிந்திய மொழிகளின் இலக்கணத்தையும் ஆராய்ந்தால் அவை வேறு இவை வேறு என்று தெரியும். ஒன்றிற்கொன்று அருகருகே இருப்பதால் வார்த்தைகள் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு கலப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

    தமிழ், கன்னடம், மலயாளம் மற்றும் தெலுங்கின் அடிப்படைகளையும், மராட்டி, இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி, பெங்காளி போன்ற மொழிகளை பற்றி அறிந்ததினால் சொல்கிறேன்.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    எனக்குத் தெரிந்தவரை மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளின் எழுத்து வகைகள் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தன.
    ஆனால் சொற்கள் தென்னிந்திய மொழிகளுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் சமமாகவே வழங்கியுள்ளன. மலையாளத்துக்கும் கன்னடத்துக்கும் கொஞ்சம் அதிகமாகத் தமிழ் கொடுத்திருக்கிறது.
    தமிழைத் தவிர மற்ற மொழிகள் எழுத்து வடிவம் பெற்ற காலத்தில் வேதம் படித்தவர்களே அதிகமாக எழுத்தறிவு பெற்றதன் காரணமாகவே சமஸ்கிருதம் போன்று எழுத்து வகைகள் அமைந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

    இந்தக் கூத்தில் அன்னைத் தமிழில் வந்து பல பிறமொழிச் சொற்கள் கலந்ததையும் வருத்தத்தோடு நினைவு கூர்கிறேன். தமிழனின் "வந்தாரை வாழ வைக்கும் பண்பு" இதிலும் தொடர்ந்தது வேதனை!
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by pradeepkt
    இந்தக் கூத்தில் அன்னைத் தமிழில் வந்து பல பிறமொழிச் சொற்கள் கலந்ததையும் வருத்தத்தோடு நினைவு கூர்கிறேன். தமிழனின் "வந்தாரை வாழ வைக்கும் பண்பு" இதிலும் தொடர்ந்தது வேதனை!
    விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
    வேறொருவர் கிடையாதடி


    உங்கள் ஏக்கம்.. எனது வரிகளில் ஏற்கெனவே பதிந்து விட்டது நண்பரே!!!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •