அவனை
மலரென்று சொன்னால்
வண்டும் உறவாடும்!
வானென்று சொன்னால்
மேகம் மோகம் கொள்ளும்!
நிலவென்று சொன்னால்
சூரியன் துணையிருக்கும்!
வெயிலென்று சொன்னால்
நிழலும் நின்றிருக்கும்!
மழையென்று சொன்னால்
மண்ணும் மகிழ்ந்திருக்கும்!
காற்றென்று சொன்னால்
கடப்போரைக் கவர்ந்திழுக்கும்!
யாவரும் உரிமையோடு உறவுகொள்ள
அவன் என்ன பொதுச்சொத்தா?
அவன் என்னவன்......
ஒப்பீட்டில் அடங்காதவன்!
Bookmarks