தமிழன்னைக்கு தாலாட்டு.
அற்புதம். பாராட்டுக்கள் தாமரை அண்ணா
தமிழன்னைக்கு தாலாட்டு.
அற்புதம். பாராட்டுக்கள் தாமரை அண்ணா
- இசைத்
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி
துளு என்பது மங்களூர் பகுதியில் பேசப்படும் ஒரு மொழி. அதுவும் திராவிட மொழிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. துளு மொழி கன்னடம் கொங்கணி கலந்த ஒரு இனிமையான மொழி.. காதுக்கு இசைத் தூறல் போல இருக்கும். (என் உடன் பணிபுரிவோர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்) அதான் இசைத்தூவானம்.. தெலுகு, கன்னடம், மலையாளம், துளுவம் என மக்களை ஈன்று திராவிட நாட்டுக்கே தாயானவள் தமிழ்..
முதல் விருத்தத்தில் தமிழ் குழந்தையாய்,
இரண்டாம் விருத்தத்தில் தமிழ் கன்னியாய்,
மூன்றாம் விருத்தத்தில் தமிழ் தாயாய்,
நான்காம் விருத்தத்தில் தமிழ் ஒரு பேரரசியாய்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தமிழைக் குழந்தையாக்கி பாடிய சந்த லாலி அருமை தாமரை. சிறந்த தமிழ் உணர்வு உங்களிடம் குடி கொண்டிருக்கிறது. விசாலப்பார்வையில் இன்னும் பல கவிதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.(றோம்)
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
மறைபொருளாய் நின்ற மாதவத்து மாதரசி தன்
மனமொப்ப நிற்பவர்க்கு முழுயவனம் காட்டுவாள்
தாழ்மையோடு அவள் முகத்தைக்
காட்டுமாறு கேட்டுனின்றால்
அங்கத்தின் ஒரு பகுதி அவர்தம்
தரம் அறிந்து அன்னையவள்
தன்னழகை அளவோடு வெளியிடுவாள்
ஒருவர்க்கு திருப்பாதமும் உரத்து
அழுவோர்க்கு உதவிடும் திருக்கரமும்
முப்பாலாம் தமிழ்ப்பால் வேண்டி
தாகத்தோடு இருப்போர்க்கு தன் அங்கம்
முழுவதும் அன்புடனே அன்னைஅவள்
அமுதசுரபியாய் அள்ளி வழங்குவாள்
இதைத்தான் தங்களுக்குச் செய்திருக்கிறாள் திரு தாமரை. தன் அங்கத்தின் அனைத்துத் திரு அழகையும் உங்களுக்கு அள்ளி வழங்கியிருக்கிறாள். என்ன நடை. எப்பேற்பட்ட வார்த்தைப் பிரயோகம். அசத்தியிருக்கிறீர்கள் திரு தாமரை, வாழ்த்துக்கள்,
இன்றுதான் தங்கள் தாலாட்டினைக் கண்டேன். அன்னை அவள் அருட் கொங்கை பொழிந்த தமிழ்ப்பாலை மூச்சு முட்டக் குடித்த ஆரோக்கியம் தங்கள் கவிதையில் கண்டேன்.
என் பெண்ணைக் கொண்டு முழு விருத்தமாக பண்ணோடு இசைக்க வைத்தேன். அன்னைக்கே தாலாட்டுப்பாடிய அன்பு மகனை அவள் னினைத்து னினைத்து பெருமையுறுவாள், சர்வ அலங்காரங்களுடன் வலம் வரும் உற்சவ அன்னையின் திருஉருவை தங்கள் கவிதைவரிகள் தந்தது.
மிகத் தாமதமாக சுவைத்தது ஒரு குறைதான்,
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
முதல் விருத்தத்தை நீலாம்பரியிலும்
இரண்டாவது விருத்தத்தை ஆனந்தபைரவியிலும்
மூன்றாவதை சிந்துபைரவியிலும்
நான்காவதை மத்யமாவதியும்
பாடி முழு இசை வடிவம் தந்தாயிற்று. முடிந்தால் MP3 வடிவத்தில் அனுப்பி வைக்கிறேன். நன்கு அமைப்பான விருத்தம் பாடக்கூடிய சந்த நடைதான் இக் கவியின் சிறப்பே.
இந்த ராகங்களுக்கும் நான் கூறிய பருவங்களுக்கும் எதாவது தொடர்புகள் உண்டா?
நீலாம்பரி ராகம் தாலாட்டுதானே - குழந்தைக்கு...
ஆனந்த பைரவி - வளரும் பெண் + மணம்
சிந்து பைரவிக்கும் தாய்மைக்கும் சம்பந்தம் உண்டா?
கம்பீரமான ராகம் எது?
முதல் விருத்தத்தில் தமிழ் குழந்தையாய்,
இரண்டாம் விருத்தத்தில் தமிழ் கன்னியாய்,
மூன்றாம் விருத்தத்தில் தமிழ் தாயாய்,
நான்காம் விருத்தத்தில் தமிழ் ஒரு பேரரசியாய்..
இந்த ராகங்களையும் பருவங்களையும் பொருந்துமாறு செய்தால் எவ்வளவு அழகாய் இருக்கும்?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நீலாம்பரி.. பிடித்தால் விடாத இராகம்.. (படையப்பா நீலாம்பரி கேரக்டர் மாதிரி)
ஆனந்த பைரவி, சிந்து பைரவி மனதை கொள்ளை கொள்ளும்..பொருத்தமானது..
கம்பீரம் என்றால் தர்ப்பார் இராகம் தாங்க.. மத்தியமாவதி பாட இலகுவான இராகம்.. புதியவர்களை கவரும் இராகம்.. அதனாலதான் சங்கீத ஆரம்ப அப்பியாசங்கள் அந்த இராகத்தில் அமைந்துள்ளன..
சாலை அய்யா.. எப்போ கிடைக்கும் இசை வடிவம்..
என் திருத்தவப் பயன் என் அமையே அப்பா..
அந்த காலத்து சூப்பர் ஸ்டார் தியாகராஜா பாகவதர் பாடல் தர்பார் ராகம் என்று நினைக்கிறேன் சரியா அமரன், ஜெய்ராம் ஐயா..
அன்புடன் ஆதி
சரியாக இருக்கவேண்டும்.. வட இலங்கை சங்கீத சபையின் பாடவிதானத்தில், இப்பாடலைக் கண்டதாக நினைவு.. பயன்படுத்தியதாகவும்...
அமரன் கம்பீரத்திற்கு காம்போதிதான். மிகைப்படுத்தாத யார் கையாண்டாலும் அவர்களை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அற்புத இராகம்.
தர்பாரிகானடா வேண்டுமானால் சற்று கம்பீரமாக இருக்கும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks