எனக்கு கதை மாதிரி எல்லாம் போடதெரியாதா.. அதானால்... ஒரு வரிகளில்...
+2 செய்முறை பரிச்சை இன்னும் 10 நாட்களில்....
அப்புறமா "xxxxx" வை பார்க்கமுடியாது...
முடிவேடுத்துவிட்டேன்... என் காதலை எப்படியாவது சொல்லி விடுவது என்று..."xxxxx" என்னுடைய பள்ளியில் புதியதாக சேர்ந்து இருந்த ஆசிரியைகளில் ஒருவர்...
எனக்கு ஆங்கிலம் நடத்தினார்... அவர் பாடத்தின் போது சொல்லும் சிறு சிறு ஜோக்குகள்... பாடத்தை கதையாக சொல்லுவது.. எல்லாம் எனக்கு பிடித்து போயிருந்தது, அதர்க்கு மேல் அவரையும் தான்.....
இரவு முழுக்க கண்விழித்து.. புல் ஸ்கேப் பேப்பரில் 3 பக்கத்திற்க்கு ஒரு கடிதம் எழுதி அவருக்கு கொடுத்தேன்... அவர் அதை அப்படியே என் வகுப்பு ஆசிரியையிடம் கொடுக்க... அவர் அதை என் வகுப்பில் அனைவர் முன்னே வாசிக்க... என் மானம் கப்பலேறியது....
இது ஒரு புறம் இருக்க.... என் வகுப்பு மானவர்கள் 9 பேர் சேர்ந்து பனக்கள்ளு குடிக்க சென்றனர்... அதில் 4 பேர் முதலில் சென்று நிரைய குடித்து விட்டு, தூரமாக ந்ன்ற 5 பேரையும் காண்பித்து அவர்கள் காசு கொடுப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றனர்... ஆனால் இவர்கள் 4 பேரும் அந்த 5 பேரிடம் சென்று "நாங்கள் 100 ரூபாய் கொடுத்து இருக்கிறேன்.. குடித்து விட்டு, மீதியை வாங்கி வாருங்கள்" என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆக.... அப்பாவி பயக்க 5 பேரும் நல்ல குடித்துவிட்டு.."ஓய்.. மீதி பைசா..." என்று கேட்க... அந்த வியபாரி... அதில் ஒருவனின் சட்டையையும், ரிக்காட் புக்கையும் வங்கி வைத்து விட்டு அனிப்பி விட.. இதை அந்த பையன் வீட்டினர் அறிய.. அவர்கள் பள்ளிக்கு வர..அதுவும் ஒரு பிரச்சினையாக... இப்படியாக... ஒரு ஊரைவிட்டு ஓடிபோகும் திட்டம் எங்கள் நாலு பேருக்கு வந்தது...
அப்படியே பெங்களுர் வந்திரலாம் என்று வீட்டில் இருந்த காசு திருடிவிட்டு (சத்தியமா..அதுதான் முதலும் கடைசியும்) நண்பர்களை தேடி சென்றல்.. ஒருவன் வீட்டில் மாட்டி விட... மற்ற மூவரும் பஸ் நிலையம் வர... அதில் அடுத்தவனும் எஸ்கேப் ஆக... "தமிழன் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டான்" என்று துவங்கியது என் பயனம்...
நாகர்கோவில் வந்து ஒரு நண்பன் விட்டில் சீருடையை மாற்றி மீண்டும்... திருநேல்வேலி பஸ் நிலையம் வந்து.."எங்களை தேட வேண்டம்" என்று வீட்டிற்க்கு ஒரு கடைதம் எழுதி போட்டு விட்டு... இருக்கும் போதேய்... என்னுடம் இருக்கும் அன்பு நண்பன் "ஜீவா" ..நான் +1 வரை படித்த இடம் தூத்துகுடி அங்கு முதலில் செல்லலாம் என்று கூற... சரி... என்று நாங்கள் தூத்துகுடிக்கு பஸ் ஏறினோம்....
இரவு 11 மணிக்கு தூத்துகுடி பஸ் நிலையம் வந்த நாங்கள், அவன் படித்த "கால்டுவேல்" பள்ளீக்கு சென்று சுவர்ரேறி குதித்து கஸ்டல் சென்றோம்... அங்கு எல்லோரும் நைட்டு ஒருமணிக்கும் உட்கார்ந்த்து ரெக்காட் எழுதிகொண்டு இருந்தார்கள்.... சரி என்று அஙு படுத்தோம்.. காலை 4 மணிக்கு ஒரு மானவன் வந்து எங்களை எழுப்பி "வார்டன் வார நேரம்...அதனாலா போயிடுங்க என்று சொல்ல... திரும்பவும் சுவறேறி குத்தித்து... ரயில் நிலையம் வந்து பிளாட் பாரமில் படுத்தோம்...
ஜீவா... நாம் செய்வது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை சென்டிமென்டலாக கூற... சரி திரும்பி செல்லலாம் என்று முடிவேடுத்தோம்.... ஆனால்... வந்ததே வந்தாச்சு... நல்லா ஊரு சுத்தி பாத்திட்டு போகலாம் என்று முடிவேடுத்தோம்....
மறு நாள் கலை ..ஜீவாவின் தூத்துகுடி நன்பர்கள் எல்லம் எனக்கும் நண்பர்கள் ஆனார்கள்.... ஸ்பிக், கார்பர் எஸ்டேட், டேர்மல் என்று எல்லா பகுதியிலும் உள்ள நண்பர்களையும் சேர்த்து கொண்டு.. கும்மாளம் துவங்கியது...
மாத கோவில் பக்கம் கண்ணன் என்று ஒரு நண்பர் டீ கடை வைத்திருந்தார்.. அவர் கடை எங்கள் இருப்பிடம் ஆனது... ஒரு TVS50 எங்கள் புல்லட் ஆனது... (அதில் எப்போதுமே மூன்று பேர் தான்)...
நாங்கள் வீடு திரும்புவதர்க்கு முந்தய தினம்... கார்பர் சென்று கப்பள் பார்க்க வேன்டும் என்று நான் சொல்ல ... நண்பன் ஒருவன் எப்படியோ அனுமதி வாங்கி வந்தான்...
நான், ஜீவ, தேவ்வானத் என்று மூரு பேயரும் அந்த TVS50 யில் கப்பலை சுற்றி பாற்ற்க சென்றோம்... கப்பலில் அறைகள் எப்படி இருக்கும் என்று பார்க்க நான் ஒரு அறையை திறக்க, அங்கு ஒரு காலி பீர் பட்டிலும் ஒரு பாக்கேட் சிகரெட்டும் இருந்தது.. அதை ஜீவ அமுக்க, பயந்து வெளீயெ வந்தோம்.. அப்போது ஒரு ஆபிசர் சீருடையில் வந்து "என்ன?" என்று கேட்டார்... நாங்கள் "உங்கள் அறையை கான்பிக்க முடியுமா??" என்று கெட்ட்க , அவர் சரி என்று எங்கோ அழைத்து சென்றார்... பயந்து பயந்து நாங்கள் சென்றது "கட்டுப்பாட்டு அறை"... அஙு இருந்த ரேடார் எல்லாம் பத்துக்கிட்டு... வேளியே வர ..ஆரம்பித்தது பிரச்சினை....
வேற ஒன்னும் இல்லை மழை... கொடும் காற்றுடன் மழை... கப்பலின் படியை மேலே தூக்கிவிட்டார்கள்... அதுவேர பயமா போச்சு... சரி நல்ல மழையா இருக்கே என்று ஜிவா தன் பாக்கேட்டில் இருது திருடிய சிகரெட் பாக்கெட்டை எடுத்து பிரிக்கு... அதனுள்ளே ஒரு "பீடி"....
கடிசியா மழை நின்றது... வெளியே வந்து நம்ம புல்லட்டை ஸ்டர்ட் பன்னினால்.. என்னை பார்த்து "போடங்கோய்யா!!! என்று சிறித்தது.... கடைசியில் கஸ்டபட்டு ஸ்டர்ட் செய்து வேலியே வரும் வளீயில் ரோடு முடுக்க தண்ணிர்... எதிரே வந்த லாரி தண்ணிரை மேலே அடித்து விடுவானோ என்று நான் கையை காண்பிக்க... அவன் நிறுத்தினான்... நிறுத்தி முறைத்தான்... எனக்கு கோபம் வர... அசிங்கமான கேட்ட வார்த்தையில் நான் அவனை திட்ட... அவன் அப்படியே அந்த லாரியை அந்த சிறிய ரோடில் திருப்பி எங்களை துரத்தினான்... நாங்கள் எங்கள் TVஸ்50 நல்லா விரட்டிதாண் பாத்தோம்... கடைசியா வண்டியை ஓட்டிய ஜீவாவுக்கு ஒரு ஐடியா வந்து வண்டியாய் ரோடின் எதிர் புறம் சென்று நிறுத்தினான்... லாறி ஓட்டுனன் ஒரு கம்பியை எடுதுக்கோன்டு எங்களை அடிக்க வர.. அப்ப பாத்து போலிஸ் வர.. அப்படா.... தப்பிச்சோம்...
அன்று இரவு மீண்டும் வண்டி பிடித்து வீடு வந்தோம்... காலை 4 மணிக்கு என் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு தாண் இருந்தது...நான் வீட்டின் கதவை தட்ட... அண்ணனும் அம்மாவும், அக்காவும் கதவை திறந்தார்கள்... அவர்கள் உறங்கி இருக்கவில்லை... எதுவுமே சொல்லாமல் என்னை பார்த்த என் அண்ணனிம் ஏதோ கிடைக்காதது கிடைத்த திருப்தியும்... அக்காவின் விம்மலும்... என் வாழ்க்கையை மாற்றி இருந்தன... அழுது கொண்டே என்னை கட்டிபிடித்த அம்மாவின் கண்ணீர் என்னில் இன்னும் ஈரமாய்.....
Bookmarks