எங்கள் ஊரில் மாலை நேரங்களில் கபடியும், சிலம்பாட்டமும் விளையாடுவோம். என் ஆள் கிடைத்த புதிதில் கபடி விளையாடும் இடத்திற்கு சென்றிருந்தேன், பார்க்க போனால் பார்த்துவிட்டு வரவேண்டியது தானே.
சும்மா இருக்கமுடியாமல், அங்கிருந்த சில்லர செட்டுகள் எல்லோரும் எங்கலோடு விளையாடுங்கள் என்று கூற, நானும் சரி சின்ன பசங்க தானே என்று கோதாவில் இறங்க... ஆட்டம் துவங்கியது.
இரண்டாவது முறையாக பாடி போகும் போது சின்ன பசங்க என்ன பிடிச்சுட்டாங்க..... அய்யோ.................. கஷ்டம்.
நான் வீட்டிற்கு போகும் முன், என்னவளுக்கு தகவல் கிடைத்து சுடு தண்ணீர் வைத்து காத்திருக்கிறாள். மௌன சிரிப்பு வேறு.
இது எப்படி??
Bookmarks