Results 1 to 10 of 10

Thread: அழகிருக்கு ஆடுகின்றாய்

                  
   
   
  1. #1
    இளையவர்
    Join Date
    12 Sep 2005
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    8,944
    Downloads
    0
    Uploads
    0

    அழகிருக்கு ஆடுகின்றாய்

    அழகிருக்கு ஆடுகின்றாய்


    நானழைக்க ஓடுகின்றாய்
    தேடிவர நாணுகின்றாய்
    திரும்பியதும் தேடுகின்றாய்
    நானிருக்க எழும்புகின்றாய்
    நானெழும்ப விலகுகின்றாய்
    பார்த்திருக்க மறைகின்றாய்
    மறைந்திருக்க பார்க்கின்றாய்
    கூடல் கொள்ள மறுக்கின்றாய்
    கூடிவரக் கேட்கின்றாய்
    என் இதயம் அழிக்கின்றாய்
    உன்னை அழகாக்குகின்றாய்
    அழகிருக்கு ஆடுகின்றாய்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சமன் தேடும் சீசாப் பலகை ஆட்டம் இது...
    சுவாரசியங்களுக்கு குறைவில்லை..

    திருகனகா பாணியில் இன்னொரு கவிதை...
    பாராட்டுகள் நண்பரே..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வாவ் அருமை.... ஆடும் ஆட்டதிற்கு.. இப்படி பட்ட வரிகளா.. வெகு அருமை.... தொடருங்கள் தங்கள் பாணியில்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    அருமையான வரிகள்... அக்காலம் முதல் இக்காலம் வரை ஒரே ஆட்டம் தான்........
    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    இளையவர்
    Join Date
    12 Sep 2005
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    8,944
    Downloads
    0
    Uploads
    0

    நான் ஒரு வான்கோழி

    கவிதை நடைகள் பிழையாக இருந்தால் தயவு செய்து எழுதுங்களெனக்கு படித்து வரவில்லை .நான் ஒரு வான்கோழி.மற்றவர்களைப் பார்த்து நானும் முயல்கிறேன்.உங்கள் ஒத்துழைப்பு என் முதுகெலும்பு

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    எல்லா கவிதைகளும் ஒரே விதமான வடிவத்தையே கொண்டிருக்கிறது. வடிவத்தை கட்டி எழுப்பி விட்டு வார்த்தைகளை அடுக்குவது போல இருக்கிறது. சிந்தனைகள் சிறப்பானவை என்றாலும் தாங்கி வரும் மொழி மிகப் பழைய வடிவமாகவே உங்கள் கவிதைகள் இருக்கிறது. நீங்கள் மன்றத்தில் புதிதாக எழுதுவதால் கவிதைகளை அவ்வளவாக விமர்சிக்கவில்லை..

    நீங்கள் எழுதுவது திரைப்படங்களுக்கு, அதாவது மெட்டுக்கு பாட்டு எழுதுவதைப் போன்றது. அதுவும் ஒருவகையான கவிதை வடிவம்தான் என்றாலும் முழுமையான, நிறைவான கவிதை வடிவமாக அதை கருதுவதில்லை

    என்றும் அன்புடன்
    பிரியன்

  7. #7
    இளையவர்
    Join Date
    12 Sep 2005
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    8,944
    Downloads
    0
    Uploads
    0

    அன்புடன் திருகனகா

    மிகவும் நன்றி.நான் இங்கு தமிழர்களுடன் கலந்துரையாட முடியாது.அவர்களைக்காண்பது அரிது.அதிலும் படித்தவர் அரிது.என் சிந்தனைகள் என்னோடு எவரும் கேட்பதில்லை.தமிழ் நூல்கள் இங்கில்லை.எனக்கு கவிதை எப்படி எழுதுவது என்று ஒரு உதாரணம் தாருங்கள்
    பழகுகிறேன்
    நன்றி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by thirukanaga
    மிகவும் நன்றி.நான் இங்கு தமிழர்களுடன் கலந்துரையாட முடியாது.அவர்களைக்காண்பது அரிது.அதிலும் படித்தவர் அரிது.என் சிந்தனைகள் என்னோடு எவரும் கேட்பதில்லை.தமிழ் நூல்கள் இங்கில்லை.எனக்கு கவிதை எப்படி எழுதுவது என்று ஒரு உதாரணம் தாருங்கள்
    பழகுகிறேன்
    நன்றி
    அன்பரே.. தமிழ் மன்றத்தில் மற்றவர்களின் கவிதை பாடல்களை படியுங்கள்.. சிறந்தவர்கள் பலர் இருக்கின்றனர். எல்லாவிதமான ரசனையும் பார்க்கலாம் நீங்கள்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    அன்பு நண்பர் திருகங்காவிற்கு.

    தங்களின் கவிதைகள் குறித்தான எனது கருத்துக்குப்பின் உங்களிடமிருந்து புதிய கவிதைகள் ஏதும் வராதது எனக்கு வருத்தத்தை தருகிறது. உங்களின் சுழலை சொன்ன பிறகு நான் தங்களை காயப்படுத்திவிட்டேனோ என எண்ணத் தோன்றுகிறது. வடிவத்தை பற்றி கவலை வேண்டாம். தொடர்ந்து எழுதும் போது தன்னால் வந்து விடும். மன்றத்தில் இருக்கும் பல தரப்பட்ட கவிதைகள் உங்களுக்கு உதவக்கூடும். கவலையை விட்டு தொடர்ந்து எழுதுங்கள். எழுதிக்கொண்டிருங்கள்..

    வாழ்த்துகளுடன்
    பிரியன்

    என்றும் அன்புடன்
    பிரியன்

  10. #10
    இளையவர்
    Join Date
    12 Sep 2005
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    8,944
    Downloads
    0
    Uploads
    0

    நன்றி

    எனக்கு நேரமிலாமையாலன்றி உங்கள் கருத்துக்களால் நான் எழுதாமல் விடவில்லை
    தீட்டதீட்ட வரும் கூர்மை
    திருத்ததிருத்த வரும் திறமை

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •