ஒருவருக்கொருவரென்று
உள்ளங்கள் இணைந்த போது
உருவகம் கொண்டதங்கே
உண்மையான குடும்பமொன்று
மோகமும் ஆசையும்
முழுவதுமாய் முடிந்தபோது
இடையிலே விரிசலொன்று
எட்டிஎட்டிப் பார்த்ததங்கே
சுற்றமும் சூழலுமாய்
சுத்திச்சுத்தி சுருதி போட
சுகமெல்லம் சொற்பமாக
சோகங்கள் சூழ்ந்ததங்கே
விதியாலே இணைந்த காதல்
வீதியிலே வந்தபோது
காதலும் கானலாகிக்
காணாமல் போனதங்கே
உண்மையாய் காதலித்தால்
உணர்விலே ஒன்று பட்டால்
மற்றவர் சொல்வதெல்லாம்
மறைந்து நின்றாடிடுமோ
காதலிப்பதென்று சொல்லி
காதலையழிப்பதை விட்டு
காதலுடன் அறிவு சேர்த்து
காதல் கொள்வோம் வாரீர்
உண்மையான காதலென்றால்
உணர்வுகளைப் பரிமாறி
உயிர்களும் இடம் மாறி
ஒன்று பட்டு இருப்பதன்றோ
Bookmarks